Search This Blog

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அகதிகள் எப்படி இருப்பார்கள்?

அத்தியாயம் - 1

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சாம். அதுல எட்டாம் வகுப்பு படிக்கிற புள்ளை ஒண்ணு, வாத்தியாரைப் பார்த்து "ஐயா, இங்க பக்கத்து தேசத்துல அகதி அகதின்னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன? அவங்க எப்படி இருப்பாங்க! அவங்களை நாங்க பார்க்கணும்னா அந்த தேசத்துக்கு போகணுமா'' அப்படின்னு கேட்டுச்சாம்.

image credit Saattai Tamil movie அதுக்கு அந்த வாத்தியாரு, "அகதிங்களை பார்க்க ஏன் அந்த நாட்டுக்கு போகணும்? நீங்க கூட அகதிதான்.'' அப்படின்னு சொன்னதும் எல்லா புள்ளைங்களும் ஷாக் ஆகிட்டாங்களாம்.(கரண்டே இல்லை. அப்புறம் எப்படி ஷாக் ஆக முடியும்னு குதர்க்கமா கேட்கப்பிடாது.)

அப்போ அந்த வாத்தியாரு, "புரியலையா? நம்ம நாட்டுல எல்லா ஊருலயும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கரண்ட் கொடுக்காம பியூசை புடுங்கிட்டு வெண்ணை நகரத்துல மட்டும் வெளி நாட்டு கம்பெனியோட கக்கூசுக்கு கூட குளிர்சாதன வசதி செஞ்சு கொடுத்து அதுக்கு 24 மணி நேரமும் கரண்ட் கொடுக்குறாங்களே. இப்படித்தான் ஒரு நாட்டோட அகதிகளை நடத்துவாங்க.

அது மட்டுமில்லை. ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரத்தை தனியார்கிட்ட 20 ரூபாய்க்கு வாங்கி, அதை வெளிநாட்டு கம்பெனிக்கு 2 ரூபாய்க்கு வித்துட்டு, பொதுமக்களால தான் நஷ்டம்னு சொல்லுவாங்க. அப்படி ஓசி கரண்ட் வாங்கின கம்பெனி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுறேன்னு சொல்லி வரிச்சலுகையை எல்லாம் வாங்கிட்டு தயாரிக்கிற பொருளை நம்ம நாட்டுலேயே வித்துடும். அதுக்கு உதாரணம் போக்கியா கம்பெனி.

இன்னைக்கு இது போதும். கரண்ட் இல்லாத நேரத்துல நீங்க அதிகமாக ஷாக் ஆக வேணாம். மிச்சத்தை இன்னொரு நாள் ஆகிக்கலாம்!'' அப்படின்னு வாத்தியார் வகுப்பை முடிச்சுட்டாராம்.

-தொடரும்.

ஆண்களுக்கு குழந்தை பிறக்கும்?

உடல் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சென்னை பள்ளிக்குழந்தைகள் என்று வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு கூறியிருப்பது வளிமண்டலக்காற்று மாசு. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் மிக அவசியம். தொடர்ந்து இது போல ரசாயன மாசடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் நாளடைவில் ஹார்மோன்களைப் போல செயலாற்ற ஆரம்பிக்கின்றன. இதனால், நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் ஆடு பிறந்ததைப்போல உடல் உறுப்புகளில் தாறுமாறான வளர்ச்சி ஏற்படுகிறது.

தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள களைக் கொல்லிகள், ஆண் விலங்குகளிடம் (தொடர்ந்து களைக்கொல்லி பயன்படுத்திய பயிரைச் சாப்பிடும்) பெண் தன்மையை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு ஏரியில் பிறக்கும் அலிகேட்டர் முதலைக்குட்டிகளின் உடலில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேறு சில ஏரிகளில் ஆண் மீன்கள் முட்டையிடத் துவங்கியதற்கு நீரில் கலக்கும் ரசாயனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தற்போது மனிதர்களிடமும் வர ஆரம்பித்துள்ளன. மார்பகப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, 10 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ரசாயனப் பொருட்களே காரணம் என்று அமெரிக்க குழந்தை நல மருத்துவர் பிலிப் லான்ட்ரிகன் செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளார்.

மேலே உள்ள இரண்டு பாராக்களும் 27.09.2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் உள்ளவை.

