Search This Blog

புதன், 31 மார்ச், 2010

அங்காடித்தெருவும் சூதாட்டமும்


கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.




ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.



பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.



ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.



இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.



இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.



அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.


அங்காடித்தெருவும் சூதாட்டமும்

கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 28.03.2010 அன்று சற்று வித்தியாசமான சுற்று. இதுவரை பல சுற்றுக்களில் பிரகாசிக்க முடியாமல் படங்கள் விலக்கப்பட்டாலும் அந்த இயக்குனர்களிடம் திறமை இருப்பதாக நம்பி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள்.
ஆல்பம் படம் எடுத்து தோற்ற வசந்தபாலன் வெயிலில் ஜெயித்தார். இந்த வாரம் கலைஞர் தொலைக்காட்சியில் சூதாட்டம் என்ற குறும்படம் எடுத்த சாமும் அப்படித்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பெண்ணின் திருமணத்துக்காக இருபத்தைந்தாயிரம் கடன் கேட்கும் வேலைக்காரியிடம்,"ஏன் நாட்டோட பொருளாதாரம் கீழே போகும்போது இவ்வளவு செலவு பண்ணி பொண்ணுக்கு கல்யாணம் பண்ண நினைக்குற. நாலு பேர அழைச்சுட்டு போய் கோவில்ல வெச்சு தாலிகட்டினா போதாதா." என்று கேட்பார்.

ஆனால், வாகனத்துக்கு பேன்சி நம்பர் வாங்க ஒரு லட்ச ரூபாய் செலவழிப்பார். ஆனால் அவரது மேனேஜர், ஐம்பதாயிரத்தை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஐம்பதாயிரத்தை மட்டும்தான் பேன்சி நம்பர் வாங்க லஞ்சமாக கொடுப்பார்.

இந்த தொழிலதிபரிடமே வருமானவரித்துறை ரெய்டு வருவதாக பயமுறுத்தி விலை உயர்ந்த வைரங்களை அவரிடமிருந்து போலி ஆபிசர் வைத்து ஒரு நபர் ஏமாற்றுவார்.

இப்படி பல தொழிலதிபர்களிடம் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும், அவரிடமே இருக்கும் மேலாளர் போன்றவர்கள் தில்லுமுல்லு செய்து கொழுத்து வளருவதும், இவர்கள் சூதாட்டம், லஞ்சம், ரெய்டு, போலீஸ் என்று செலவு செய்வதும் இயல்பாக நடந்துகொண்டே இருக்கிறது என்ற கசப்பான உண்மையை உணர்த்தியது இந்த குறும்படம்.

அங்காடித்தெரு படத்தில் கூட பணியாளர்கள் அவதிப்பட்டு பல தொந்தரவுக்கும் ஆளாகும் நேரத்தில் கருங்காலி போன்றவர்கள் அடுத்தவர்களை இம்சித்துக்கொண்டு, தாங்கள் ஜாலியாகத்தானே இருக்கிறார்கள்.

என் மனதைக் கவர்ந்த இந்த குறும்படம் கலைஞர் தொலைக்காட்சியில் 01.04.2010 இரவு பத்தரை மணிக்கு மறு ஒளிபரப்பாகும்.
******
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது. எடுறா அந்த கீபோர்ட...தட்றா ஒரு தொடர்கதையை அப்படின்னு எனக்குள்ளே ஒரு அவலக்குரல்...ச்சே...அற்புதமான குரலைக்கேட்டு ரெடியாயிட்டோம்ல.
ஏப்ரல் 14, 2010 புதன்கிழமை அன்னைக்கு ஆரம்பம்.

வெள்ளி, 26 மார்ச், 2010

ஆறு வருஷமா என் கேள்விக்கு பதிலே தெரியலையே...இப்பவாச்சும் யாராவது சொல்லுங்களேன்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.
அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

எனக்கு புரியவில்லையே என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். யாருக்கு என்றுதானே கேட்குறீங்க? மாதமும் தேதியும் நினைவில் இல்லை. 2004ம் ஆண்டு ஆனந்த விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்த வாக்கியங்கள்தான் இந்தப் பதிவின் முதல் பாராவில் உள்ளன.

இதைப் படிச்சுட்டு எத்தனை பேர் என் கூட சண்டைக்கு வர்றாங்க, விகடன், சத்குருவுக்கு ஆதரவா பேசுறாங்க, இவனே ஒரு காமெடி பீஸ். இதுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்கணுமான்னு ஒதுங்கிப் போறாங்கன்னு பார்ப்போம்.

அப்பவே விகடன்ல இந்த சந்தேகத்தை தீர்த்து வெச்சிருந்தா நான் இந்த பதிவை எழுதியிருக்கப்போறதே இல்லை.ஆனா இப்பவும் அவரோட கருத்துக்களை பெரிய வேதம் மாதிரி சில பிரபலங்களே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சிருக்குறதுதான் எனக்கு நெருடலா இருக்கு.

அவரோட தியான முறைகள் நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கலாம். அது வரைக்கும் சந்தோஷம். ஆனா அவரோட பல கட்டுரைகள் சராசரி மனிதனை விட்டுட்டு ரொம்ப மேதாவித்தனமா சிந்திக்கிறவங்களுக்குத் தகுந்த மாதிரிதான் இருக்கு.

அதையெல்லாம் அப்புறம் விவாதிக்கலாம்.

என்னோட ஆறு வருஷ சந்தேகத்துக்கு ஒரு விளக்கம் சொல்லுங்களேன்.

மீண்டும் அந்த வாக்கியங்கள்.

"பெண்களுக்கு உதிரப்போக்கு இருக்கும் அந்த மூன்று நாட்களில் அவள் எதைத் தொட்டாலும் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறீர்களே...நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் வளர்ந்து வந்த பத்து மாதங்களும் அந்தக் கழிவு வெளியேறுவதில்லை. அப்படியென்றால் அவ்வளவு கழிவுகளும் சேர்ந்த மொத்த உருவம்தானே ஒவ்வொரு மனிதனும்?..."என்று விளக்கம் கொடுத்திருந்தார் ஒரு குருநாதர்.

இதில் சொல்லியிருப்பது சரியா?


அப்போது எனக்குத் தோன்றிய சந்தேகமே வேறு. ஒரு செடியில் அல்லது மரத்தில் பூத்த பூ வாடி வதங்கி உதிர்ந்து விட்டால் அது கழிவாகிறது. ஆனால் அதே பூ காயாகி கனியாகிவிட்டால் எப்படி அது கழிவாகும்? அதாவது பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருமுட்டை விந்தணு சேராததால் கழிவாகிறது. அது கருவாகி குழந்தையாக உருமாறியதால்தான் கர்ப்ப காலத்தில் வேறு கருமுட்டைகள் தோன்றுவதில்லை என்பது அறிவியல். பிறகு எப்படி குழந்தை பத்துமாத காலத்தில் தாயின் உதிரப்போக்கு வெளியேறாததால் சேர்ந்த கழிவின் மொத்த உருவமாகும்?

இது என் மனதில் தோன்றிய சந்தேகம். பதிலை நீங்க சொல்லுங்க.