Search This Blog

வியாழன், 31 அக்டோபர், 2013

ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா? - புரொஜக்டர் - அனுபவம்




சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 




1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.



தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 


இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார். **********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....
ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்


ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா?


சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 


1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார்.

**********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....



ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை - திருவாரூர் சோழா 29 ஆண்டு



இது சினிமா விமர்சனம் அல்ல. பழைய நினைவுகளின் தொகுப்பு மட்டுமே. இன்று காலை பேருந்து நிலையம் செல்லும் வழியில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் சுட்டகதை, நடேஷ் தியேட்டரில் முத்துநகரம், சோழாவில் ரவுடி கோட்டை ஆகிய போஸ்டர்களை பார்த்தேன். அடுத்த வாரம் தீபாவளி. நடேஷ் - ல் ஆல் இன் ஆல் அழகுராஜா, (ஆல் இன் ஆல் - வார்த்தையை சென்சார்காரங்க கிட்ட காட்டுவாங்களா மாட்டாங்களா?) சோழாவில் பாண்டியநாடு ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று நாளிதழ் விளம்பரங்கள் வந்துவிட்டன. மிச்சம் இருப்பது ஒரு தியேட்டர். தைலம்மை. இந்த தீபாவளி ரிலீசில் மீதமிருப்பது ஆரம்பம் (அக். 31 ரிலீசாம்) அநேகமாக இதுதான் அந்த தியேட்டரில் ரிலீசாகக்கூடும். (எவ்வளவு கஷ்டமான கண்டுபிடிப்பு)



தீபாவளிக்கு முதல்நாள் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருவாரூர் சோழா தியேட்டர் திறப்புவிழா என்று தியேட்டர் கல்வெட்டில் எப்போதோ பார்த்த நினைவு. அப்படியென்றால் இன்று திருவாரூர் சோழா தியேட்டரின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா. எனக்கு அப்போ நாலு வயது முடிந்து 5ஆம் வயது ஆரம்பம். சோழா தியேட்டரில் முதல் படமாக முதல் மரியாதை.  அந்த படம் பார்க்க போனது நினைவில் இருக்கிறது. (பள்ளிக்கூடத்துல படிச்சது இருக்கட்டும். பத்து வருசத்துக்கு முன்னால காலேஜ்ல படிச்சது கூட நினைவில் இல்லை.)



பூவிழி வாசலிலே, விக்ரம், வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், மன்னன், எஜமான், ஜென்டில்மேன், இந்து, வில்லாதி வில்லன், முத்து, சூரிய வம்சம், படையப்பா போன்ற பல படங்களை அந்த திரையரங்கில் பார்த்தது நினைவில் இருக்கிறது. இவற்றில்  வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், சூரியவம்சம், படையப்பா படங்களின் வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் ஆறு. அதுவும் அப்போதுதான் Dts வைத்தார்கள் என்பதற்காக போனேன்.



1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள்.



தியேட்டர் வாசலிலும் அந்த சிற்பம் உண்டு. சுருங்கிக்கொண்டே வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்திரையில் அந்த பிம்பம் விழுவதை பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது கேட்ட அந்த மியூசிக்கை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை. அவ்வை சண்முகி படத்தில் வேலை.... பாடல் தொடங்குவதற்கு முன்பு லீட் மியூசிக் ஒன்று வரும். அதுதான் ஓரளவு அந்த பழைய மியூசிக்கோடு ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன். சரியாக அந்த கேசட்டை போட்டுவிட்டு நாலைந்து நொடிகள் கழித்து ஒரு குறிப்பிட்ட சவுண்ட் வரும்போது 15 கலர் பல்ப்புகள் எரிய வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்பும். 3 ஆம் வகுப்பு டிக்கெட்டுக்கு போனால் லேட்டாகத்தான் உள்ளே விடுவார்கள் என்று இதற்காகவே கூடுதல் கட்டண டிக்கெட் எடுத்துப்போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன்.



இதெல்லாம் 1994 வரைதான். அந்த ஆண்டு நம்மவர் படம் தீபாவளி ரிலீஸ். அப்போதுதான் ஸ்கிரீன் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களை மாற்றினார்கள். அப்போதெல்லாம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் கூட தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும். அப்போது காலைக்காட்சியில் மேலே நிறுத்தப்படும் ஸ்கிரீன் இரவுக்காட்சி வரை இறங்காது. அதனால் இந்த மியூசிக் கேட்க வாய்ப்பில்லை. அது தவிர பெரும்பாலும் காலைக்காட்சி முடிந்து மதியக் காட்சி 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் திரையிடப்பட்டுவிடும் என்பதால் அப்போதும் வெல்வெட் ஸ்கிரீன் மியூசிக் கேட்க வேலையில்லை. இதனால் மதியக் காட்சி போக நான் விரும்புவதில்லை.



