Search This Blog

வெள்ளி, 31 மே, 2013

1 மார்க்கில் மாநில அளவிலான சிறப்பிடத்தை தவற விட்ட திருவாரூர் மாவட்ட பள்ளிகள்



இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 9 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்களாம். அது தவிர 52 பேர் 497 மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் என்பதும் சாதனையே.



திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு மாணவர்கல் 495 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு மாநில அளவில் 496 மதிப்பெண் பெற்றால் 3ஆம் இடம் கிடைத்திருக்கும். 494 மார்க் ஏழு மாணவ மாணவிகளும், 493 மார்க் ஏழு மாணவ மாணவிகளும் பெற்றிருக்கின்றனர்.



செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டியலைப்பார்த்தால் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெயர்தான் அதிகம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் என்று ஆன பிறகு திரும்ப திரும்ப தேர்வெழுத வைப்பதுதான் இவர்கள் சிறப்பிடம் பெற காரணமாக இருக்கும் என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு தன் திறனை வெளிப்படுத்திதான் இந்த மார்க் வாங்கியிருக்கிறார்கள். வெறும் மனப்பாடம் மட்டும் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூறினால் சந்தோஷமே.



---------------------------------------

1995ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் என்பது சாரதா என்ற மாணவி பெற்ற 475 மார்க் என்று நினைக்கிறேன். (விவரம் தவறாக இருந்தால் மன்னித்து சரியானதை அளிக்கவும். பதிவில் திருத்திவிடுகிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்த சமயம். அந்த காலகட்டத்தில் ஜூன் 3ஆம் வாரத்தில்தான் 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவரும். இந்த மாநில முதல் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே 483 மார்க் வாங்கியிருக்கேன். என்னை விட அந்த அக்கா குறைச்சலாத்தான் வாங்கியிருக்காங்க என்று காமெடி செய்தது நினைவுக்கு வருகிறது.



கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்பில் 495 மதிப்பெண்களைத்தாண்டி எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறார்கள். இது 500ல் போய்தான் நிற்கும் (வேறு வழியில்லாததால்) என்று நினைக்கிறேன்.



எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வாய்ப்புகளும் வசதிகளும் என் தலைமுறையில் கிடைத்தது. இப்போது என் தலைமுறையில் எங்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போதைய தலைமுறைக்கு கிடைப்பது ஆரோக்கியமான விசயமே. உதாரணமாக நான் 1999ல் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுத முயற்சித்தபோது கருவூலத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தியவரின் அலட்சியத்தால் தாமதமாகி ஒரு ஆண்டு வீணாகிப்போனது. அப்போது வேறு வழியின்றி நான் 1999 செப்டம்பரில்தான் தேர்வு எழுதினேன். ஆனால் இப்போது அப்படி தவறு நடந்தால் தட்கல் முறையில் ஒரு வாரத்துக்கு முன்பு கூட விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமே.



இப்படி மாநில முதல் மதிப்பெண் 498ல் போய் நிற்பது மாணவர்களின் எல்லா திறனையும் உயர்த்தியிருந்தால் சந்தோசம்தான். ஆனால் உண்டு உறைவிடப்பள்ளிகளால் வெறும் மனப்பாடத்திறனை மையமாக்கி எடுத்த மதிப்பெண் என்றால் அது அந்த மாணவனுக்கும் சமுதாயத்துக்கும் அவ்வளவாக நன்மை பயக்காது. ஆனால் பணம் சம்பாதிக்க மார்க் மட்டும் போதும் என்பது பெற்றோரின் மனநிலையாகிவிட்டதால் இதில் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.

--------------------------

இந்த தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சில மாணவ மாணவிகள் உயிரை இழக்கும் தவறானமுடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். உயிர் இருந்தால் வானத்தையே வசப்படுத்தலாம். சரித்திரம் படைக்கலாம். உயிரை மாய்த்துக்கொண்டால் சம்மந்தப்பட்ட வீட்டில் கூட சில நாள் அல்லது சில மாத துக்கத்துடன் மறக்கப்பட்டுவிடுவார்கள். இதை பெற்றோரும் மாணவர், மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும்.










1 மார்க்கில் மாநில அளவிலான சிறப்பிடத்தை தவற விட்ட திருவாரூர் மாவட்ட பள்ளிகள்

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 9 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்களாம். அது தவிர 52 பேர் 497 மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் என்பதும் சாதனையே.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு மாணவர்கல் 495 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு மாநில அளவில் 496 மதிப்பெண் பெற்றால் 3ஆம் இடம் கிடைத்திருக்கும். 494 மார்க் ஏழு மாணவ மாணவிகளும், 493 மார்க் ஏழு மாணவ மாணவிகளும் பெற்றிருக்கின்றனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டியலைப்பார்த்தால் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெயர்தான் அதிகம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் என்று ஆன பிறகு திரும்ப திரும்ப தேர்வெழுத வைப்பதுதான் இவர்கள் சிறப்பிடம் பெற காரணமாக இருக்கும் என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு தன் திறனை வெளிப்படுத்திதான் இந்த மார்க் வாங்கியிருக்கிறார்கள். வெறும் மனப்பாடம் மட்டும் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூறினால் சந்தோஷமே.

---------------------------------------
1995ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் என்பது சாரதா என்ற மாணவி பெற்ற 475 மார்க் என்று நினைக்கிறேன். (விவரம் தவறாக இருந்தால் மன்னித்து சரியானதை அளிக்கவும். பதிவில் திருத்திவிடுகிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்த சமயம். அந்த காலகட்டத்தில் ஜூன் 3ஆம் வாரத்தில்தான் 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவரும். இந்த மாநில முதல் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே 483 மார்க் வாங்கியிருக்கேன். என்னை விட அந்த அக்கா குறைச்சலாத்தான் வாங்கியிருக்காங்க என்று காமெடி செய்தது நினைவுக்கு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்பில் 495 மதிப்பெண்களைத்தாண்டி எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறார்கள். இது 500ல் போய்தான் நிற்கும் (வேறு வழியில்லாததால்) என்று நினைக்கிறேன்.

எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வாய்ப்புகளும் வசதிகளும் என் தலைமுறையில் கிடைத்தது. இப்போது என் தலைமுறையில் எங்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போதைய தலைமுறைக்கு கிடைப்பது ஆரோக்கியமான விசயமே. உதாரணமாக நான் 1999ல் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுத முயற்சித்தபோது கருவூலத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தியவரின் அலட்சியத்தால் தாமதமாகி ஒரு ஆண்டு வீணாகிப்போனது. அப்போது வேறு வழியின்றி நான் 1999 செப்டம்பரில்தான் தேர்வு எழுதினேன். ஆனால் இப்போது அப்படி தவறு நடந்தால் தட்கல் முறையில் ஒரு வாரத்துக்கு முன்பு கூட விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமே.

இப்படி மாநில முதல் மதிப்பெண் 498ல் போய் நிற்பது மாணவர்களின் எல்லா திறனையும் உயர்த்தியிருந்தால் சந்தோசம்தான். ஆனால் உண்டு உறைவிடப்பள்ளிகளால் வெறும் மனப்பாடத்திறனை மையமாக்கி எடுத்த மதிப்பெண் என்றால் அது அந்த மாணவனுக்கும் சமுதாயத்துக்கும் அவ்வளவாக நன்மை பயக்காது. ஆனால் பணம் சம்பாதிக்க மார்க் மட்டும் போதும் என்பது பெற்றோரின் மனநிலையாகிவிட்டதால் இதில் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.
--------------------------
இந்த தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சில மாணவ மாணவிகள் உயிரை இழக்கும் தவறானமுடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். உயிர் இருந்தால் வானத்தையே வசப்படுத்தலாம். சரித்திரம் படைக்கலாம். உயிரை மாய்த்துக்கொண்டால் சம்மந்தப்பட்ட வீட்டில் கூட சில நாள் அல்லது சில மாத துக்கத்துடன் மறக்கப்பட்டுவிடுவார்கள். இதை பெற்றோரும் மாணவர், மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும்.


