Search This Blog

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கோவை தீ விபத்திற்கு யார் காரணம்



இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.




ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.



அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.



சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.



நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.



அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?



கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.



நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.



வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.



சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.



எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.



வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.

-----------------------------

2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.



ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

--------------------------------------

கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...



இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.


கோவை தீ விபத்திற்கு யார் காரணம்

இப்படி ஒரு கேள்வியை எழுப்பினால் வாழ்க்கை ஒரு வட்டம் என்ற அடிப்படையில் ஒருவர் விரல் மற்றொருவரையே சுட்டிக்காட்டும்.  இந்த விபத்து நேரத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை, காவலர்கள், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மனிதனின் திறமை அளவிடமுடியாதது. அது ஆக்கப்பூர்வமான காரியங்களுக்காகவும், பூகம்பம், வெள்ளம் போன்று எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களிலும் பயன்படுத்தப்படவேண்டும். உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தால் அங்கிருக்கும் மக்கள் தாங்களாகவே மிக சுலபமாக தப்பியிருக்க முடியும்.

ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? ரொம்ப அடிமட்டத்துல வாழ்றவன்தான் அவனுக்கு கிடைச்ச 6 அடி அகலமுள்ள இடத்தைக்கூட வீடா மாற்றி வாழ்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுறான்னா, வசதிபடைத்தவர்கள் கூட தீப்பெட்டியை அடுக்கியதுபோல பக்கத்து கட்டிடத்து சுவரின் மீது இவர்கள் சுவரையும் வைத்து பசைபோட்டு ஒட்டுனது மாதிரி கட்டுறாங்க.

அதோட நிறுத்துறாங்களா? இயற்கை காற்றோட்ட பாதையை தடுத்து நிறுத்திட்டு ஏசி மெசினை மாட்டி குளோபல் வார்மிங், மின் பற்றாக்குறை இப்படி பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாயிடுறாங்க. உண்மையில் சில இயந்திரங்களை பாலைவனத்திலும், பனிப்பொழிவு பிரதேசத்திலும் நார்மலான வெப்பநிலையில் வைத்திருக்கவே ஏசி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதாம். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? மனித உடம்பில் உள்ள உறுப்புக்கள் 34 டிகிரி என்ற வெப்பநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைக்குமாம். ஆனால் நாம் குளிர் அறையில் சுகமாக தூங்குவதாக நினைத்து நாட்டையும் நம் உடம்பையும் கெடுத்துவைத்துக்கொண்டிருக்கிறோம். இதுபற்றி விளக்கமாக எழுதினால் ஆயிரம் பக்கங்களை தாண்டிச்செல்லும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு ............ அலுவலகத்தில் கிளர்க் வேலை பார்க்கும் நபர் அந்த இருக்கையில் அமராமல் மேலதிகாரியின் மனைவிக்கு .............. வாங்கிக்கொடுக்கவோ அல்லது அந்த அதிகாரியின் மச்சானை ஊர்சுற்றிப்பார்க்க அழைத்துச்சென்றாலோ என்ன ஆகும்? அந்த அலுவலகத்தில் அந்த நபர் பார்க்க வேண்டிய வேலை தேங்கி விடும். (இதனால்தான் பல .......... அலுவலகங்களில் இன்று போய் அடுத்த வாரம் வாங்க என்ற வாசகம் பிரபலம்) நம் உடலிலும் நமக்கு தெரியாமலே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக கிட்னி இரவு நேரங்களில் தன்னுடைய வேலையை அவ்வளவாக செய்வதில்லையாம். அப்போ அது எந்த ஆபிசர் வீட்டு வேலையை பார்க்க போகுதுன்னு ஒரு சந்தேகம் வரலாம்.

நாம் கொசுக்கடி மற்றும் வெப்பத்துக்கு பயந்து அறையின் ஜன்னல் மற்றும் கதவு அனைத்தையும் சாத்தி விட்டு தூங்கும்போது அறையின் காற்றில் உள்ள ஆக்சிஜன் நாம் 10 நிமிடம் உயிர்வாழத்தேவையான அளவுக்குதான் இருக்குமாம். அதாவது அறைக்கு வெளியில் உள்ள காற்று உள்ளே வந்து உள்ளே உள்ள உஷ்ணக்காற்று (கார்பன்டை ஆக்சைடு கலந்தது) வெளியில் போவது தொடர்ச்சியாக நடந்தால்தான் நம் உடல் உறுப்புகளுக்கு பிரச்சனை பிரச்சனை இருக்காது. அதாவது ஒரு பணியாளர் அவரது இருக்கையில் அமர்ந்து அவருக்குரிய வேலையை செய்வார்.

