Search This Blog

ஞாயிறு, 21 ஜூலை, 2013

திருவாரூரில் திருவிழா

ஒரு குடும்பத்தில் நடைபெறும் விழாவாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமற்றதாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்த விழாவில் எதிர்பார்த்த கூட்டத்தை விட மிக அதிகமாகவே பக்தர்கள் கூடினர். ஒரு விழாவை நடத்துபவர்களுக்கு சந்தோஷமே அதைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்தான்.



இந்த கும்பாபிஷேக பணிகள் காரணமாக தொய்வடைந்திருந்த என் சொந்த அலுவல்களில் கவனம் செலுத்துவதால்  கும்பாபிஷேகம் குறித்த விரிவான பதிவை பின்னர் வெளியிடுகிறேன்.

நாளிதழ் செய்திக்கு அனுப்பிய வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.

திருவாரூர் திருமஞ்சனவீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம் புதுப்பித்து புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் வே.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.மூர்த்தி, என்.ராமு, தொழிலதிபர்கள் சக்தி மரவாடி பழனிகுமார், அமுதா ஏஜென்சி சந்திரசேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கைங்கர்ய பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

1 கருத்து: