Search This Blog

சனி, 2 நவம்பர், 2013

ரோஷித் ஷர்மா 209

ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டியில் 200 ரன்னை கடந்தார்

தீபாவளி அன்று சரவெடி வாண வேடிக்கை நிகழ்த்தி158 பந்துகளில் 12 நாலு ரன்கள், 16 ஆறு ரன்கள்  உட்பட 209 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள்.

சச்சின்,
சேவக் வரிசையில்
ரோஹித் ஷர்மா.

ஆனால் ரன் வரிசையில்
சேவக் - 219 (149 பந்து)
ரோஹித் ஷர்மா - 209 (158 பந்து)
சச்சின் 200 நாட் அவுட். (147 பந்து)
இந்திய அணியின் மொத்த ஓட்டங்கள் 383/6

அப்படியே இந்த மேட்ச் வின் பண்ணினா நல்லா இருக்கும்.

---------------------
3-11-2013 அதிகாலை அப்டேட் செய்தது இங்கே....

7வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆறு போட்டிகளின் முடிவில், தொடர் 2-2 என சமநிலை வகித்தது. ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். தோகர்டி, மேக்ஸ்வெல், பால்க்னர் ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். மெக்கே வீசிய 50வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்தார். இவர், 158 பந்தில் 16 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 209 ரன்கள் எடுத்து அவுட்டானார்.இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் தோகர்டி 2, மெக்கே, பால்க்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., தோல்வி: இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

ரோகித் சாதனை: 16 சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா, அதிக சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக