Search This Blog

சனி, 26 பிப்ரவரி, 2011

தீக்குளிக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு என்று இன்றைய (26 பிப்.) தினத்தந்தி நாளிதழின் ஒரு பக்கத்தில் பத்து வரியில் ஒரு சிங்கிள் கால செய்தி வெளிவந்திருந்தது என் கவனத்தில் படக் காரணம் சம்பவம் நடந்தது நாங்கள் வசித்து வந்த பகுதியில்.

நாளிதழில் நான் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றியபோது வயிற்று வலியால் தூக்குப்போட்டுக்கொண்டது, சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் பலி போன்ற செய்திகளை 'இதுக்கெல்லாம் வேற எதாவது காரணம் இருக்கும்.' என்று இயல்பாக சொல்லிவிட்டு அந்த மேட்டரை சட்டென்று ஓரங்கட்டிவிடுவார்.
நைட்டி அணிந்திருந்த 30வயது பெண் தீக்காயங்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை பெற்று (மரண அவஸ்தை பட்டு) உயிரிழந்திருக்கிறார். சமையல் செய்யும்போது விபத்து என்று கேஸ் முடிந்துவிட்டது. வெளி உலகுக்கு தெரிந்த செய்தி இவ்வளவுதான்.

இது போன்ற ஒவ்வொரு மரணங்களுக்குப் பின்னும் என்னென்ன ரகசியங்களோ. இன்றைய செய்தியில் இடம்பெற்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையு உண்டு. அந்த பெண் குழந்தைக்கு இரண்டிலிருந்து மூன்று வயது இருக்கலாம். அக்கம்பக்கத்தில் வந்த வாய் வழித்தகவல் அந்த பெண் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டாதாக. அந்தப் பெண்ணின் கணவனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்ற தகவலில் இருந்து மற்றவற்றை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவு வட்டத்தில் இருந்த பெண் இப்படித்தான் பத்து லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திக்கொண்டு, வேறு தொடர்பு வைத்திருந்த கணவனை மிரட்டத்தான் இப்படி செய்தேன். என்னைக் காப்பாத்துங்க எரிச்சல் தாங்க முடியலை அப்படின்னு ஆஸ்பத்திரியில கதறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை என்று தொடர்கதையாக இருக்கின்றன. கல்வி இவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தது என்று யோசித்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எதையும் எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு உயிர் வேண்டும். உயிர் இருந்தா போதும். மத்ததெல்லாம் தூசு அப்படின்னு ஒரு தைரியத்தை வழங்காத கல்வி நம்ம சமூகத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆபத்தை தந்துகிட்டே இருக்குன்னுதான் நான் சொல்வேன். (துரதிர்ஷ்டவசமா ஊழல் பேர்வழிகளும் கொள்ளக்காரங்களும்தான் இந்த தைரியத்தோட இருக்காங்க.)

உண்மையான கல்வின்னா அது திவ்யா மாதிரி சோதனைகளை சந்திக்கிறவங்க துணிச்சலோட உலகத்தை எதிர்த்துப் போராட கத்துக்கொடுக்கணும். அந்தப் பொண்ணைப் பார்த்து அவளோட தோழிகள் 'திருடி வர்றா...பணத்தை பத்திரமா வையுங்கன்னு ' சொன்னதாலதான் ரொம்பவும் அதிகமா மனசுடைஞ்சு போய் தவறான முடிவெடுத்துட்டதா நான் பத்திரிகைகள்ல படிச்சேன். அது உண்மையா இருக்குற பட்சத்துல இப்படி மனம் புண்படும்படியா (அதாவது பணம் அந்த பொண்ணுகிட்ட சோதனை போட்டு கிடைக்காதப்போ) பேசுறது தப்புன்னு சக தோழிகளுக்கு புரிஞ்சு நாகரிகமா நடந்துக்குறதுதான் கல்வியின் பயன் அப்படின்னு எனக்குத் தோணுது. இந்த அடிப்படை விஷயம் கூட தராத நம்ம கல்வி முறையில நிறைய மாற்றம் வேணும்னு மறுபடியும் எனக்கு சொல்லத்தோணுது.

தீக்குளிக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் சாவு என்று இன்றைய (26 பிப்.) தினத்தந்தி நாளிதழின் ஒரு பக்கத்தில் பத்து வரியில் ஒரு சிங்கிள் கால செய்தி வெளிவந்திருந்தது என் கவனத்தில் படக் காரணம் சம்பவம் நடந்தது நாங்கள் வசித்து வந்த பகுதியில்.

