Search This Blog

புதன், 23 மே, 2012

மதிப்பெண் போனால் ..............ரே போச்சு

இப்படி நான் சொல்வது எதிர்பாராத சூழ்நிலையில் மதிப்பெண் குறைவாகவோ அல்லது குறைந்த பட்ச மதிப்பெண்ணான 35 சதவீதம் எடுக்காமலோ இருப்பவர்களுக்கு. மற்றவர்கள் இதைக் கண்டுகொள்ள வேண்டாம்.


10ஆம் வகுப்புடன் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்ட நான் +2 தேர்வு தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். (ஆரம்பிச்சிட்டாண்டா) தேசத்தந்தை பெயரையும் கர்மவீரர் பெயரையும் வாயால் சொல்லக்கூட அருகதை இல்லாத ஒருவனிடம் போய் நான் சிக்கினேன். அந்த டுடோரியல் நடத்தி வந்த அயோக்கியன், தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாளாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நாள் வரை கட்டணம் செலுத்தாமல் அதன் பிறகு செலுத்தினான்.

இதனால் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னால் +2 தேர்வு எழுத முடியவில்லை. இப்போது மாதிரி தட்கல் விண்ணப்பம், உடனடி தேர்வு போன்ற எந்த சலுகையும் அப்போது இல்லை. அதனால் எனக்கு 1 வருடம் கோவிந்தா.

சுற்றி இருந்தவர்களின் ஏச்சு பேச்சை தாங்க முடியாமல் என் மனம் என்னென்னவோ சிந்தித்தது. நொந்து போய் துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்க்க போய் விட்டேன். திரும்பவும் 1999 செப்டம்பரில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் நாள் வரை அந்த ஆறு மாதங்கள் எனக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய மனம் மிகவும் தெளிவடைந்த காலகட்டங்கள் அது என்று சொல்லலாம்.

அது என்னவோ தெரியவில்லை. அப்போது முதல் அடுத்தவர்களால் மட்டுமே எனக்கு பிரச்சனைகள் வருகிறது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னைப்போலவே எல்லாரும் நாணயமானவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் என்று சிலரை நம்பித்தொலைவதுதான் எனக்கு வில்லங்கமாகிவிடுகிறது.

அது போகட்டும்.

இப்போது தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்காதவர்கள் எந்த தவறான முடிவையும் எடுக்க வேண்டாம். அவர்கள் அப்படி செய்வதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களாகத்தான் இருப்பார்கள். உயிரை விட்டால் ஒருத்தனுக்கும் பிரயோசனமில்லை. உயிர் இருந்தால் உலகையே வசப்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முயற்சியை தொடருங்கள்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

ஊரில் பலர் அறியாத ரகசியம்

ஊரறிந்த ரகசியம் தெரியும். அது என்ன ஊர் அறியாத ரகசியம்?....இது கூட தெரியாதா?. நம்ம அரசியல் வியாதிகள் செய்யுறதுல 99 சதவீதம் இப்படிப்பட்ட வேலைகள்தான். அவங்க பேரைச் சொல்லி அதிகாரிங்க அடிக்கிற கொள்ளையும் இதுலதான் சேரும்.


ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக கிட்டத்தட்ட 15 நாட்கள் நிறைய ஊர்கள்லேர்ந்து சிறப்பு பேருந்துகள் திருவாரூர் வழியா போறதைப் பார்த்திருக்கேன். அது அவசியமும் கூட. அதைத் தவிர்த்துப்பார்த்தா திருவாரூர் தேர்திருவிழா அன்று ஒரு நாள் மட்டும் சில சிறப்புப்பேருந்துகள் வரும். ஆனா சமீப காலமா அப்பப்ப திருவாரூர்ல சிறப்புப்பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கரோட பாடாவதி பேருந்து நிற்கும். அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை.

சாதா பேருந்துக்கும் சிறப்புப்பேருந்துக்கும் என்ன வித்தியாசம்னுதானே கேட்டீங்க? சாதா பேருந்துக்கும் எக்ஸ்பிரஸ்னு ஸ்டிக்கர் ஒட்டின பேருந்துக்கும் உள்ள வித்தியாசம்தான். சரி...இப்படி சிறப்பு பேருந்து இயக்கும்போது சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கட் விக்கிற மாதிரி இருபது, முப்பதுன்னு பிளாட் ரேட்டா டிக்கட் போட்டு வசூலிக்கிறாங்களே. நஷ்டத்துல ஓடுற பஸ்சுக்கு முட்டு குடுக்குறாய்ங்கன்னு பார்த்தா, போக்குவரத்துக்கழக கிளைமேலாளரும், கோட்ட மேலாளரும் சிறப்பு பேருந்து பேரைச் சொல்லி எப்படி கொள்ளை அடிக்கிறாங்கன்னு ஒரு தகவல் கசியுது.

ரெகுலர் டிரிப்பை கேன்சல் செஞ்சுட்டு திடீர்னு ஒரு சிறப்பு டிரிப் அடிச்சா சுமாரா 600 ரூபா டீசலுக்கு எக்ஸ்ட்ரா செலவாகுறதோட, டிரைவர், கண்டக்டர் படிக்காசு தலா 40 ரூபாயாம். இது போகட்டும். அந்த சிறப்பு பேருந்தையும் பகல்ல அவ்வளவா இயக்க மாட்டாங்க. அப்ப எப்போ?  நடுராத்திரி 12 மணியிலேர்ந்து 3 மணி வரைக்கும் அடிச்சா, இந்த சிறப்பு பேருந்து இயக்குறது அந்த வழிகள்ல இருக்குற ஊருக்கு போறவனுக்கே தெரியாதாம். ஆளில்லா கடையில நல்லாவே டீ ஆத்துறாங்கப்பா. உண்மையிலேயே 4 பஸ் வழியுற அளவுக்கு கூட்டம் நிற்கும்போது அந்த வழியில ரெகுலரா போற பஸ்சைக்கூட நிறுத்துற கேவலம் நடக்கும்.

ஊருக்குள்ள எவனுக்கும் தெரியாம சிறப்புப்பேருந்து இயக்குறதுக்கு கோட்ட மேலாளருக்கும், கிளை மேலாளருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாம். ஆனா இந்த மாதிரி டிரிப்புகளில் 200 ரூபா அல்லது 300 ரூபாய்தான் வசூல் ஆகுமாம். அட துரோகிகளா? இப்படி நீங்க கொள்ளை அடிச்சீங்கன்னா பஸ் ரோட்டுல எப்படிடா ஓடும். நஷ்டத்துல ஓடி ஆத்துல...சாரி... அதுல வெறும் பள்ளம் மட்டும்தான் இருக்கு. கடல்ல தான் முழ்கும். இதை எல்லாம் சரி செய்ய முடியாம பஸ் டிக்கட்டை மனசுல 500 கிலோ வெயிட்டோட வேதனையோடதான் ஏத்திருக்கேன்னு அறிக்கை வேற.

ஒரு படத்துல விவேக் பேசும் வசனம். ''ஏண்டா...நீங்க பிச்சைக்காரியை கூட விட்டு வெக்கலியான்னு''. அப்படித்தான் இந்த அரசியல் வியாதிங்க இப்படி போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், கோட்ட மேலாளர் போஸ்டிங் போடுறதுக்கு எத்தனை லட்சம், எத்தனை கோடி லஞ்சம் வாங்குனானுங்களா? அதை உங்க மூளையை பயன்படுத்தி ஜனங்க .......................குள்ள கையை விட்டு குடைஞ்சு எடுத்து சாப்பிடுங்க அப்படின்னு தண்ணி தெளிச்சு விட்டுருப்பாங்க.

அது சரி...அரசியல் வியாதிங்க சாப்பிடுற டிபனுக்கு பொதுஜனம்தான் பில் மட்டும் இல்லை...டிப்ஸ் கூட கொடுக்கணும்னு தலையெழுத்து.

சிறுதுளி பெருவெள்ளம்னுங்குற கான்செப்டை யார் புரிஞ்சு வெச்சிருக்காங்களா இல்லையோ...இந்த அரசியல் வியாதிங்க நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்கப்பா. இந்தியாவுல இருக்குற 120 கோடி மக்கள் கிட்ட இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒத்தை ரூபாய உருவுனா கூட 120 கோடியாச்சுன்னு ப்ளான் பண்ணி நம்ம தோலை உரிச்சு தின்னுகிட்டு இருக்காங்க.

