Search This Blog

செவ்வாய், 3 ஜூன், 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை

திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின்மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல்மாற்று STEMCELL TRANSPLANATION என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும்செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.
 
கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக்குமார்கவிதாதம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயரமும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரே மகனை காப்பாற்ற பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறிஇறங்கி உள்ளனர்.
 
மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்எனசிவக்குமார்-கவிதா தம்பதியினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக்கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகனமான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர்மருத்துவம் பார்த்துள்ளார்.

திருமதிகவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத்தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.
 
மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது.மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர்சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. 

சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போதுதொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச்சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என சிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக்குழந்தையும் இதே குறைபாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவையில்லை என்று தங்கள்கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்யஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர்இந்தக்குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதைஎட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
 
சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள்ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ளநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில்லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பதுகுறித்து எதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காத்திருக்கிறாள்.

இதனை ஒரு செய்தியாக போகிற போக்கில் உங்களால் வாசிக்க முடியவில்லை அல்லவா. உங்களால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா. அப்படியானால் உங்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் 94867 20219, 97892 70178.


Indian Overseas Bank, Code No.2883, Vilamal, Thiruvarur. Account No.1905க்கு கே.சிவக்குமார் என்ற பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ தங்களால் இயன்ற தொகையை அனுப்புங்கள். வங்கிக் கணக்குக்கும் நேரடியாக அனுப்பி உதவிடுங்கள். வீட்டு முகவரி C38/19, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி-610 104, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இயன்ற உதவியை செய்வோம். காலம் தாழ்த்தாமல்..

.-எஸ்.நவமணி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக