Search This Blog

புதன், 25 நவம்பர், 2009

தமிழ் மனப்பாட செய்யுள்கள் பாடத்திட்டத்தில் அவசியமா?(சமச்சீர் கல்வி)





திருக்குறள், நன்னூல், நாலடியார், நெடுநல் வாடை, கலிங்கத்துப் பரணி - ஆகிய பாடல்களின் சில வரிகளையாவது  அடி பிறழாமல் எழுதுமாறு தேர்வுகளில் கேட்கப் படும். அவர்களும் எழுதுவார்கள். ஆனால் பொருள் புரிந்து எழுதுவார்களா? என்ற கேள்விக்கு வேதனையுடன் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.





பாடல்களை படித்து புருந்து கொள்ளும் அளவுக்கு இத்தகைய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால் போதும். அவற்றை அடி பிறழாமல் எழுதும் பயிற்சியை ஆய்வு மாணவர்கள் வேண்டுமானால் விருப்பத்தின் பேரில் செய்யட்டும். பள்ளி மாணவர்களின் தேர்வில் இந்த பாடல்களைக் கொடுத்து புரிந்து கொண்ட விஷயத்தை சொந்த நடையில் எழுத சொல்லுங்கள்.





அப்போதுதான் அந்த செய்யுளின் கருத்து ஒரு மாணவனின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய முடியும்.





இதில் வேறொரு நன்மையையும் இருக்கிறது.  இவற்றில் உள்ள பல நல்ல கருத்துக்கள் சிறு வயதிலேயே மனதில் பதிவதால் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும்போது சிறிதளவாவது தவறு செய்வதற்கு பயப்படுவான். அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் அவன் மனசாட்சி கொஞ்சம் யோசிக்க வைக்கும்.





பாடத்திட்டம் தயாரிப்பவர்களும் கொஞ்சம் யோசிங்க.


தமிழ் மனப்பாட செய்யுள்கள் பாடத்திட்டத்தில் அவசியமா?(சமச்சீர் கல்வி)


திருக்குறள், நன்னூல், நாலடியார், நெடுநல் வாடை, கலிங்கத்துப் பரணி - ஆகிய பாடல்களின் சில வரிகளையாவது  அடி பிறழாமல் எழுதுமாறு தேர்வுகளில் கேட்கப் படும். அவர்களும் எழுதுவார்கள். ஆனால் பொருள் புரிந்து எழுதுவார்களா? என்ற கேள்விக்கு வேதனையுடன் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

பாடல்களை படித்து புருந்து கொள்ளும் அளவுக்கு இத்தகைய விஷயங்கள் பாடத்திட்டத்தில் இருந்தால் போதும். அவற்றை அடி பிறழாமல் எழுதும் பயிற்சியை ஆய்வு மாணவர்கள் வேண்டுமானால் விருப்பத்தின் பேரில் செய்யட்டும். பள்ளி மாணவர்களின் தேர்வில் இந்த பாடல்களைக் கொடுத்து புரிந்து கொண்ட விஷயத்தை சொந்த நடையில் எழுத சொல்லுங்கள்.

அப்போதுதான் அந்த செய்யுளின் கருத்து ஒரு மாணவனின் மனதில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அறிய முடியும்.

இதில் வேறொரு நன்மையையும் இருக்கிறது.  இவற்றில் உள்ள பல நல்ல கருத்துக்கள் சிறு வயதிலேயே மனதில் பதிவதால் ஒருவன் வளர்ந்து பெரியவனாகும்போது சிறிதளவாவது தவறு செய்வதற்கு பயப்படுவான். அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் அவன் மனசாட்சி கொஞ்சம் யோசிக்க வைக்கும்.

பாடத்திட்டம் தயாரிப்பவர்களும் கொஞ்சம் யோசிங்க.

செவ்வாய், 24 நவம்பர், 2009

ஒரே பாடத்திட்டம் இருந்தால் மட்டும் சமச்சீர் கல்வியா? (சமச்சீர் கல்வி)





தமிழ் நாட்டில் தற்போதுள்ள நான்கு விதமான பாடத்திட்டங்களை மாற்றி பொதுவாக ஒரே முறை கல்வியாக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கான வரைவு பாடத்திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.  அரசு ஒருபுறம் இந்த முயற்சியில் இருக்க நம் மக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?





ஒவ்வொருவரும் சமச்சீர் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லும் கருத்து கந்தசாமியாகி விட்டார்கள்.  ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நான்  இந்த முயற்சியில் இறங்க வில்லை. நான் சொல்வது  நிஜமாகவே உருப்படியான யோசனையா என்ற சந்தேகத்துடன்தான் இப்போது எழுதுகிறேன்.





(வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் அரசால் வெளியிடப் பட்டுள்ளது. அதையும் பார்வையிட்டு விடுங்கள்)






நான் கல்லூரியில் பி.காம் முடித்த பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே 75 வயதில் இருந்த ஒரு கணக்கு பிள்ளை என்னிடம் முதலில் என்ன சொன்னார் தெரியுமா?







பி.காம்., எம்.காம் அப்படின்னு பெருசா சொல்லிக்கிட்டு வர்றீங்க. கடைசியா இங்க எதுவும் செய்யத்தெரியல. எல்லாரும் என்னோட .............. அறுக்க வந்துடுங்க அப்படின்னு சலிப்பா பேசினார்.


அடுத்த நாளே அவர் அப்படி பேசினது தப்புன்னு ஒத்துகிட்டார். முதல் நாள் அவர் அப்படி பேசினதும் தப்பு இல்லை.  பாடத்தை படிச்சு முடிச்சவங்க கையில் சர்க்கரைன்னு எழுதுன பேப்பர்தான் அனுபவமா இருக்கு. அதை தின்னா இனிக்குமா? கழுதைன்னு பட்டம் தான் கிடைக்கும்.



ஒரு இடத்துல போய் வேலை செய்யறதுக்கு உள்ள அனுபவத்தை கல்வி கொடுக்குறது இல்லை. தொழில் கல்வியையும், விதிவிலக்குகளையும் விட்டுடுவோம்.





மனப்பாட கல்வி ஒரு இடத்துல வேலைக்கு போறவங்களை தடுமாற வெச்சுடுத்து.





மனப்பாடம் பண்ற முறையை எடுத்துட்டா எப்படி ஒருத்தனோட அறிவை எடை போடுறது...திறமை சாலிகளை கண்டு பிடிக்கிறதுன்னு  நீங்க கேக்குறது காதுல விழுதுங்க. அதுக்கு வழியை விளக்குறதுக்கு  முன்னால ஒரு செய்தியை சொல்லிடுறேன்.





என்கிட்டே அவர் இப்படி பேசினது தப்புதான்னு சொல்ல காரணம் என்னன்னு தெரியுமா?





எனக்கு கல்லூரியில கிடைத்த பேராசிரியர் புத்தகத்துல உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்யாம ஆறு தங்க விதிகளை மட்டும் வெச்சு எப்படி கணக்கு போடுறதுன்னு சொல்லிக் கொடுத்தார்.





கணக்குப் பதிவியல்ல உள்ள ஆறு தங்க விதிகளை மட்டும் மனப்பாடம் செய்தால் உலகத்துல உள்ள எந்த நிறுவனத்தோட கணக்குகளையும் போட்டு பேலன்ஸ் சீட் தயாரிச்சுடலாங்க. ஆனா அந்த விதிகளை எந்த ஒரு நிறுவனத்தோட அன்றாட கணக்கு நடவடிக்கையில  சரியா பொருத்திப் பார்க்குறதுலதான் வெற்றி அடங்கி இருக்கு.





இதுல அந்த ஆறு விதிகளை புரிஞ்சுகிட்டு  மனப்பாடம் செய்தால் போதும்.  அதை எப்படி பயன்படுத்துறதுன்னு விளையாட்டு போல தெரிஞ்சுக்கலாம். ஆனால் எல்லா நிறுவன கணக்குகளோட மாதிரியை வெச்சுகிட்டு மனப்பாடம் செய்தால் எவ்வளவு நேரம் வீண்.?





அவ்வளவு நேரம் செலவு செய்தாலும் எல்லாமும் மண்டையில ஏறணுமே?




இந்த மாதிரி ஒவ்வொரு பாடத்திலும் மனப்பாடம் செய்ய வேண்டியதும் கத்துக்க வேண்டியதும் தனித்தனியா இருந்தா மாணவர்களோட திறன் மனப்பாடம் செய்வதிலேயே கரைந்து போயிடாம வேறு பல சாதனைகளுக்கும் உதவும்.




அதனால்தான் ஒரே பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி இல்லை. மாணவர்களின் திறன் வீணடிக்கப் படாமல் முழுவதும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளும் பாடத்திட்டம்தான் சமச்சீர் கல்வி என்பது என் கருத்து.





இன்னும் புரியலையா?





ஒரு கட்டிடத்தின் முதல் மாடிக்கு செல்ல படிகள் இருக்கும் போது அதன் வழியே செல்லாமல் வெளிப்புற சுவற்றில் பதிக்கப் பட்டிருக்கும் தண்ணீர்க் குழாயைப் பிடித்து மேலே ஏறி வருவதைப் போன்றது முழுவதும் மனப்பாடத்தை மட்டும் நம்பி உள்ள இப்போதைய கல்வி முறை.