Search This Blog

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

திருவாரூர் – மருதம்பட்டினம் – ஆழித்தேர் – திருவிழா







கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிதிலமடைந்திருந்த ஒரு சிவாலயத்தின் நுழைவாயில் மொட்டைக்கோபுரமாக இருந்த இடத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



ராணி வார இதழ் - 18-09-2005
தினமணி கதிர் - 20-11-2005
குமுதம் பக்தி ஸ்பெஷல் - பிப். 2006
தினத்தந்தி குடும்பமலர் - 02-07-2006
தினகரன் ஆன்மிக மலர் - 03-05-2008


 


திருவாரூரில் ஓடும் ஆழித்தேரின் பெருமைகள் நிறைய பேர் அறிந்ததுதான். அந்தத் தேர் திருவிழாவுக்கு பிள்ளயார் சுழி போடப்படுவது திருவாரூரை ஓட்டிய மருதம்பட்டினத்தில் உள்ள உள்ள அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கும்.


திருவாரூர் பெரிய கோயிலில் ஆழித்தேரோட்ட திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர், மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருவார். அங்கு பூமிக்குரிய பூஜைகள் முடிந்த பின்பு திருமண் எடுத்துச்சென்று முளைப்பாலிகை வளர்த்துதான் திருவாரூரின் பெரிய கோயிலில் கொடியேற்றம் நடைபெறும்.



தினமணி 30-08-2013





ஆலயம் உருவான காலம் உறுதியாக தெரியவில்லை. ஆலய அர்ச்சகருக்கு தெரிந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெற்றதில்லையாம். ஆனால் பஞ்ச பாண்டவர் ஐவரும் தனித்தனியே ஒரு லிங்கம் வைத்து பூஜித்த பெருமைக்குரிய தலம் இது என்று செவிவழிச்செய்திகள் உலா வருகின்றன.


அதில் ஒரு கதை,  

பஞ்ச பாண்டவர்களுக்குள் ஒரு முறை யார் அதிகமாக இறைவனை வழிபட்டது என்பதை அறிய விரும்பினார்கள். இறைவன் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு ஐவரையும் கயிலாயத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே ஒவ்வொருவரும் பூஜை செய்தபோது இறைவனுக்கு அர்ப்பணம் செய்ததை கொண்டு வந்து காட்டச்சொன்னார். நான்கு வண்டிகள் வந்தன. தருமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஒவ்வொரு வண்டியிலும் தனித்தனியாக எழுதி இருந்தது. பீமனுக்குரிய வண்டியை காணாமல் அனைவரும் திகைத்தார்கள்.





அப்போது இறைவன் பஞ்சபாண்டவர்கள மற்றொரு இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே கணக்கிட முடியாத அளவில் பூக்கள், பழங்கள் என்று என்னென்னவோ குவிந்து கிடந்தன. நால்வருக்கும் இவற்றைப்பார்த்ததும் அதிர்ச்சி. நாம் அடிக்கடி கோயிலுக்கு போவோம். யாகங்கள் செய்வோம். ஆனால் பீமன் இறைவனை வழிபட்டது மிகவும் குறைவு. பிறகு எப்படி இவ்வளவு புஷ்பங்கள், பழங்கள், இன்னபிற பொருட்கள் என்று குழம்பினார்கள்.





அவர்கள் ஐயத்தை போக்கும்விதமாக சிவபெருமான் பேசினார். "உங்களப்போல் பீமன் வழிபாடு செய்வதற்கு என்று தனியாக நேரம் பார்த்ததோ இடம் ஒதுக்கியதோ கிடையாது. ஆனால் ஒரு இடத்தில் பூவைப்பார்த்தாலோ அல்லது சோலையைப் பார்த்தாலோ அடுத்தநொடி, `ஓம் சிவாய நமஹ... அனைத்தும் உனக்கே சமர்ப்பணம்' என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகள பார்க்கப்போய்விடுவான். மேலும் சாப்பிடும் முன்பு ஒரு நொடி என்னை நினைப்பான். அதனால் அவனுக்கு கல்லும் நஞ்சும் கூட ஜீரணமாகும். இப்பொழுது உண்மை புரிகிறதா?'' என்றார் இறைவன்.





பீமன் ஒரு இடத்தில் அமர்ந்து வழிபட்டது மிகக் குறைவான இடங்களில்தான் என்று தெரிகிறது. அப்படிப்பட்ட அபூர்வமான இடங்களில் மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.





தஞ்சமடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவர் அபிமுக்தீஸ்வரர். பாண்டவர்கள் கவுரவர்களால் அஞ்ஞான வாசம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்த பிறகு நாடு விட்டு நாடு போய்க்கொண்டே இருந்தார்களாம். அப்போது ஐந்து பேரும் இணைந்து ஒரு இடத்தில் தனித்தனி லிங்கங்கள வைத்து வழிபட்ட தலம்தான் மருதம்பட்டினம். மூலவர் அபிமுக்தீஸ்வரர் சற்று பெரிய லிங்க ரூபத்தில் தரிசனம் தருகிறார். அந்த கருவறையைச் சுற்றி நான்கு மூலைகளிலும் தனித்தனி விமானத்துடன் நான்கு லிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக இரண்டு. மேற்கு முகமாக இரண்டு. இது அபூர்வமான அமைப்பாகும்.





மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் தற்போது முதலில் வரவேற்பது மூன்று நிலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம். திருப்பணிக்கு முன்பு இது மொட்டை கோபுரமாக இருந்தது.


அதனைக்கடந்து வெளிப்பிரகாரத்தினுள் நுழைந்தால் பிரமாண்டமான மகாமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் நந்திபகவான் வீற்றிருக்கிறார். பழைய ஆலயத்தில் நந்திபெருமானுக்கு மட்டும் சின்னதாக மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. நந்தியம்பெருமானிடம் உத்தரவு பெற்று கருங்கல் தூண் மற்றும் மேற்கூரையுடன் அமைந்த பழமையான மகாமண்டபத்தினுள் நுழைகிறோம். 









எதிரே மூலவர் அபிமுக்தீஸ்வரர் அருள் பொங்க காட்சி தருகிறார். வடக்கே அம்பாள் மதுரபாஷிணி தென்முகமாக தோற்றமளிக்கிறாள். தமிழில் தேன்மொழியாள், இனிமையான குரல்வளம் மிக்கவள் என்று பொருள். மூலவரையும் அம்பாளயும் தரிசித்து விட்டு வெளியே வரலாம். பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஏற்கனவே சிதிலமடைந்து பாழடைந்திருந்த மடப்பள்ளி நல்ல முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பிரகார வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கில் குருதெட்சிணாமூர்த்தி தரிசனம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறும்.





பிரகாரத்தின் மேற்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலெட்சுமி சந்நதிகள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன.  மூலவர், அம்பாள் விக்ரஹகங்களும், நன்கு லிங்கங்களும் சமமாக ஒரே உயரமுள்ள கருங்கல் பீடத்தில் அமைந்துள்ளன.





திருக்கார்த்திகைக்கு சுப்பிரமணியர் சுவாமி வீதி உலாக்காட்சி உண்டு. பிரதோஷ வழிபாடும், மாசி மாத சிவராத்திரியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பழமையான இந்த ஆலயம் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருந்த நிலை மாறி முற்றிலும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.





பாண்டவர்களின் வேதனை தீர்த்த இந்த தலத்தை நாடி வந்தவர்கள் அனைவரது துயங்களயும் போக்கும். நம்பி வந்தோருக்கு நலம் யாவும் நல்கும் இறைவன் இத்தல நாயகர்.

















































திருவாரூர் பெரிய கோயிலுக்கு கிழக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்மயிலாடுதுறை இருப்புப்பாதையை கடந்ததும் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிலிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.







30-08-2013 தினமணி வெள்ளிமணியில் வெளிவந்த மருதம்பட்டினம் ஆலய கும்பாபிஷேக செய்திக்கு லிங்க் 







பணிச்சுமை காரணமாக எல்லா புகைப்படங்களையும் பதிவேற்ற இயலவில்லை. கும்பாபிஷேக விழா முடிந்ததும் அதிகமான கோணங்களில் ஆலயத்தின் புகைப்படங்களை பதிவிடுகிறேன்.


திருவாரூர் – மருதம்பட்டினம் – ஆழித்தேர் – திருவிழா

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிதிலமடைந்திருந்த ஒரு சிவாலயத்தின் நுழைவாயில் மொட்டைக்கோபுரமாக இருந்த இடத்தில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ராணி வார இதழ் - 18-09-2005
தினமணி கதிர் - 20-11-2005
குமுதம் பக்தி ஸ்பெஷல் - பிப். 2006
தினத்தந்தி குடும்பமலர் - 02-07-2006
தினகரன் ஆன்மிக மலர் - 03-05-2008
 