அப்போ 10 நிமிசத்துல ஆக்சிஜன் தீர்ந்துட்டா நாம செத்தா போயிட்டோம். காலையில நல்லாத்தானே எழுந்திரிக்கிறோம்னு ஒரு சந்தேகம் வரலாம். மனித உடம்பு ஒரு அற்புதமான கூகிள். ஆக்சிஜன் காத்துல இல்லையா, அப்போ உடம்புல எங்க இருக்குன்னு தேடும்போது அது கண்ணுல கிட்னியில இருக்குற தண்ணியோட மூலக்கூறு H2O வை கவனிக்கும். உடனே மூளை கிட்னிக்கு ஒரு ஆர்டர் போட்டு, டேய் நீ சிறுநீர்ல உப்பை பிரிச்சது போதும். உடனே H2O-வுல ஆக்சிஜனை மட்டும் பிரிச்சு அனுப்பிவை அப்படின்னு ஆர்டர் போடும். அப்போ அது நீர்ல உப்பை பிரிச்சு சிறுநீர் வழியா அனுப்புற வேலை என்னாகும். உப்பு சேர்ந்து கட்டியாகும். கிட்னியில கல் சேர்றது எப்படின்னு புரியுதா?

கிட்னியில கல் சேர்றதுக்கு காரணம் கிட்னி ஒழுங்கா வேலை செய்யாம இல்லை. அது என்ன மனுசனா, அது செய்ய வேண்டிய வேலையை நிறுத்திட்டு ஆபிசருக்கும், அரசியல் வியாதிகளுக்கும் ஜால்ரா போடுறதுக்கு. கிட்னியை வேலை செய்ய விடாம தடுக்குறது மனுசன்தான். இப்படி உடம்போட ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய வேலையை செய்ய விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டு நாம யார்யாரையோ குற்றம் சொல்லிகிட்டு இருக்கோம்.

நூற்றாண்டு கண்ட வங்கி கட்டிடம் பிரமாண்டமா இருக்கும். கட்டிடத்தை சுற்றி சுமாரா 20 அடி காலியிடம் அந்தப்பகுதியில் மரங்கள். கட்டிடத்தின்  ஒவ்வொரு தளமும் சுமார் 14 அடி இருக்கலாம். பக்கவாட்டுல 6 அடி உயர ஜன்னல். லிண்டல் மட்டத்தை தாண்டி மேல்தள சீலிங்கை ஒட்டியும் பக்கவாட்டு சுவற்றில் சுமார் 2 அடி உயரம், 2 அடி அகலம் என்ற அளவில் வெண்டிலேட்டர். கட்டிடத்தை சுற்றி எல்லா பக்கமும் வெளியேற பாதை. இப்படி மின்விசிறிக்கு கூட அவ்வளவா தேவை இல்லாம, பகல்ல மின் விளக்கு தேவையே இல்லாம இருந்த இடம் இன்னைக்கு சுற்றிலும் கண்ணாடியை ஒட்டிகிட்டு சூரிய வெளிச்சம் மட்டுமல்ல வெளி காற்று கூட உள்ளே நுழைய முடியாம ஏசி இயந்திரத்தோட தன் தனித்தன்மையை இழந்துட்டு நிக்கிது.

வெளிநாட்டுக்காரங்க அவங்க நாட்டு சீதோஷ்ண நிலையினால் குளிர் தாங்காம வடிவமைச்ச கட்டிடங்களைப் பார்த்து நாம சூடுபோட்டுகிட்டே இருக்கோம். ஏப்ரல், மே மாதங்கள்ல நம்ம நாட்டுல சாதாரணமா ரோட்டுல நடந்துபோனா கூட நம்ம உடம்பு தீப்பிடிக்கும்போல இருக்கு. இந்த லட்சணத்துல அரசு அலுவலகங்கள் கூட காற்றோட்டமான சூழ்நிலையை விட்டுட்டு இப்படி ஏசி இயந்திரத்தோட மக்கள் உடல் நலத்தையும் கெடுத்துட்டு, ஒரு ஆபத்துன்னா தப்பிக்க வழி இல்லாத அளவுக்கு கேவலமான முறையில வடிவமைக்கப்படுது.