வியாழன், 30 மே, 2013

குத்துனது நண்பனா இருந்தா வெளியில சொல்லக்கூடாது





குட்டிப்புலி டைட்டிலைப் பார்த்து படத்தின் விமர்சனம் இருக்குமோன்னு வந்தவங்க அடுத்த பதிவுக்கு போயிடலாம். என்ன எழுதுறதுன்னு புரியாம சும்மா மொக்கைன்னு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஒண்ணுமே இல்லாத பதிவு இது.



குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது - சுந்தரபாண்டியன்ல வர்ற இந்த டயலாக் சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும். ரீல்ல வர்ற வசனத்தை நினைச்சு ரியல் லைஃப்ல பின்பற்ற நினைச்சா சுத்தி இருக்குறவய்ங்க சந்தோசமா ஒரு குழியைத் தோண்டி உங்களை புதைச்சுட்டு போய்கிட்டே இருப்பாங்க.



எனக்கு கொஞ்சம் விபரம் தெரியத்தொடங்கியது 1987தான். அதிலிருந்து 2000வரையிலான காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய் மற்றும் ஒரு சில நடிகர்களின் படங்களுக்குதான் ரசிகர் மன்றத்தினர் கட்அவுட், ஆர்ட்டிஸ்ட் பெயிண்டால் வரைந்த பேனர், போஸ்டர் என்று பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுவார்கள். தீபாவளி, பொங்கல் என்று முக்கிய நாட்களில் தியேட்டர் வாசலை வாழைமரமும் தோரணங்களும் அலங்கரிக்கும்.



அதன்பிறகு சமீப காலமாக சிறிய நகரங்களில் இந்த கலாச்சாரம் ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் ஸ்டுடியோக்கள் டிஜிட்டல் கேமராவுக்கு அதிகமாக மாறியவுடன் பிறந்தநாள், காதுகுத்து, சடங்கு, திருமணம் என்று பலவற்றிற்கும் சினிமா போஸ்டர்களைத் தாண்டி கலக்கலான போஸ் கொடுத்து பேனர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது கட்அவுட், கையால் எழுதிய பேனர் கலாச்சாரம்போய் முற்றிலும் டிஜிட்டல் பேனர்கள் ஆதிக்கம் அதிகரித்ததால் மீண்டும் திரைப்பட ரிலீஸ் திருவிழா போல் மாறியுள்ளது.



ஒவ்வொரு மனிதருக்கும் தான் தலைவனாக மதிக்கப்படவேண்டும் என்ற ஆசையை ஆழ்மனதிலேயே இருக்கும்போல தெரிகிறது. இப்போது சசிகுமாரின் ரசிகர் மன்றத்தினர் சசிகுமார் படத்துடன் தங்கள் படத்தையும் போட்டு 40 அடி உயரத்தில் பேனர், தியேட்டர் வாசலில் வாழைமரம் என்று தியேட்டரை திருவிழா நடைபெறும் இடமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தியேட்டருக்கு எதிரில் என் அலுவலகம் இருப்பதால் இதெல்லாம் கண்ணில் படுகிறது.

--------------------------

எதிரி இல்லன்னா வாழலாம். ஆனா வளரமுடியாது. எதிரியை அழிக்க நினைக்க கூடாது. ஜெயிக்க நினைக்கணும் என்று சுந்தரபாண்டியன் படத்தில் வரும் சில வசனங்களுடன் சசிகுமார் படத்திற்கு எதிரே விதவிதமாக ரசிகர்மன்றத்தினரும் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.



படிக்கிற புத்தகத்துலேயும் சரி, பார்க்குற சினிமாவுலேயும் சரி நல்ல பிகர் எல்லாம் சில்லரைப்பசங்களையேத்தான் லவ் பண்றாளுங்க என்று ஒருவன் அலுத்துக்கொள்ளும் வசனம்தான் இப்போது குட்டிப்புலி டீசரில் ஓடிக்கொண்டிருக்கிறது.