நாம ரொம்ப நாளாவே பூச்சிமருந்து கலந்துதானே !? காய்கறி, அரிசி எல்லாம் சாப்பிடுறோம். அப்போ ரொம்ப சீக்கிரமே ஆண்களுக்கு கருப்பை கூட வளருமோ? இதெல்லாம் நடக்குதோ இல்லையோ உரம், பூச்சிமருந்து கலந்த காய்கறிகளாலே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு செலவு செஞ்சுட்டு, அடுத்த 5 நிமிசத்துல நம்ம உடம்புல வர்ற கோளாறுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப கட்ட வைத்திய செலவா செய்யப்போறாம்னு தோணுது.

இதுக்கு போய் யாராச்சும் கவலைப்படுவாங்களா? அரசாங்கத்துல இலவச காப்பீடு இருக்கு. மிக்சி, கிரைண்டர், டி.வி, மின்விசிறி உள்பட என்னென்னவோ தர்றாங்க. இன்னும் எதெதுக்கோ அரசாங்கத்துல பணம் தரலாம். அப்புறம் ஏன் கவலைப்படணும்?

வியாழன், 20 செப்டம்பர், 2012

புதிய டொமைனில் இளையபாரதம்

தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது மற்ற இடங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இணையத்திற்கு நிச்சயம் பொருந்தும்.

கடந்த 15.04.2012ல் கூகிள் மூலமாக டொமைன் நேம் வாங்க முயற்சித்தேன். அதற்கு கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் இயலவில்லை. ஆனால் அன்று ஏதாவது ஒரு டொமைன் நேம் வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் நான் இணையத்தில் நுழைந்ததால் BigRock சென்று www.writersaran.com என்ற டொமைனை ஒரு வருடத்திற்கு 499 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்து விட்டேன். ஆனால் வெப் ஹோஸ்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலை மேலோட்டமாக படித்துவிட்டு, 500 ரூபாய் அம்பேல், நம்முடைய காசு இப்படியெல்லாம் போகவேண்டும் என்று விதி போலிருக்கிறது என்ற நினைப்பில் அலட்சியமாக விட்டுவிட்டேன்.

நேற்று (வினாயகர் சதுர்த்தி) கற்போம் தளத்தில் பழைய பதிவுகளில் ஏதாவது நமக்கு உபயோகமான தகவல் இருக்கிறதா என்று மேய்ந்தபோது பிளாக் ஸ்பாட் தளத்தை BigRock ல் பதிவு செய்வது எப்படி என்ற பதிவை படித்ததும் ஆஹா, www.writersaran.com என்ற டொமைன் பெயரை 5 மாதங்களாக பயன்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்டோமே என்ற நினைப்பில் அந்த பதிவில் சொல்லியிருந்த வழிமுறைகளின்படி முதல்முறையாக முயற்சித்தேன்.

ஆனாலும் Error செய்தி தான் தொடர்ந்து கிடைத்தது. கற்போம் தளத்தை நடத்தி வரும் நண்பர் கிருஷ்ண பிரபுவிடம் மின்னஞ்சலில் சந்தேகம் கேட்டேன். அவர் சில குறிப்புகள் கொடுத்தார்.

அந்த விஷயங்களையும் செய்து முடித்தேன். அவை தவிர மேலும் சில தகவல்கள் தேவைப்படுவது புரிந்தாலும் அது என்னவென்று விளங்காமல் மீண்டும் google instruction முழுவதையும் தெளிவாக படித்தேன். விஷயம் தெளிவாகிவிட்டது. BigRock ல் நான் இன்னும் மேற்கொள்ள வேண்டிய 2 ஸ்டெப் செயல்கள் மீதம் இருந்தது. அவற்றை செய்தேன். அடுத்த 5 நிமிடங்களில் இளையபாரதம் www.writersaran.com என்ற முகவரியில் செயல்படத்தொடங்கிவிட்டது.

டாட்காம் டொமைன் நேம் ஆக்டிவேஷன் ஆன கதையை சொல்லி இப்போது 3வது இன்னிங்ஸ் பதிவுகளை இளையபாரதம் தொடங்கியுள்ளது.

பழைய பதிவுகளை வேறு ஒரு வலைப்பூவில் வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் மீதமிருக்கும் பணிகள் முடிந்ததும் அந்த முகவரி அறிவிக்கப்படும்.