இன்னும்தான் இந்த அரசியல் வியாதிங்களை நாமும் நம்பிகிட்டுதானே இருக்கோம்.

புதன், 25 ஏப்ரல், 2012

பயணிகள் கவனிக்கவும்

இரவு உணவின் போது சிறிது நேரம் கேபிள் தொல்லைக்காட்சி பார்க்கும் சூழ்நிலையை என்னால் தவிர்க்க இயலாது. அந்த சில நிமிடங்களில் ஒரு நிறுவனத்தின் விளம்பரம் சற்று கவனிக்க வைத்தது. CEAT டயர் நிறுவனத்தின் விளம்பரம்தான்.



1. நடக்க பழகும் குழந்தையை கவனிக்காமல் இரண்டு பெண்கள் சாலையின் ஓரத்தில் நின்று வம்பு பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்குழந்தை சாலையின் நடுவே வந்து டிராபிக் போலீஸ் வேலை பார்க்க முயற்சிக்கும். அப்போது டூவீலர் ஓட்டி வரும் ஒருவர் திடீர் பிரேக் போட்டதும் சட்டென்று வண்டி நின்றுவிடும். அப்போது அந்த குழந்தையின் தாய், டூவீலர் ஓட்டி வந்தவரைப்பார்த்து, இடியட், குழந்தை இருக்குறது தெரியலை...என்று இஷ்டத்துக்கு திட்ட ஆரம்பிப்பார்.

2. கணவனும் மனைவியும் திரைப்படம் பார்த்துவிட்டு டூவீலரில் பேசிக்கொண்டு போவார்கள். இரவு நேரம். டிராபிக் இருக்காது. சிக்னலில் பச்சை விளக்கு எரியும். இவர்கள் அந்த சந்திப்பை கடந்து செல்ல முயற்சிக்கும் போது திடீரென்று குறுக்கே ஒரு கார் பாம்பு மாதிரி இஷ்டத்துக்கு நெளிந்து போகும்.(அப்படிக்கூட சொல்ல முடியாது. இன்னும் கேவலமாக) அப்போது சட்டென்று பிரேக் பிடித்து நிறுத்திய கணவரின் தோளில் கைவைத்து அவரது மனைவி பெருமூச்சு விடுவார் பாருங்கள்...நம் நிஜ வாழ்விலும் இப்படித்தான். ஒழுங்காக ரூல்சை மதிப்பவர்கள் இப்படி செத்துப்பிழைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் விதி மீறும் மதிகெட்ட மாந்தர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள்.


இன்னும் இரண்டு மூன்று பேட்டர்னில் இந்த விளம்பரம் ஒளிபரப்பானது. அவர்கள் நோக்கம், எங்கள் டயர் எப்படிப்பட்ட சூழலில் பிரேக் பிடித்தாலும் சாலையில் கிரிப்பை விடாது என்று மக்களுக்கு சொல்வது. அவர்கள் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம், சாலையில் இப்படி நிறைய இடியட்ஸ் இருக்காங்க என்று நான் சிவப்பு எழுத்துக்களாக காட்டியிருக்கும் நபர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது உண்மைதான். நான் கல்லூரியில படிக்கும்போது ஒரு பேராசிரியர், உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா என்ன சொல்லுவ? என்றார். எனக்கு தெரியாதுன்னு உண்மையை ஒத்துக்குவேன் என்றேன். அதற்கு அவர், நீ வேஸ்ட். உனக்கு ஒரு கேள்விக்கு பதில் தெரியலன்னா எதிர் கேள்வி கேட்டு அவங்களை குழப்பி விட்டுடணும். இல்லை... வாயை மூட வெச்சுடணும். அப்படின்னு சொன்னார்.

நான் என்ன அரசியல் வியாதியாவா ஆகப்போறேன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டேன். செல்போன் பேசிகிட்டே குழந்தையை கவனிக்காம இருக்குறது மாதிரியான ஆளுங்க, அவங்க தப்பை நீங்க சுட்டிக்காட்டுறதுக்கு முன்னாலேயே  உங்களைத் திட்டி சேப்டியாயிடுவாங்க.

எச்சரிக்கை தேவை நண்பர்களே!