Search This Blog

வியாழன், 11 ஜூலை, 2013

திருவாரூரில் விசேஷம் - வாய்ப்பிருப்பவர்கள் வந்துவிடுங்கள்



மனிதன் நிறைய கேட்க வேண்டும். கொஞ்சமாக பேச வேண்டும் என்பதால்தான் இரண்டு காதுகளும், ஒரு வாயும் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.



லேட்டஸ்ட்டா செல்போனில் கூட இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் செய்ய கட்டணம் என்ற சாதாரண வியாபார தத்துவம் கூட அதிகமாக பேசாதே என்று கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.



ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பதிவை மேலே தொடரவும்.




பிள்ளையார் உருவத்திற்கு யானையின் முகத்தை வைத்து, பெரிய காதுகள், வாயை மறைத்திருக்கும் தும்பிக்கை என்று உருவம் வரையறுக்கப்பட்டிருப்பது கூட அதிகம் பேசாதே என்ற தத்துவத்தைதான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அதிலும் யானையின் வாயை மறைத்து தும்பிக்கை முன் இருக்கும். அதாவது பேச்சை விட செயல் முக்கியம் என்ற கருத்துதானே இது. யானையின் தும்பிக்கையால் எவ்வளவோ பலமான காரியங்களை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.



பிள்ளையார் கடவுள் உருவத்தின் பின்னால் எண்ணற்ற கதைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. இணையத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த தளங்களின் சுட்டிகளை பிறகு தருகிறேன்.



வரும் ஞாயிறு 14-07-2013 அன்று திருவாரூர் நகரத்தில் இரண்டு ஆலயங்கள் புதுப்பித்து கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதலாவதாக ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவாரூரில் புகழ்பெற்ற ஆழித்தேர் நிலைகொண்டிருக்கும் கீழவீதியில் பிள்ளையார் தேருக்கு அருகில் மாணிக்கவல்லி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.



அடுத்ததாக திருவாரூர் திருமஞ்சனவீதியில் (ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 14.07.2013 ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



திருவாரூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வாய்ப்பிருக்கும் அனைவரும் கும்பாபிஷேக தரிசனம் செய்ய வருமாறு பக்தர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நான்குகால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு, கும்பாபிஷேகம் தரிசனம் செய்தால் 12 ஆண்டுகள் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.



அருள்மிகு பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 1973 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.



பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1

பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1



-------------------------------------------------------



திருவாரூரில் ஞான விநாயகர் ஆலயம் தீயணைப்புத்துறை மற்றும் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் முன் மண்டபம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2014ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.



--------------------------------------------------------








































































திருவாரூர் தேர் திருவிழா புகழ்பெற்றது என்று நிறைய பேருக்கு தெரியும். தேரோட்டம் நடைபெறுவதற்குரிய பங்குனி உத்திர திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னர் பூர்வாங்க பூஜைகள் சண்டிகேஸ்வரர் உற்சவர் முன்னிலையில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு தென் கிழக்கில் சுமார் ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் மதுரபாஷினி சமேத அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் நடைபெறும். ஆலயத்தின் மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி வெளி பிரகாரத்தில் நான்கு லிங்கங்களுடன் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள  இந்த ஆலயம் மிகப் பழமையாக சிதிலமடைந்து மொட்டை கோபுரத்துடன் காணப்பட்டது. மேலும் மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் தரைமட்டமாக இடிந்துவிட்டன. சுமார் 75 வயதாகும் அந்த ஆலய அர்ச்சகருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆலயத்தின் நிலை பற்றி ராணி, தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினகரன் ஆன்மீகமலர், தினத்தந்தி குடும்பமலர் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.





இறைவன் திருவருளால் அரசிடம் உரிய அனுமதி பெற்று சென்னையில் உள்ள பெரிய தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினர் திருப்பணி செய்து வருகிறார்கள். பைரவர், மகாலெட்சுமி, சுப்பிரமணியருக்கு மீண்டும் புதியதாக சன்னதிகள், வெளிப்பிரகாரத்தில் முன்மண்டபம், மொட்டை கோபுர நுழைவாயிலில் மூன்று நிலைகளில் புதிய ராஜகோபுரம் என்று சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.





அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விஜய வருஷம் ஆவணி 16ஆம் தேதி 01.09.2013 அன்று நடைபெற உள்ளது. இது பற்றி விரிவான பதிவு, புகைப்படங்களுடன் விரைவில் வெளிவரும்.


திருவாரூரில் விசேஷம் - வாய்ப்பிருப்பவர்கள் வந்துவிடுங்கள்

மனிதன் நிறைய கேட்க வேண்டும். கொஞ்சமாக பேச வேண்டும் என்பதால்தான் இரண்டு காதுகளும், ஒரு வாயும் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

லேட்டஸ்ட்டா செல்போனில் கூட இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் செய்ய கட்டணம் என்ற சாதாரண வியாபார தத்துவம் கூட அதிகமாக பேசாதே என்று கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பதிவை மேலே தொடரவும்.