சட்டம் ஒரு வலை மாதிரி. அதுல சுறா, திமிங்கிலங்கள் மாட்டுவதே இல்லை. அப்பாவி சின்ன மீன்கள் மட்டுமே மாட்டுகின்றன என்று ஒரு வாக்கியம் உண்டு. இப்போது கட்டப்பட்டு வரும் வீடுகள், வணிக வளாகங்களை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. இடிந்து விழக் காத்திருக்கும் எங்கள் வீடு இருக்கும் மனையின் அகலம் 18 அடி இருக்கும். அதில் இரண்டு பக்கமும் தலா மூணரை அடி இடம் விட்டு 11 அடி அகலத்தில் கட்டிடம் கட்டலாம் என்று திட்டமிட்டோம். இதுக்கே ஆயிரத்தெட்டு சிக்கல்கள். மலைமுழுங்கி அதிகாரிகள் பிரச்சனையால் எதுவும் செய்யாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். ஆனால் பல மோசமான நபர்கள் 18 அடி அகலமுள்ள மனையில் 19 அடிக்கு கட்டிடம் கட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அதிகாரிகள் லஞ்சத்தில் திளைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து ஒரு அரசு ஊழியர் (அவரது மனைவியும் அரசு ஊழியர்தான்) பக்கத்துவீட்டுக்காரர் காற்றோட்டத்துக்கு இடம் விடாமல் கட்டினார் என்று புகார்வாசித்தார். நீங்கள் எவ்வளவு இடம் விட்டு கட்டினீர்கள் என்று கேட்டேன். அதற்குள் அவர் எஸ்கேப். கணவனும் மனைவியும் மாதசம்பளமாக சுமார் 1 லட்சம் பெறுகிறார்கள். அவர்கள் மனம் வைத்தால் இரண்டு மனைகள் வாங்கி சுற்றிலும் இடம் விட்டு பசுமையான சூழ்நிலையில் வீட்டை அமைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் பிசிறு தட்டாமல் இவர்கள் இடத்தில் லஞ்சம் கொடுத்து வீடு கட்டிவிட்டு வெப்பத்தை சமாளிக்க ஏசி போட்டுவிட்டார்கள். இவரைப்போன்றவர்கள் வீட்டை குளுமையாக்கி நாட்டை நெருப்புக்கோளமாக்குகிறார்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பவர்கள் இயன்றவரை காற்றோட்டமுள்ள வீடாக கட்டிக்கொள்வது நாட்டுக்கும் அவர்களுக்கும் நன்மை அளிக்கும். அதுபோல பெரிய வணிக வளாகங்கள் கட்டுபவர்கள் ஆபத்து காலத்தில் மக்கள் சிரமமின்றி வெளியேறும் வகையில் கட்டினால் நன்றாக இருக்கும் என்று எவ்வளவோ சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக தெரியவில்லை.
-----------------------------
2013-2014 கல்வியாண்டில் இருந்து மிகவும் சிரம நிலையில் இருக்கும் அரசுப்பள்ளி குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என்று போன ஆண்டு தீர்மானித்திருந்தோம். அதன்படி இருபது பேர் ஆளுக்கு சுமார் ஐநூறு ரூபாய் பங்களிப்பு செய்தால் கிடைக்கக்கூடிய 10ஆயிரம் ரூபாயை வைத்து எங்களால் முடிந்த அளவு உதவலாம் என்று தீர்மானித்து இப்போது செயலில் இறங்கியிருக்கிறோம்.

ஓரளவு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைவரும் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யலாம். இப்படி நான்கு பேர் ஒன்றாக சேர்வதற்கு வாய்ப்பில்லை என்றால் உங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்மணியின் குழந்தைக்கு உதவுவது கூட சேவைதான். (பலர் இப்படி வெளியில் தெரியாமல் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.) செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். இது வரை செய்யாதவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்.
--------------------------------------
கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு, ஆலயத்திருப்பணிகள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்காக...