நாளிதழில் நான் பக்க வடிவமைப்பாளராக பணியாற்றியபோது வயிற்று வலியால் தூக்குப்போட்டுக்கொண்டது, சமையல் செய்யும் போது தீப்பிடித்து பெண் பலி போன்ற செய்திகளை 'இதுக்கெல்லாம் வேற எதாவது காரணம் இருக்கும்.' என்று இயல்பாக சொல்லிவிட்டு அந்த மேட்டரை சட்டென்று ஓரங்கட்டிவிடுவார்.
நைட்டி அணிந்திருந்த 30வயது பெண் தீக்காயங்களுடன் கிட்டத்தட்ட ஒரு மாதம் சிகிச்சை பெற்று (மரண அவஸ்தை பட்டு) உயிரிழந்திருக்கிறார். சமையல் செய்யும்போது விபத்து என்று கேஸ் முடிந்துவிட்டது. வெளி உலகுக்கு தெரிந்த செய்தி இவ்வளவுதான்.

இது போன்ற ஒவ்வொரு மரணங்களுக்குப் பின்னும் என்னென்ன ரகசியங்களோ. இன்றைய செய்தியில் இடம்பெற்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையு உண்டு. அந்த பெண் குழந்தைக்கு இரண்டிலிருந்து மூன்று வயது இருக்கலாம். அக்கம்பக்கத்தில் வந்த வாய் வழித்தகவல் அந்த பெண் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டாதாக. அந்தப் பெண்ணின் கணவனுக்கு குடிப்பழக்கம் உண்டு என்ற தகவலில் இருந்து மற்றவற்றை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவு வட்டத்தில் இருந்த பெண் இப்படித்தான் பத்து லிட்டர் மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திக்கொண்டு, வேறு தொடர்பு வைத்திருந்த கணவனை மிரட்டத்தான் இப்படி செய்தேன். என்னைக் காப்பாத்துங்க எரிச்சல் தாங்க முடியலை அப்படின்னு ஆஸ்பத்திரியில கதறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை என்று தொடர்கதையாக இருக்கின்றன. கல்வி இவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுத்தது என்று யோசித்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. எதையும் எதிர்த்துப் போராடலாம். ஆனால் அதற்கு உயிர் வேண்டும். உயிர் இருந்தா போதும். மத்ததெல்லாம் தூசு அப்படின்னு ஒரு தைரியத்தை வழங்காத கல்வி நம்ம சமூகத்துக்கு கண்ணுக்குப் புலப்படாத ஆபத்தை தந்துகிட்டே இருக்குன்னுதான் நான் சொல்வேன். (துரதிர்ஷ்டவசமா ஊழல் பேர்வழிகளும் கொள்ளக்காரங்களும்தான் இந்த தைரியத்தோட இருக்காங்க.)

உண்மையான கல்வின்னா அது திவ்யா மாதிரி சோதனைகளை சந்திக்கிறவங்க துணிச்சலோட உலகத்தை எதிர்த்துப் போராட கத்துக்கொடுக்கணும். அந்தப் பொண்ணைப் பார்த்து அவளோட தோழிகள் 'திருடி வர்றா...பணத்தை பத்திரமா வையுங்கன்னு ' சொன்னதாலதான் ரொம்பவும் அதிகமா மனசுடைஞ்சு போய் தவறான முடிவெடுத்துட்டதா நான் பத்திரிகைகள்ல படிச்சேன். அது உண்மையா இருக்குற பட்சத்துல இப்படி மனம் புண்படும்படியா (அதாவது பணம் அந்த பொண்ணுகிட்ட சோதனை போட்டு கிடைக்காதப்போ) பேசுறது தப்புன்னு சக தோழிகளுக்கு புரிஞ்சு நாகரிகமா நடந்துக்குறதுதான் கல்வியின் பயன் அப்படின்னு எனக்குத் தோணுது. இந்த அடிப்படை விஷயம் கூட தராத நம்ம கல்வி முறையில நிறைய மாற்றம் வேணும்னு மறுபடியும் எனக்கு சொல்லத்தோணுது.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றோம்...

இது வடிவேலுவின் காமெடி வசனம். கடந்த 17,18 (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்களும் வெளியூர் பயணம் சென்றிருந்தோம். சனிக்கிழமை காலையில் எட்டரை மணிக்கு மேலாகியும் மின்விநியோகம் இல்லை. வழக்கமாக காலை ஆறு மணிமுதல் எட்டரை மணி வரைதானே துண்டிப்பார்கள் என்று நண்பனிடம் விசாரித்தேன்.

