Search This Blog

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யாரைத்தான் நம்புவதோ...





எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.



சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.



எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.



பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.



நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.



நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.



ஏன் இந்தவம்பு?



புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.


யாரைத்தான் நம்புவதோ...

எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.

சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.

பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.

நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.

நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.

ஏன் இந்தவம்பு?

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.

சனி, 10 செப்டம்பர், 2011

கேபிள் குழப்பங்கள்






மீண்டும் அரசு கேபிள் கார்ப்பொரேஷன் என்று தொடங்கிய நாள் முதல் சில கட்டண சேனல்கள் தெரியவில்லையாம்.






அது என்ன "யாம்?"...உனக்கு தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாங்க...எனக்கு நேரடியா இந்த செய்தி தெரியாது. ஏன்னா...எங்க வீட்டுல கேபிள் கனெக்சனை துண்டித்து மூன்று ஆண்டுகள் இருக்கும்.



மாதத்திற்கு நூற்று ஐம்பது ரூபாய் என்பது மிகவும் அதிகமாக எங்களுக்கு தோன்றியது. அதனால் DTH வைத்துவிட்டோம். நாங்கள் வைத்திருப்பதற்கு மாத சந்தா கிடையாது. கருவிகள் வாங்கியது மற்றும் பொருத்துதல் செலவு மட்டுமே.



ஆனால் தெரிந்த தமிழ் சேனல்கள் என்றால் கலைஞர், பொதிகை, ஜீ தமிழ், மெகா ஆகியவைதான். (மக்கள் தொலைக்காட்சி சில காலம் இந்த இணைப்பில் தெரிந்தது. பிறகு கிடையாது.)



இந்த மூன்றாண்டுகளில் பிரபல சில சேனல்களைப் பார்க்காமல் நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம். அது தான் ஏன் என்று புரியவில்லை. ஒரு சில நாளிதழ்களில் சில பே(ய்) சேனல்கள் தெரியாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்று எழுதுகிறார்கள்.



5 கோடி செலவு செய்து போட்ட ரோட்டுக்கு ஐநூறு கோடியைத்தாண்டியும் வசூல் செய்துகொண்டிருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருக்கும் வாய் வருவதில்லை. தன்னுடைய ...........த்தில் யாராவது சூடு வைத்தால்தான் மக்களுக்கு கோபம் வருமோ என்னவோ...



சில சேனல்களில் ஒளிபரப்பாகும் கேடுகெட்ட சீரியல்களைப் பார்த்த ஒரு தாய், மகனுக்கு பெண் பார்க்கும் முன்பே, வரும் மருமகள் எப்படி எல்லாம் சண்டை வளர்ப்பாள், அதை நான் எப்படி சமாளிக்கப்போகிறேன் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிற நிஜக் கதையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.



சீரியல் வரும் காலத்துக்கு முன்பு மாமியார், மருமகள் சண்டை இல்லையா என்று கேட்கலாம். துணியை கொடியில் இருந்து இழுத்ததுமே வரவில்லை என்பது போன்ற அற்பக்காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து, பொய் வரதட்சணைக்கொடுமை புகார் என்ற அளவுக்கு பிரச்சனைகளை வீதிக்கு இழுத்து வர முக்கிய காரணகர்த்தா இந்த சீரியல்கள்தான்.



அந்த கொடுமைகள் இருக்கட்டும். என்னுடைய கேள்வி எல்லாம் ஒன்றுதான். கேபிள் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.



ரயிலில் ஏ/சி கோச்சும் உண்டு. 64 பேர் அமரக்கூடிய பெட்டியில் 600 பேரை திணிக்கும் பொது பெட்டியும் உண்டு.



ஒரு காப்பிக்கு 1000 ரூபாய் விலை சொல்லும் 5 நட்சத்திர ஹோட்டலும் உண்டு, 5 இட்லியை 15 ரூபாய்க்கு தரும் கையேந்திபவனும் உண்டு.



1000 ரூபாயிலும் செல்போன் உண்டு. லட்ச ரூபாயிலும் உண்டு. கேபிளில் மட்டும் ஏன் இந்த முற்றுரிமை?...



கட்டண சேனல்களை இணைத்து 150 ரூபாய் கட்டணத்தில் ஒரு விதமாகவும், இலவச சேனல்களை மட்டும் வைத்து 70 ரூபாயில் மற்றொரு முறை என்று இரண்டு வித இணைப்புக்களையும் கொடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.