இளையபாரதம் தளத்தின் முகப்பில் இருக்கும் கும்பாபிசேக அறிவிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த ஆலயம் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு உள்ளது. சில சூழ்நிலைகளின் காரணமாக சிதிலமடைந்திருந்த இந்த ஆலயத்தை 2009ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்து முழுவதுமாக இடித்துவிட்டு மீண்டும் புதியதாக கட்டியுள்ள இந்த ஆலயத்தின் கும்பாபிசேக விழா வரும் 14.07.2013 அன்று நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் மண்டபத்தில் தட்டு ஓடு போடும் பணியும் ஆலயம் முழுவதும் வர்ணப்பூச்சு செய்ய வேண்டிய பணியும் யாகசாலை செலவுகளும் காத்திருக்கின்றன. உள்ளூர்வாசிகள் நேரடியாக கோயிலுக்கே வந்து விபரம் பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் writersaran@gmail.com க்கு மெயில் அனுப்பினால் தகவல் தெரிவிக்கிறோம்.

புதன், 17 ஏப்ரல், 2013

பொதுமக்கள் நூலகம் வருவதை நூலக ஊழியர்கள் தடுக்கிறார்களா?-











திருவாரூர் மாவட்ட மைய நூலகம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும் தினசரி வாசகர்களின் எண்ணிக்கை 300 முதல் 600 என்ற சராசரி  அளவில்தான் இருக்கிறது. திருவாரூர் நகரின் மையப்பகுதியான தெற்குவீதியில் இருக்கும் கல்யாணசுந்தரம் நூலகத்திற்கே  20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி 400 முதல் 500 வாசகர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் கல்வித்தரம் கூடியிருக்கிறது, மக்கள் தொகை கூடியிருக்கிறது என்று புள்ளி விபரங்கள்தான் சொல்கின்றனவே தவிர பாடப்புத்தகம் தவிர்த்த படிப்பு கேவலமான சூழ்நிலையில்தான் இருக்கிறது. தொலைக்காட்சியை முக்கிய காரணியாக சுட்டிக்காட்டினாலும் ஒரு மாவட்ட மைய நூலகத்திற்கு தினசரி 2ஆயிரம் வாசகர்களாவது பயன்படுத்தவில்லை என்றால் எங்கே பிரச்சனை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.




போட்டித்தேர்வு எழுதும் பலருக்கு திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இயங்கும் தனிப்பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒத்துக்கொள்கிறோம். ஆனால் சாதாரண பொழுதுபோக்கு என்ற அளவில் தொலைக்காட்சியை தவிர்த்து எதாவது படிப்போம் என்று நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நொந்து போய் வருகையை நிறுத்திக்கொள்ளும் அளவுக்குதான் வெகுஜன இதழ்கள் இங்கே வாசிக்க கிடைக்கின்றன.



திருவாரூர் மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நாகைபுறவழிச்சாலையில் அபாயகரமான கனரகப் போக்குவரத்தைக் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இது வயதானவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த நூலகத்தை அதிக அளவில் பயன்படுத்த தடையாக இருக்கும் முதல் காரணியாகும்.



அடுத்து நூலகத்தின் தினக்கூலி பணியாளர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திருவாரூர் கடைத்தெருவில் சென்று வார இதழ்களை வாங்கி வர ஆள் இல்லை என்று உயர் அலுவலர்கள் சாக்குப்போக்கு சொல்லிவிடுகிறார்கள். நகரிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு மேம்பாலத்தில் ஏறி இறங்கி சிரமப்பட்டு சென்று பார்த்தால் முதல் வாரம் வரவேண்டிய வார இதழ்கள் கூட இருக்காது.



11-4-2013 முதல் 14-4-2013 வரை நான்கு நாட்கள் தொடர்ந்து நூலகம் விடுமுறை. அடுத்து வந்த திங்கள், செவ்வாய் இரண்டு வேலை நாட்களில் கூட 10-4-2013 வரை வரவேண்டிய வார இதழ்களைக்கூட வாங்கி வைக்கவில்லை. கேட்டால் ஆள் இல்லை என்று சால்சாப்பு.



மாதம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக்கொள்வோம். வாசகர்கள் கணிணியில் பிரெளசிங் செய்ய இருக்கும் அறையிலிருந்து கணிணியை வெளியே எடுத்துவைத்துவிட்டு அந்த அறையில் ஏசியில் தூங்குவோம். ஆனால் யாரும் எதையும் கேட்டுவிடக்கூடாது. வாசகர்கள் வந்தால் இருப்பதை படித்துவிட்டு பேசாமல் போக வேண்டியதுதானே. நிர்வாகத்தில் தலையிட இவர்கள் யார் என்று கூட சிலரை திட்டுவதாக கேள்வி. உண்மை என்னவென்று தெரியவில்லை.