அடடே...இப்பல்லாம் தினமும் மூணு மணி நேரம் பியூசை புடுங்கிடுறாங்களே...இது தெரியாம ஒரு எழுத்தாளர்(?) இருக்கலாமா அப்படின்னு ஐஸ் வெச்சுட்டு போயிட்டான். போறதுக்கு முன்னால "இன்னும் ஒரு மாசம் ஆன பிறகு தினமும் நாலு மணி நேரம், அப்புறம் தேர்தல் முடிஞ்சதும் தினமும் அஞ்சு மணி நேரம் ஆப்புதாண்டி..."ன்னு போனஸ் நியூஸ் வேற.

இதைக் கேட்டதும் அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.(கரண்ட்டே இல்ல...அப்புறம் எப்படி ஷாக் அடிக்கும்னு கேட்க கூடாது.)

2008ம் வருஷம் இப்படி தினமும் அஞ்சு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. காலையில ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரை மின் நிறுத்த சேவை தொடங்கும். பிறகு இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை. அடுத்த ஆப்பு ரெண்டு மணி முதல் மூணு வரை. மார்கழி மாசத்துல கூட இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிருக்க மாட்டோம். பல பேருக்கு நள்ளிரவுன்னா இப்படி நரக இரவாகூட இருக்கும்னு புரிய வெச்சாங்க. சென்னையில இருந்தா தெரிஞ்சிருக்காது. குடிசை வீட்டுல வாடகைக்கு இருக்குறவன் கூட சென்னையில எதாவது மந்திரி வீட்டுக்கு பக்கத்துல குடி போனாத்தேவலை போலிருக்கேன்னு பொறாமை பட்ட நேரம் அது.

எங்க தெரு பிள்ளையார் கோவில்ல விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் இரவு தோரணம் கட்டுற வேலையில ஈடுபட்டிருந்தோம். பதினைந்து நிமிட நேரத்திற்கான வேலை மீதம் இருந்த நிலையில் இரவு ரெண்டு மணிக்கு பவர் கட். அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் என்பதால் எதிரில் இருந்தவங்க பல் கூட தெரியாத அளவுக்கு இருட்டு.(வாயை மூடிகிட்டு இருந்துருப்பாங்களோ)

நோக்கியா டார்ச் உபயத்தில் வேலையைத் தொடராமல் இரண்டு தெரு தள்ளி இருந்த மெயின் ரோட்டு டீக்கடைக்கு வந்தோம். 24மணி நேர சர்வீஸ் என்றாலும் ஸ்டவ் எரியும் வெளிச்சத்துடன் ஒரே ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. (இருட்டுக்கடை டீ). இந்த லொக்கேஷனுக்கு காரணம், காவல்துறை.

இன்று நண்பன் அதிவிரைவில் அஞ்சுமணி நேரம் கரண்ட் கட் என்றதும் இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

தேர்தல் வர்றதுனால கரண்ட் கட் இருக்காதுன்னு ரொம்ப பேர் பேசிகிட்டு இருந்தாங்களே...அப்படின்னு என் சந்தேகத்தை ஒருத்தர்கிட்ட கேட்டேன். அப்படி ஒரு சூழ்நிலையை கொண்டு வரணும்னு அதிகாரத்துல இருக்குறவங்களுக்கும் ஆசையாத்தான் இருக்கும். ஆனா அவங்க வெச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றாங்க?. இப்படி ஒரு பதில் அவர்கிட்ட இருந்து வந்தது. இடுக்கண் வருங்கால் நகுக அப்படின்னு வள்ளுவர் சொன்னதை தமிழருங்க வேத வாக்காவே எடுத்துகிட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு.

ஒருத்தர் தன் பையனை போட்டு அடி பின்னிகிட்டு இருந்தார். "ஏன் சார்...பரிச்சையில பெயில் ஆயிட்டானா"ன்னு கேட்டேன்.

அட போங்க சார்...அப்படி பெயிலாயிட்டு வந்து பெயிலாயிட்டேனு சொல்லியிருந்தாதான்  சந்தோசப்பட்டிருப்பேனே. இவன் பள்ளிக்கூடத்துலயே சேரலை. ஆனா பெயிலாயிட்டேன்னு புலம்புறான். அப்படின்னு சொல்லிட்டு பையனை மறுபடி வெளுக்க ஆரம்பிச்சுட்டார். (இதைப் படிச்சுட்டு தமிழ் நாட்டுல மின்வெட்டே இருக்காதுன்னு சிலர் வாக்குறுதி கொடுக்குறதை நினைச்சு மனச குழப்பிக்க கூடாது. ஓ.கே)