Search This Blog

புதன், 30 ஜனவரி, 2013

விஸ்வரூபம் - தியேட்டர்களில் பாதுகாப்பு எப்படி?

திருவாரூர் நடேஷ் திரையரங்கில் விஸ்வரூபம் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி ரிலீசை முன்வைத்து சுமார்40 அடி உயர பேனர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டது. பிறகு அரசின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக அந்த பேனரை உடனடியாக அகற்றி தியேட்டர் வளாகத்துக்குள் வைத்துவிட்டார்கள். ஆனால் படம் ரிலீஸ் என்றதும் பேனர் தியேட்டர் வாசலுக்கு வந்துவிட்டது.

இன்று(30-1-2013) காலை 9 மணி முதலே கமல் ரசிகர்கள் பேண்ட் வாத்தியம், பட்டாசு, இனிப்பு என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தியேட்டர் வளாகத்துக்குள் மட்டும்தான் வெடி வெடிக்கவும், இனிப்பு வழங்கவும் போலீசார் அனுமதித்தனர். இது ஒரு வகையில் நல்லதுதான். சாதாரண அகலமுள்ள சாலையில் ரசிகர்கள் கூட்டம் போட்டால் போக்குவரத்து பாதிக்கும். எந்த படத்தையும் விரும்பாமல் அன்றைய பிழைப்பை ஓட்டினால் போதும் என்ற மனநிலையில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஏராளமாய் இருக்கலாம். அவர்களுக்கு இடையூறு தராத வகையில் ரசிகர்களை ஒழுங்குபடுத்தியதுடன் தியேட்டரிலும் எந்த விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாத வண்ணம் போலீசார் பாதுகாப்பை கடுமையாக்கியிருப்பதை பாராட்டலாம்.

இந்த சின்ன ஊரிலேயே இப்படி என்றால் பெரிய நகரங்களில் மிகக் கடுமையாக போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது. விஸ்வரூபம்னு பதிவுக்கு தலைப்பு வெச்சிட்டு வழவழன்னு எழுதியிருக்கேன்னு நினைக்காதீங்க. இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா...



பின் குறிப்பு: இன்று30-1-2013 பகல் 1.30 நிலவரப்படிதிருவாரூரில்விஸ்வரூபம்திரையிடப்படவில்லை.
 

1 கருத்து:

  1. "இப்போவெல்லாம் பெரிய பெரிய ஆளுங்களே பொதுவெளியில வாயைத்திறக்க முடியலை. நான் எதையாச்சும் சொல்ல... பின்விளைவுகளை சந்திக்க என்னால முடியாதுங்கய்யா.."

    YES

    பதிலளிநீக்கு