Search This Blog

வியாழன், 17 நவம்பர், 2011

பஸ் கட்டணம், பால் கட்டணம் உயர்வு - ஆப்பு ஆரம்பம்.

 எந்த ஒரு விலை உயர்வு அறிவித்தாலும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம், பேரணி அப்படின்னு அமர்க்களப்படுத்தும். உண்மையில் இந்த விலை வாசி உயர்வை சுமக்கப்போறவன் கத்த கூட தெம்பில்லாம நசுங்கிப்போய் கிடப்பான்.

அரசாங்க பதிவேடுகளை பேப்பர்ல மட்டுமே பராமரிச்சுகிட்டு இருந்த காலத்துல தொட்டதுக்கும் சென்னைக்கே மொத்த தமிழகமும் ஓடி வரவேண்டி இருந்துச்சு. இப்போ ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்படி இப்படின்னு ஓரளவு நிலைமை பரவாயில்லை.

ஒரு மாணவன் அதிகபட்சம் 5 முதல் 15 நிமிஷத்துக்குள்ள நடந்தே அவனோட பள்ளிக்கூடத்துக்கு போற மாதிரி அருகாமையில இருக்குற பள்ளிகளோட தரத்தை உயர்த்தி ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில நியமிக்கிற வேலையை எந்த அரசு வந்தாலும் செய்யப்போறதே இல்லைன்னுதான் தோணுது.

இப்படி ஒவ்வொரு விஷயத்துலயும் பார்த்து பார்த்து எரிபொருள் சேமிப்புக்கான நீண்ட கால திட்டத்தை அமல்படுத்துறதை விட்டுட்டு நடுத்தர மக்களை சுரண்டக்கூடிய நடவடிக்கைகளை மட்டும் அயல் நாடுகள் கிட்ட இருந்து நம்ம அரசுகள் எப்படித்தான் கத்துக்குதோ தெரியலை.

ஐநூறு ரூபாய்க்கு கூட வேலை பார்க்காம அம்பதாயிரம் சம்பாதிக்கிற அல்லது சம்பளம் வாங்குறவங்களைப் பத்தி கவலை இல்லை. கட்டிடத் தொழிலாளி மாதிரி சில வகை தொழில் செய்யுற லேபர்களும் விலைவாசி உயர்வைக்காரணம் காட்டி கூலியை உயர்த்திடுவாங்க.

இதுல வீணாப்போய் நசுங்குறது வறட்டு கவுரவம் பார்த்து வாழ வேண்டியிருக்குற நடுத்தர வர்க்க அப்பாவிகள்தான். அவங்க ஏன் கவுரவம் பார்க்கணும்னு சிலர் கேட்கக்கூடும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிச்சதா ஒரு சர்டிபிகேட்டோட இருக்குறவங்கதான் வெடிச்சுகிட்டு வர்ற விலைவாசியோட வேகத்துக்கு சம்பளம் அதிகரிக்காத இடத்துல மாட்டிகிட்டு அவதிப்படுறாங்க.

இதையெல்லாம் பார்த்தா முடியுமா?...விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி சம்பாதிக்க கத்துக்கணும்னு அறிவுரைக்கெல்லாம் பஞ்சமே இருக்காது.

இப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை வறுமையான சூழ்நிலையிலேயே வெச்சிருக்குறதன் வெளிப்பாடுதான் அரசுப்பள்ளிகள் நிறைய தடுமாறுவதும், கல்வித்தந்தைகள் நிறைய உருவாவதும்.

அரசு ஊழியர்களில் சில பணியிடங்களுக்கு ஆட்சியாளர்கள் மிக அதிக அளவு சம்பளத்தை ஏற்றி விட்டதே அந்த பணி நியமனத்திற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகத்தான் என்று ஒருவர் சொன்னார். இது உண்மையாங்க?

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யாரைத்தான் நம்புவதோ...





எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.



சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.



எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.



பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.



நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.



நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.



ஏன் இந்தவம்பு?



புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.


யாரைத்தான் நம்புவதோ...

எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.

சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.

பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.

நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.

நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.

ஏன் இந்தவம்பு?

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.