பிள்ளையார் உருவத்திற்கு யானையின் முகத்தை வைத்து, பெரிய காதுகள், வாயை மறைத்திருக்கும் தும்பிக்கை என்று உருவம் வரையறுக்கப்பட்டிருப்பது கூட அதிகம் பேசாதே என்ற தத்துவத்தைதான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அதிலும் யானையின் வாயை மறைத்து தும்பிக்கை முன் இருக்கும். அதாவது பேச்சை விட செயல் முக்கியம் என்ற கருத்துதானே இது. யானையின் தும்பிக்கையால் எவ்வளவோ பலமான காரியங்களை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

பிள்ளையார் கடவுள் உருவத்தின் பின்னால் எண்ணற்ற கதைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. இணையத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த தளங்களின் சுட்டிகளை பிறகு தருகிறேன்.

வரும் ஞாயிறு 14-07-2013 அன்று திருவாரூர் நகரத்தில் இரண்டு ஆலயங்கள் புதுப்பித்து கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதலாவதாக ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவாரூரில் புகழ்பெற்ற ஆழித்தேர் நிலைகொண்டிருக்கும் கீழவீதியில் பிள்ளையார் தேருக்கு அருகில் மாணிக்கவல்லி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.

அடுத்ததாக திருவாரூர் திருமஞ்சனவீதியில் (ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 14.07.2013 ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருவாரூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வாய்ப்பிருக்கும் அனைவரும் கும்பாபிஷேக தரிசனம் செய்ய வருமாறு பக்தர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நான்குகால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு, கும்பாபிஷேகம் தரிசனம் செய்தால் 12 ஆண்டுகள் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.

அருள்மிகு பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 1973 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1
பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1

-------------------------------------------------------

திருவாரூரில் ஞான விநாயகர் ஆலயம் தீயணைப்புத்துறை மற்றும் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் முன் மண்டபம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2014ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

--------------------------------------------------------

















திருவாரூர் தேர் திருவிழா புகழ்பெற்றது என்று நிறைய பேருக்கு தெரியும். தேரோட்டம் நடைபெறுவதற்குரிய பங்குனி உத்திர திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னர் பூர்வாங்க பூஜைகள் சண்டிகேஸ்வரர் உற்சவர் முன்னிலையில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு தென் கிழக்கில் சுமார் ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் மதுரபாஷினி சமேத அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் நடைபெறும். ஆலயத்தின் மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி வெளி பிரகாரத்தில் நான்கு லிங்கங்களுடன் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள  இந்த ஆலயம் மிகப் பழமையாக சிதிலமடைந்து மொட்டை கோபுரத்துடன் காணப்பட்டது. மேலும் மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் தரைமட்டமாக இடிந்துவிட்டன. சுமார் 75 வயதாகும் அந்த ஆலய அர்ச்சகருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆலயத்தின் நிலை பற்றி ராணி, தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினகரன் ஆன்மீகமலர், தினத்தந்தி குடும்பமலர் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இறைவன் திருவருளால் அரசிடம் உரிய அனுமதி பெற்று சென்னையில் உள்ள பெரிய தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினர் திருப்பணி செய்து வருகிறார்கள். பைரவர், மகாலெட்சுமி, சுப்பிரமணியருக்கு மீண்டும் புதியதாக சன்னதிகள், வெளிப்பிரகாரத்தில் முன்மண்டபம், மொட்டை கோபுர நுழைவாயிலில் மூன்று நிலைகளில் புதிய ராஜகோபுரம் என்று சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விஜய வருஷம் ஆவணி 16ஆம் தேதி 01.09.2013 அன்று நடைபெற உள்ளது. இது பற்றி விரிவான பதிவு, புகைப்படங்களுடன் விரைவில் வெளிவரும்.

புதன், 12 ஜூன், 2013

12-06-2013 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம்

இது குறித்து நான் எழுதிய கதைக்கு 2500 ரூபாய் பரிசு கிடைத்தது. ராணி வார இதழும், தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 2006 ஆம் ஆண்டு மே மாத தலைப்பு - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெற்றோர் பங்கு.

அதற்கு நான் எழுதி அனுப்பிய சிறுகதை 2006 மே மாதத்துக்குரியதாக தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் பிரசுரமானது. இதை எழுதிய நானும் குழந்தை தொழிலாளியாக இருந்தவனே. ஆனால் யார் செய்த புண்ணியமோ படிப்பு நடுவில் ஒரு முறை தடைபட்டாலும் கல்லூரி வரை சென்று படிக்க முடிந்தது. ஆனால் பள்ளிப்பக்கமே செல்ல முடியாமல் இன்றும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாத அளவில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய முதல் காரணம், பெற்றோர்தான். அடுத்ததாக கொடுத்தவனே பறித்துக்கொண்டானே என்ற வார்த்தைகளுக்கேற்ப நடந்து கொண்டு ................ கடை நடத்தி .................. பானம் மூலம் யார் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னால் ஆட்டோ வரலாம். அல்லது வழக்கு பாயலாம்.

பெற்றோரை முக்கிய காரணம் என்று நான் சொல்லக்காரணம், வருமானம் இல்லை என்ற வாதம் ஒரு வகையில் சரி என்றாலும், இன்னொரு பக்கம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை நான் பார்த்த வரை மிக அதிகமாகவே இருக்கிறது. கட்டிடத்தொழிலாளி, வெல்டர், தச்சுவேலை, மின்சாரப்பணியாளர், பிளம்பர் என்று பல வேலைகளிலும் இருக்கும் ஆட்களில் வேலைத்திறன் மிக்கவர் மிக குறைவே. மற்றபடி இந்த வேலை பார்ப்பவர்கள் மனதில் இந்த தொழில் மீது உண்மையான ஆர்வத்துடன் செயல்பட்டால் சாப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு சற்றும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.

ஏற்கனவே இதை விட பலமடங்கு சம்பாதிப்பவர்களும் உரிய வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாததால் சேமிக்க வாய்ப்பு இல்லாமலும், முறையற்ற செலவுகள் செய்பவர்களுமாக இருக்கின்றனர். கல்வியின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியும். கல்வி என்றால் பாடப்புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பகுதிதான். மற்ற நூல்கள் வாசிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் நீதிக்கதைகள் வகுப்பும் விளையாட்டு வகுப்பும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

விளைவு - சுய நலத்தின் மறு வடிவமாக இன்றைய தலைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தவங்களுக்காக ஐயோ பாவம் என்று நான் கவலைப்பட்டால் அப்படியா என்று கேட்டுவிட்டு இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஆட்களைத்தான் நான் அதிகம் சந்திக்கிறேன். அதனால் நானும் இப்போது என்னை கண்ணாடி போல் மாற்றிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பது போல் சுய நல குணம் கொண்டவர்களைத்தான் நான் அதிகம் சந்திப்பதால் பல சமயங்களில் விரக்தியாக உணர்கிறேன். ஆனால் இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று செயல்படுவது எந்த இடத்தில் சாத்தியமோ, நமக்கு வருமானம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தாதோ...அந்த இடத்தில் மட்டுமே அப்படி நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மற்றபடி தன் காசு என்று கறாராக இருக்கும் நபர்களிடம் என் காசு என்று நானும் எனக்கு வரவேண்டிய பண விஷயத்தில் கவனமாக வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

சில கஷ்டமர்கள் என்னிடம் வந்து செல்லும்போது "கடைசியில் என்னையும் இப்படி ஆக்கிட்டாங்களே" என்று சினிமாவசனம் அடிக்கடி எப்போதாவது என் மைண்ட் வாய்சில் கேட்கும்.

-----------------------------------

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).

- இந்த தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நிஜத்தில் இப்படியா நடக்கிறது.

-----------------------------------

சின்ன புள்ளைங்க விஷயத்தை விட்டுடுவோம். நான் கல்லூரி முடித்து 8 வருஷத்துல பல இடத்துல வேலை பார்த்துட்டேன். அவனுங்க குடுக்குறதா சொன்ன காசை விட அதிகமாவே கூவிருக்கேன்.(ஐ மீன் உழைத்திருக்கிறேன்) இதை வெளி பார்ட்டிகிட்ட அந்த முதலாளி (அ) மேனேஜரே சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளம் ஒரு இடத்துலேயும் ஒழுங்கா வந்தது இல்லை.(தனியா ஒயரிங் வேலை பார்க்க போனப்பவும் இப்படித்தான் நடந்தது.)

ஆனால் இப்போ நான் (அ) நண்பர்கள் எங்களுக்கு ஆக வேண்டியதுக்கு நியாயமான அளவு சம்பளத்தை விட அதிகமா கொடுக்க தயாரா இருந்தும் ஆளுங்க 500 ரூபா வாங்குனா 200 ரூபாய்க்குதான் வேலை செய்யுறாங்க. ஆனா என் ராசிக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தா மொத்தமே 50 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் 5 இண்டால்மெண்ட்டுல.

அது சரி, வேலை பார்க்காம சம்பளம் வாங்குறதுக்கும், தனக்காக அடுத்தவன் உழைச்சு சம்பாதிச்சு தர்றதுக்கும் ஜாதகத்துல ஒரு அமைப்பு வேணும் போலிருக்கு.

---------------------------------
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 1
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 2
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 3
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 4