பல நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று ஸ்கிரீனை மேலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். தியேட்டருக்குள் நுழையும் நான், அடப்பாவிகளா... இதை எல்லாம் முன்னாலேயே சொல்ல மாட்டீங்கிளா என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்ததுண்டு. அப்படி நான் 1994 தீபாவளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளை என்ற படத்துக்கு போனபோது காதலன் படத்தில் முக்காபலா, புன்னகை மன்னன் படத்தில் காலம் காலமாக நாங்கள்... மற்றும் சத்யா படத்தின் வளையலோசை கலகலவென்று பாடல்களை ஃபுல் சவுண்ட் வைத்து பாடவிட்டு அப்போதே ஸ்கிரீனை ஏற்றி விடுவார்கள்.பிறகு நியூஸ் ரீல் ஓடும்.



என்னுடைய 15வது வயதில் 1996 ஆம் ஆண்டு வேறு இரண்டு தியேட்டர்களில் பள்ளிக்கு போன நேரம் போக மீதி நேரத்தில் ஆப்ரேட்டர் உதவியாளராக போயிருக்கிறேன். அப்போது நானே திரைப்படக்கருவியை இயக்கி முழு படத்தையும் திரையிட்ட காலத்தில் இப்படி மியூசிக் போட்டு ஸ்கிரீனை மேலேற்ற சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.



  






ஏனென்றால் நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் வெண்திரைக்கு முன்னால் இருக்கும் வெல்வட் ஸ்கிரீன் கிடையாது. மற்றொரு தியேட்டரில் உதவியாளராக இருந்தபோது, ரொம்ப சாதாரண மியூசிக் கேசட் போடப்படுவதால் ஆப்ரேட்டரிடம் சொல்லி, அதெல்லாம் எதுவும் வேணாம். பாட்டு ஓடும்போதே ஆடிட்டோரிய லைட்டை ட்ரிம் பண்ணிட்டு ஸ்கிரீனை ஏத்திடுங்க என்று வழக்கத்தை மாற்றிவிட்டேன். அவர் முதலில் தியேட்டர் முதலாளி எதுவும் திட்டுவார் என்று பயந்தார். படம் ஓடும்போது லைட், சவுண்ட் ஒழுங்கா தரலைன்னாதான் திட்டுவாங்க. அந்த வேலையை சரியா செய்வோம் என்று பெரிய மனுசன் தோரணையில் கூறியதாக நினைவு. (முதலாளிகளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இது மாதிரியான சின்னவிசயங்களை கவனிக்க வாய்ப்பு குறைவு என்ற துணிச்சலில்தான் அப்படி கூறினேன் என்று நினைக்கிறேன்.)



கடைசியாக நான் முழுப்படத்தையும் திரையிட்டது மற்றொரு தியேட்டரில் ஆனந்தப்பூங்காற்றே என்ற படம். பகல் காட்சிகளை திரையிட வரவேண்டிய ஆப்ரேட்டர் ஒருவர் தொடர் லீவு எடுத்ததால் பல தினங்கள் நான் காலை, மதியக் காட்சிகளை திரையிட்டிருக்கிறேன். 48 நாட்கள் ஓடியது அந்த படம். அதே நேரத்தில் சோழாவில் படையப்பா படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாம் நான் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பிளஸ்டூ தேர்வு எழுத முயற்சி செய்த நேரம்.



அப்போது 5 தியேட்டர்களிலும் புதுப்படங்கள் வெளியாகும். இப்போது போல் ஒரே படம் மூவாயிரம், நாலாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் காலம் அல்ல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் 1997 பிப்ரவரியில் ரிலீசானது. ஆனால் திருவாரூர் சோழாவில் தமிழ் வருடப்பிறப்புக்குதான் வெளியானது. திருச்சி ஏரியாவில் ஆறு பிரிண்ட் மட்டுமே போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். திருச்சி, தஞ்சாவூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை - இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்.



அவ்வளவு ஏன்? 1998 அல்லது 1999 என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு பத்து நாட்கள் இருந்ததால் பாட்ஷா படத்தை நடேஷ் தியேட்டரில் திரையிட்டார்கள். அப்போதும் நல்ல கூட்டம். தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்தால் ஏழெட்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிடும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எந்த தியேட்டருக்கும் கவலை இருக்காது. வரிசையாக படங்கள் கிடைக்கும்.



அதேபோல் 1996 தேர்தல் சமயத்தில் நான் 9ஆம் வகுப்பு விடுமுறையில் பணியாற்றிய தியேட்டரில் நாயகன் படம் திரையிட்டோம். மூன்று நாட்கள் பெரிய வசூல்.



இப்போ எல்லாம் பல தொலைக்காட்சிகளிலும் படங்களை ரீல் அறுந்து போகும் அளவுக்கு (ஹார்டு டிஸ்க் பேட் செக்டார் ஆகும் அளவுக்கு) திரும்ப திரும்ப போடுகிறார்கள். அப்படியும் வேறு வழி தெரியாமல் ஒரு தொலைக்காட்சியில் சனிக்கிழமை வரை சீரியல் போடத்தொடங்கிவிட்டார்களாம். பல வீடுகளில் கணவன், மனைவியர் சனி, ஞாயிறு ஆகிய ரெண்டு நாளாச்சும் முகம் கொடுத்து பேசிகிட்டு இருந்தாங்க. அது பொறுக்காம இப்போ அதுலயும் ஒரு நாளைக்கு வேட்டு வெச்சுட்டாங்க.



இப்போது தீபாவளிக்கு 8 நாட்கள் இருக்கும்போது மூன்று படங்கள் சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை (ஒன்று டப்பிங்) ரிலீசாகிறது. அந்த அளவுக்கு சிறிய படங்களுக்கு தியேட்டர் பஞ்சம் ஆகிவிட்டது. இன்று காலையில் புதுப்பட போஸ்டர்களை பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான்.



****************************************

இணையத்தில் தேடியபோது திருவாரூர் சோழா தியேட்டரின் ஒளிப்படம் கிடைத்தது. 2003 பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக (நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது) விக்ரம்-ஜோதிகா நடித்த "தூள்'' படம் ரிலீசானது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. பிளக்ஸ் கலாச்சாரம் சின்ன ஊர்களுக்கு வரும் முன்பு பெரிய படங்கள் ரிலீசாகும்போது மட்டும்தான் இப்படி கையால் வரைந்த பேனர்கள் தான் தியேட்டர்களில் வைக்கப்படும். கிட்டத்தட்ட அந்த நடிகர் மாதிரியே வரைஞ்சிருக்காங்களே என்பது அந்த வயது மற்றும் அந்த காலகட்ட ஆச்சர்யம். இப்போது ஒளிப்படங்களை வைத்து பிளக்ஸ், அழைப்பிதழ்கள் டிசைனிங் செய்வதும் என்னுடைய தொழிலின் ஒரு பகுதியாகிப்போனதும் காலத்தின் மாற்றமே.



சினிமா நூற்றாண்டுவிழா அரசியலைப்பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. ஆனால் இந்த நேரத்தில் வேறொரு பழைய தொழில்நுட்பத்தை ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஜெமினி கலர்லேப் நிறுவனத்தின் பிலிம் பிராசசிங் செக்சன் மூடப்பட்டுவிட்டதாக செய்தி படித்தேன். ஷ­ங்கர் இயக்கும் ஐ படம்தான் பிலிமில் தயாராகும் கடைசி தமிழ்ப்படம் என்றும் கூறுகிறார்கள். இப்போது தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டல் புரொஜக்சன் முறைக்கு மாறிவிட்டது அனைவருக்கும் தெரியும். 





சவுண்ட் சிஸ்டத்தில் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் இருந்து வந்தது. ஆனால்  வெளிச்சத்துக்கு  கார்பன் போய் பவர்புல் மின்விளக்குகள் வந்தாலும் சினிமா கண்டறியப்பட்ட காலம் முதல் பிலிம் சுருளை புரொக்டரில் பொருத்தி திரையிடும் தொழில் நுட்பம் சுமார் 80 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் 2000க்கு பிறகுதான் அதிகமாக டிஜிட்டலில் திரையிடும் வசதிகள் பெருக ஆரம்பித்தன.



வெஸ்ட்ரெக்ஸ், போட்டோபோன் ஆகிய புரொஜக்டர்கள்தான் நான் கையாண்டவை. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனை தியேட்டர்களில் இந்த புரொஜக்டர்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. அப்படி இருப்பவற்றை புகைப்படம் எடுத்து அந்த தொழில் நுட்பத்தையும் என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து கட்டுரையாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது சாத்தியப்படுத்த முயற்சிக்கிறேன். அப்படி செய்ய முடிந்தால் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்த விசயத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இதுவும் சிறிய பங்களிப்பாக இருக்கக்கூடும்.





------------------------------------









பிரசாத், ஜெமினியில் ஆட்குறைப்பு டிஜிட்டலுக்கு மாறியாச்சு தமிழ் சினிமா ஃபிலிமில் வெளிவரும் கடைசி படம் ஐ



சென்னை : டிஜிட்டல் மயம் காரணமாக பிரபல சினிமா நிறுவனங்களான பிரசாத் மற்றும் ஜெமினி லேப்பில் பிராஸசிங் ஸ்டூடியோ மூடப்படுகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக நம்மை மகிழ்வித்த சினிமா பிலிம், இப்போது மலையேறப் போகிறது. புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் கேமரா வந்த பின் பிராஸசிங் வேலைகள் தேவையில்லை என்பதால் லேப்கள் மூடப்படுகின்றன.



சினிமா பிலிமில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஓக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்கள் போட்டியின் காரணமாக, ‘டிஜிட்டல் வேஸ்ட்’ என்ற பிரசாரமும் ‘பிலிம்தான் பெஸ்ட்’ என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. அது பழங்கதை ஆகிவிட்டது. இப்போது பிலிமை விட்டுவிட்டு உலகம் முழுவதும் டிஜிட்டலில் படம் எடுக்க முன் வந்துவிட்டனர். இதையடுத்து ஆரி, வேறு வழியின்றி அலெக்ஷா என்ற டிஜிட்டல் கேமராவை களமிறக்கியது.



தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வருடத்தோடு பிலிமுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளனர்.








இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டலுக்கு சினிமா மாறிவிட்டது. இங்கும் 90 சதவிகித படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரசாத் லேபில் பிராஸசிங் வேலைகள் குறைந்துவிட்டதால், அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டனர். இதே போல ஜெமினி லேப்பிலும் ஆட்குறைப்பு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயா லேப் மூடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.



‘பிலிமில் படம் எடுக்கப்படுவது இன்னும் குறையவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘ஜன்னல் ஓரம்’, ‘பாண்டிய நாடு’ உட்பட பல படங்கள் பிலிமில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் படங்கள் பிலிமில் எடுக்கப்பட இருக்கின்றன. ஆனால், தியேட்டர் புரொஜக்சன் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் பார்மெட்டுக்கு மாற்றப்படும்’ என்றார் பிராசஸிங்கில் பணியாற்றும் ஒருவர்.



இன்டஸ்ட்ரியில் உள்ள இன்னும் சிலர், ‘இனி டிஜிட்டல்தான் என்பதை சொல்லி வந்தோம். இப்போது அது உறுதியாகிவிட்டது. பிலிமில் ரிலீஸ் ஆன சமீபத்திய படம், சசி இயக்கிய ‘555’. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘ஐ’ தான், பிலிமில் எடுக்கப்படும் கடைசி படம்’ என்று கூறுகின்றனர். ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுக்க, அது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள அச்சப்படும் அல்லது ஆர்வமில்லாதவர்கள்தான் பிலிம் சிறந்தது என்று கூறுகின்றனர். ‘கண்களால் பார்க்கப்படும் துல்லியத்தை திரையில் காட்ட முடியும்’ என்றுதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது.



அது நிறைவேறிட்டது. டிஜிட்டலுக்கு முன் சினிமா, ஒளிப்பதிவாளர் வசம் இருந்தது. இப்போது இயக்குனர் வசம் வந்திருக்கிறது. இனி டிஜிட்டல் உலகம்தான். அதற்கு புஜி உட்பட சில பிலிம் நிறுவனங்கள் மூடப்பட்டதே சாட்சி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.



டிஜிட்டல் மயம் காரணமாக, வாங்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சினிமா கேமராக்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. பிலிமில், நெகட்டிவ்வை கொடுத்து பைனான்ஸ் வாங்கும் நிலை இருந்தது. டிஜிட்டல் வந்துவிட்டதால் அதற்கு யாரும் பைனான்ஸ் கொடுக்க முன் வருவதில்லை என்கிற நிலை இப்போது இருந்து வருகிறது.