சென்னையில் செட் ஆப் பாக்ஸ் இருந்தால் தான் கட்டண சேனல்கள் என்ற நிலை வந்ததும் பலர் 100 ரூபாய்க்கு கிடைக்கும் இலவச சேனல்கள் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். விளம்பர வருவாயில் பெரிய துண்டு விழுந்தது. இதை எதிர்பார்க்காத ஒரு கட்டண சேனல் குழுமம் (ஒரு இணைப்புக்கு நாலு கட்டணசேனலுக்கு மட்டும் தற்போது 46 ரூபாய் கேட்பதாக சொல்லுகிறார்கள்.) சென்னையில் மட்டும் அந்த சேனல்களை இலவசமாக வழங்கியது.



மூன்று மாதங்களுக்கு அந்த சேனல்களை பார்க்கவில்லை என்றால் மக்கள் அந்த சேனல் நிகழ்ச்சிகளை மறந்து விடுவார்கள். அதே சமயம் விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றை மிக குறைந்த விலைக்கோ, அல்லது இலவசமாகவோ அந்த நிறுவனமே வழங்க வாய்ப்பு உண்டு.



அப்படியும் இல்லை என்றால் கட்டண சேனல்களில் விளம்பரமே இருக்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டால் எல்லாரும் வழிக்கு வருவார்கள்.



என்னைப்போன்ற எவ்வளவோ பேர்கள் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் விளம்பரம் போடும் சேனலுக்கெல்லாம் பணம் கொடுத்து பார்க்கத்தேவையில்லை என்று நினைப்பார்கள். நாங்கள் பார்க்க இலவச சேனல்கள் மட்டும் கொண்ட 70 ரூபாய் இணைப்பையும் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு 150 ரூபாயில் கட்டண சேனல்களையும் கொண்டு தனி இணைப்பும் வழங்கினால் நல்லது.





கேபிள் ஆப்ரேட்டர்களும், சேனல் உரிமையாளர்களுக்கும் ஒத்துப்போகாததற்கு ஒரு முக்கிய காரணம், எத்தனை இணைப்பு என்பதை யாரும் உறுதியாக சொல்லமுடிவதில்லை என்பதும்தான்.



மின் கட்டணத்தைப்போல் கேபிள் கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்தும் வசதி கொண்டுவந்துவிட்டால் கறுப்பு இணைப்புக்கு வேலை இருக்காது. ஆனால் இப்படி வசூல் செய்யும்போது அரசின் பங்கும், கேபிள் ஆப்ரேட்டர்கள் பங்கும் அவரவர் வங்கிக்கணக்கில் சேருமாறு புரோகிராம் செட் செய்துவிட்டால் பிறகு அந்த தொகைக்காக கேபிள் ஆப்ரேட்டர்கள் பொதுமக்களிடமோ, அதிகாரிகளிடமோ அலைய வேலை இருக்காது.



மின் கட்டணம் போன்று கேபிள் கட்டணமும் குறிப்பிட்ட தேதியில் கட்டப்படவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலை இருந்தால் எல்லாரும் பணத்தை ஒழுங்காக கட்டுவார்கள்.



எல்லா இணைப்பும் கணக்கில் வந்துவிட்டால் சேனல் உரிமையாளர்கள் அநியாய வசூல் வேட்டை நடத்த நினைப்பதும் குறையும். பணம் வசூல் செய்ய அலையும் நேரம் மிச்சமானால் சேனல்கள் சரியாக தெரியவில்லை என்ற புகாரை கேபிள் ஆப்ரேட்டர்கள் சரியாக கவனிக்காமல் விடும் அபாயமும் உண்டு.



இதையும் ஒரு முறையில் கட்டுப்படுத்தலாம்.



சேனல்களுக்கான சிக்னல்கள் சரியாக வருகிற பட்சத்தில் கேபிள் ஆப்ரேட்டர் தன் பொறுப்பில் ஒரு நல்ல டிவியை வாடிக்கையாளர் வீட்டில் போட்டுக் காண்பித்து சேனல்கள் சரியாக தெரிவதை உறுதிப்படுத்தலாம். இந்த முறையில் வாடிக்கையாளரின் தொலைக்காட்சியில் கோளாறா...கேபிள் இணைப்பில் கோளாறா என்பதும் தெரிந்து விடும்.



பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் ஆயிரம் வழி உண்டு. அதை வேண்டுமென்றே சிலர் புகைய விடுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.