நூலகத்தில் வாங்கச்செய்வதற்காக சில வார இதழ்களும், மாத இதழ்களும் நூலக அலுவலர்களுக்கு பணம் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு. அந்த பணம் மட்டும் வேண்டும். ஆனால் நூலகத்திற்கு வர வேண்டிய புத்தகங்களை ஒழுங்காக வாங்கி வர மாட்டோம். மேலும் தினசரி 10 முறை டீ, காபி, சாப்பாடு வாங்கி வர ஆட்களை எப்படியாவது தயார் செய்து பேருந்துநிலையம், கடைத்தெரு பகுதிக்கு அனுப்புவோம். அது எங்கள் உரிமை என்று கூட நூலக ஊழியர்கள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.



மக்கள் குடித்து சீரழிந்து பிறரையும் சாகடிக்கும் வகையில் வாகனம் ஓட்டுகிறார்கள். அந்த மது வியாபாரம் செய்யும் இடங்கள் ஆண்டுக்கு 4நாள் அல்லது 5 நாட்கள்தான் விடுமுறை. ஆனால் மக்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள வேண்டிய நூலகத்தை எல்லா அரசு விடுமுறை நாட்களிலும் சாத்திவிடுகிறார்கள். வேலை வெட்டி இல்லாதவனும் போட்டித்தேர்வுக்கு படிப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பவனும் மட்டும்தான் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இப்போதைய வேலை நாட்களும் வேலை நேரமும் இருக்கிறது.



தாலுக்கா நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகத்தின் வேலை நேரம் 12 மணி நேரம். நிரந்தர ஊழியர்களுக்கு ஆறு மணி நேர வேலை வீதம் 2 பிரிவாக இருக்கிறார்கள். நாட்டில் எந்த துறையில் ஆறு மணி நேர வேலை இருக்கிறது. அந்த நேரத்தில் கூட இவர்கள் வேலை செய்யமாட்டார்கள் போலிருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது.



மூன்று புகைப்படத்தையும் பார்த்தால் காட்டு பங்களா போல் இருக்கும் நூலகத்தின் நிலையும், மேம்பாலத்துக்கு செல்லும் அபாயகரமான சாலையின் அமைப்பும் புரியும்.



இது திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தின் நிலை. இன்னும் தமிழ்நாடு பூராவும் சுற்றி வந்தால் என்ன கதியாக இருக்குமோ தெரியவில்லை.



வேறு சில வாசகர்கள் இந்த நூலகத்தின் செயல்பாடு குறித்து புகார் கொடுத்ததாகவும் அந்த புகார்கள் இந்த நூலக உயரதிகாரிக்கே உரிய விசாரணை மேற்கொள்ளும்படி வந்ததாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் பொய்ப்புகார் கொடுத்துவிட்டதாக பைல்கள் மூடப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்றே தெரியவில்லை.



நூலக ஊழியர்களின் போக்கு மறைமுகமாக நூலகத்திற்கு வருபவர்கள் தாமாகவே வராமல் இருந்துவிடச்செய்யும் நோக்கத்துடன் செய்வதாக கூட இருக்கலாம்.



உண்மை அவரவர் மனசாட்சிக்குதான் தெரியும்.

---------------------------------



பெரும்பாலும் அரசு ஊழியர்களின் அராஜகம் எப்படி இருக்கிறது என்ற சாம்பிளுக்கு பின்வரும் தகவல் கூடுதல் இணைப்பு.

***************

சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் தரமுடியாத பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர் விரட்டி அடித்து அந்த பெண்ணுக்கு பேருந்து நிலையத்தில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக இருக்கிறது. பிரச்சனையை விசாரிக்கும் அதிகாரி, கடந்த சில மாதங்களில் 600 பிரசவம் ஆன இந்த ஆஸ்பத்திரியில் இது ஒன்றுதான் இப்படியாகிவிட்டது என்று சொல்கிறார்.



ஆமாம் அது உண்மைதான் ஐயா...எல்லாரிடமும் காசு கேட்டதும் கொடுத்திருப்பார்கள். இந்த பெண்ணிடம் அதற்கு பணம் இல்லாததால் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.