திருவாரூரில் ஓடும் ஆழித்தேரின் பெருமைகள் நிறைய பேர் அறிந்ததுதான். அந்தத் தேர் திருவிழாவுக்கு பிள்ளயார் சுழி போடப்படுவது திருவாரூரை ஓட்டிய மருதம்பட்டினத்தில் உள்ள உள்ள அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் என்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கும்.
திருவாரூர் பெரிய கோயிலில் ஆழித்தேரோட்ட திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான தொடக்க நிகழ்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் உள்ள சண்டிகேஸ்வரர், மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருவார். அங்கு பூமிக்குரிய பூஜைகள் முடிந்த பின்பு திருமண் எடுத்துச்சென்று முளைப்பாலிகை வளர்த்துதான் திருவாரூரின் பெரிய கோயிலில் கொடியேற்றம் நடைபெறும்.

தினமணி 30-08-2013

ஆலயம் உருவான காலம் உறுதியாக தெரியவில்லை. ஆலய அர்ச்சகருக்கு தெரிந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெற்றதில்லையாம். ஆனால் பஞ்ச பாண்டவர் ஐவரும் தனித்தனியே ஒரு லிங்கம் வைத்து பூஜித்த பெருமைக்குரிய தலம் இது என்று செவிவழிச்செய்திகள் உலா வருகின்றன.
அதில் ஒரு கதை,  
பஞ்ச பாண்டவர்களுக்குள் ஒரு முறை யார் அதிகமாக இறைவனை வழிபட்டது என்பதை அறிய விரும்பினார்கள். இறைவன் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு ஐவரையும் கயிலாயத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே ஒவ்வொருவரும் பூஜை செய்தபோது இறைவனுக்கு அர்ப்பணம் செய்ததை கொண்டு வந்து காட்டச்சொன்னார். நான்கு வண்டிகள் வந்தன. தருமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஒவ்வொரு வண்டியிலும் தனித்தனியாக எழுதி இருந்தது. பீமனுக்குரிய வண்டியை காணாமல் அனைவரும் திகைத்தார்கள்.

அப்போது இறைவன் பஞ்சபாண்டவர்கள மற்றொரு இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கே கணக்கிட முடியாத அளவில் பூக்கள், பழங்கள் என்று என்னென்னவோ குவிந்து கிடந்தன. நால்வருக்கும் இவற்றைப்பார்த்ததும் அதிர்ச்சி. நாம் அடிக்கடி கோயிலுக்கு போவோம். யாகங்கள் செய்வோம். ஆனால் பீமன் இறைவனை வழிபட்டது மிகவும் குறைவு. பிறகு எப்படி இவ்வளவு புஷ்பங்கள், பழங்கள், இன்னபிற பொருட்கள் என்று குழம்பினார்கள்.

அவர்கள் ஐயத்தை போக்கும்விதமாக சிவபெருமான் பேசினார். "உங்களப்போல் பீமன் வழிபாடு செய்வதற்கு என்று தனியாக நேரம் பார்த்ததோ இடம் ஒதுக்கியதோ கிடையாது. ஆனால் ஒரு இடத்தில் பூவைப்பார்த்தாலோ அல்லது சோலையைப் பார்த்தாலோ அடுத்தநொடி, `ஓம் சிவாய நமஹ... அனைத்தும் உனக்கே சமர்ப்பணம்' என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகள பார்க்கப்போய்விடுவான். மேலும் சாப்பிடும் முன்பு ஒரு நொடி என்னை நினைப்பான். அதனால் அவனுக்கு கல்லும் நஞ்சும் கூட ஜீரணமாகும். இப்பொழுது உண்மை புரிகிறதா?'' என்றார் இறைவன்.

பீமன் ஒரு இடத்தில் அமர்ந்து வழிபட்டது மிகக் குறைவான இடங்களில்தான் என்று தெரிகிறது. அப்படிப்பட்ட அபூர்வமான இடங்களில் மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.

தஞ்சமடைந்தவர்களுக்கு அடைக்கலம் தருபவர் அபிமுக்தீஸ்வரர். பாண்டவர்கள் கவுரவர்களால் அஞ்ஞான வாசம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்த பிறகு நாடு விட்டு நாடு போய்க்கொண்டே இருந்தார்களாம். அப்போது ஐந்து பேரும் இணைந்து ஒரு இடத்தில் தனித்தனி லிங்கங்கள வைத்து வழிபட்ட தலம்தான் மருதம்பட்டினம். மூலவர் அபிமுக்தீஸ்வரர் சற்று பெரிய லிங்க ரூபத்தில் தரிசனம் தருகிறார். அந்த கருவறையைச் சுற்றி நான்கு மூலைகளிலும் தனித்தனி விமானத்துடன் நான்கு லிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக இரண்டு. மேற்கு முகமாக இரண்டு. இது அபூர்வமான அமைப்பாகும்.

மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் தற்போது முதலில் வரவேற்பது மூன்று நிலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரம். திருப்பணிக்கு முன்பு இது மொட்டை கோபுரமாக இருந்தது.
அதனைக்கடந்து வெளிப்பிரகாரத்தினுள் நுழைந்தால் பிரமாண்டமான மகாமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் மையத்தில் நந்திபகவான் வீற்றிருக்கிறார். பழைய ஆலயத்தில் நந்திபெருமானுக்கு மட்டும் சின்னதாக மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. நந்தியம்பெருமானிடம் உத்தரவு பெற்று கருங்கல் தூண் மற்றும் மேற்கூரையுடன் அமைந்த பழமையான மகாமண்டபத்தினுள் நுழைகிறோம். 


எதிரே மூலவர் அபிமுக்தீஸ்வரர் அருள் பொங்க காட்சி தருகிறார். வடக்கே அம்பாள் மதுரபாஷிணி தென்முகமாக தோற்றமளிக்கிறாள். தமிழில் தேன்மொழியாள், இனிமையான குரல்வளம் மிக்கவள் என்று பொருள். மூலவரையும் அம்பாளயும் தரிசித்து விட்டு வெளியே வரலாம். பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஏற்கனவே சிதிலமடைந்து பாழடைந்திருந்த மடப்பள்ளி நல்ல முறையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. பிரகார வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நதி உள்ளது. தெற்கில் குருதெட்சிணாமூர்த்தி தரிசனம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெறும்.

பிரகாரத்தின் மேற்கில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலெட்சுமி சந்நதிகள் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளன.  மூலவர், அம்பாள் விக்ரஹகங்களும், நன்கு லிங்கங்களும் சமமாக ஒரே உயரமுள்ள கருங்கல் பீடத்தில் அமைந்துள்ளன.

திருக்கார்த்திகைக்கு சுப்பிரமணியர் சுவாமி வீதி உலாக்காட்சி உண்டு. பிரதோஷ வழிபாடும், மாசி மாத சிவராத்திரியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பழமையான இந்த ஆலயம் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து இருந்த நிலை மாறி முற்றிலும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பாண்டவர்களின் வேதனை தீர்த்த இந்த தலத்தை நாடி வந்தவர்கள் அனைவரது துயங்களயும் போக்கும். நம்பி வந்தோருக்கு நலம் யாவும் நல்கும் இறைவன் இத்தல நாயகர்.












திருவாரூர் பெரிய கோயிலுக்கு கிழக்கில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்மயிலாடுதுறை இருப்புப்பாதையை கடந்ததும் சற்று தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்தும், பெரிய கோயிலிலிருந்தும் ஆட்டோவில் செல்லலாம்.


30-08-2013 தினமணி வெள்ளிமணியில் வெளிவந்த மருதம்பட்டினம் ஆலய கும்பாபிஷேக செய்திக்கு லிங்க் 


பணிச்சுமை காரணமாக எல்லா புகைப்படங்களையும் பதிவேற்ற இயலவில்லை. கும்பாபிஷேக விழா முடிந்ததும் அதிகமான கோணங்களில் ஆலயத்தின் புகைப்படங்களை பதிவிடுகிறேன்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

திருவாரூரில் திருவிழா



ஒரு குடும்பத்தில் நடைபெறும் விழாவாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமற்றதாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்த விழாவில் எதிர்பார்த்த கூட்டத்தை விட மிக அதிகமாகவே பக்தர்கள் கூடினர். ஒரு விழாவை நடத்துபவர்களுக்கு சந்தோஷமே அதைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்தான்.















இந்த கும்பாபிஷேக பணிகள் காரணமாக தொய்வடைந்திருந்த என் சொந்த அலுவல்களில் கவனம் செலுத்துவதால்  கும்பாபிஷேகம் குறித்த விரிவான பதிவை பின்னர் வெளியிடுகிறேன்.



நாளிதழ் செய்திக்கு அனுப்பிய வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.



திருவாரூர் திருமஞ்சனவீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம் புதுப்பித்து புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் வே.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.மூர்த்தி, என்.ராமு, தொழிலதிபர்கள் சக்தி மரவாடி பழனிகுமார், அமுதா ஏஜென்சி சந்திரசேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கைங்கர்ய பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.