அங்காடித்தெரு மகேஷ் மாதிரி பையனும் ஹன்சிகா மாதிரி பொண்ணும் ஜோடியா போனதைப் பார்த்து இது ரெண்டு எட்டா அமைப்பா இருக்குமோன்னு ஒருத்தர் சொன்னார். எனக்கு விபரம் புரியலை. அவர்கிட்ட சந்தேகத்தை கேட்டுட்டோம். அதுக்கு அவர், பையன் பொண்ணு ஜாதகத்துல ரெண்டாமிடம், எட்டாமிடத்து அமைப்பை வைத்து ஒரு கணக்கு இருக்கு. அப்படி இருந்தாதான் எதிர்எதிர் துருவம் ஈர்க்கும்னுங்குற விதிப்படி எதிரும் புதிருமான ஆணும் பெண்ணும் வாழ்க்கையில இணைவாங்கன்னு சொன்னார். அந்த விளக்கத்தை நான் இங்க எழுதி வில்லங்கமாவே பேசுற ஒருசிலர்கிட்ட மாட்டிக்க விரும்பலை.

-----------------------------------------------

எதாச்சும் உருப்படியா எழுதலாம்னா ரெண்டு பிரபல பத்திரிகை செஞ்ச காரியத்தால பத்திரிகைக்கு எழுதுறதை சுத்தமா நிறுத்திடலாமான்னு தோணுது. ஒரு பிரபல வார இதழ்ல இருந்து ஆயிரக்கணக்குல எனக்கு வரவேண்டிய சன்மானத்தை தராம ஏமாத்துனதால இப்போ அந்த இதழுக்கு எதுவுமே எழுதுறது இல்லை.



நான் யோக்கியன்டான்னு சுயதம்பட்டம் அடிச்சுக்குற ரெண்டு பத்திரிகையில இருந்து என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல தொகை வரவேண்டியதை இன்னும் அனுப்பலை. நானும் எழுத்துப்பூர்வமா கடிதம் எழுதிப்பார்த்துட்டேன். மெயில் அனுப்பியும் பார்த்துட்டேன். நோ ரெஸ்பான்ஸ், போன்ல பேசவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்குறதா இருந்தா மட்டும்தான் போன்ல உங்களுக்கு மரியாதை கிடைக்கும். இல்லன்னா ஆபீஸ்ல உள்ள அத்தனை பேர்கிட்டயும் உங்க போன் கனெக்சனை கொடுத்து நீங்க சொல்ல வந்த விசயத்தையே மறக்க வெச்சு போன் பேலன்ஸ்ல ஒரு 100 ரூபாயையாவது காலிபண்ணிடுவாங்க.



இந்த லட்சணத்துல ஒரு குறிப்பிட்ட கட்டுரையை பிரசுரம் செய்யுறதுக்கு முதல் வாரம் பேசிய அந்த பத்திரிகை துணையாசிரியர் ஒருவர், உங்க எழுத்து நடை நல்லா இருக்கே. நீங்க தொடர்ந்து இதே மாதிரி எழுதலாமேன்னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். இப்போ அதுக்கு என் மைண்ட் வாய்ஸ் என்னன்னு தெரியுமா? நான் கட்டுரை அனுப்பிகிட்டே இருப்பேன் நீங்க கொடுக்க வேண்டிய சன்மானத்தை ஏமாத்திகிட்டே இருப்பீங்க. அப்படித்தானே.!



Image Credit : KollywoodNow

-----------------------------------------------

கடந்த 5 மாதமா என் தொழில் அனுபவத்துல சுத்தி இருக்குறவங்களும் உப தொழில்ல இருக்குறவங்களும் செய்யுறதையும், கொஞ்சம் கூட பொறுப்பில்லாம நடந்துக்குறதையும், நமக்கு நட்டம் ஏற்படுத்துறதையும் பார்க்கும்போது உழைப்பை வெறுக்குற அளவுக்கு வேதனைதான் மிஞ்சுது. (இதை தனிப்பதிவா எழுதுறேன்.) ஆனாலும் எங்கோ தூரத்துல தெரியுற வெளிச்சப்புள்ளியை நம்பி நம்ம கேரக்டரை மாத்திக்காம செயல்பட்டுகிட்டு இருக்கோம்.