Search This Blog

சனி, 12 ஜனவரி, 2013

போன 12க்கும் இந்த 12க்கும் என்ன வித்தியாசம்

12-12-12 என்று அபூர்வ தேதி ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது என்று கடந்த மாதம் அச்சு ஊடகங்கள் மிக அதிகமாகவே சிறப்பிதழ் அது இது என்று தீயாக வேலை செய்தன.

2001 ஆம் வருசம் 1-1-1, 2002ஆம் வருசம் 2-2-2, இப்படி 2009 வரைக்கும் வரிசையா அப்படித்தான். இதுல 12-12-12 க்கும் மட்டும் அந்த பிரபலத்துக்காக இவ்வளவு விளம்பரம் தேவையான்னு ஒரு எண்ணம் என் நினைவுக்கு வந்து தொலைச்சது. அதை சொல்லிட்டு நான் தப்பிச்சுட முடியுமா? அதனால வாயைத் திறக்கலை.

டிசம்பர் 12 என்ற மந்திர சுழலில் டிசம்பர் 11 பாரதியார் பிறந்ததினம் ஊடகங்களால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை. அவ்வளவு ஏன், நான் வசிக்கும் ஊரிலும் எந்த பள்ளியிலும் பெரிதாக பாரதியார் பிறந்த நாளை யாரும் கொண்டாடியதாக தெரியவில்லை.

ஆனால் விவேகானந்தரின் 150வது பிறந்ததினம் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. வரும் 21 ஆம் தேதி வரை திருவாரூர் தெற்குவீதியில் விவேகானந்தர் தொடர்புடைய புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. 2013 ஜனவரி 23 அன்று திருவாரூர் வாசுநிவாஸ் திருமண மண்டபத்தில் தமிழருவிமணியன், சாலமன்பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இன்று 12-01-2013-ல் சில இடங்களில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.

கல்லூரியில் என்னுடன் படித்த இரண்டு வகுப்புத்தோழிகளுக்கு இன்று பிறந்த தினம். கரண்ட் பிரச்சனையால நமக்குதான் ஒரு நாளைக்கு ஆறு தடவை லஞ்ச்பிரேக் கிடைக்குது. அந்தப்புள்ளைங்க காலையில அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்புற நேரத்துல ஏன் போன் பேசி இடையூறு செய்யணும்னு ஒரு எண்ணம். அதனால  அவர்களுக்கு காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாழ்த்து சொன்னதோடு சரி.

போன ஆண்டு 12-01-2012 அன்று ரொம்ப நாளா எங்களுக்கு தலைவலி கொடுத்த கோயில் ஆக்கிரமிப்பு அந்த ஆக்கிரமிப்பாளராலேயே காலிசெய்யப்பட்டது. ஆக்கிரமிப்பு இல்லாததால சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னால நிம்மதியா அந்த கோவில்ல சுவாமி தரிசனம் செய்தோம்.

ஆக்கிரமிப்பை சுத்தமாக காலி செஞ்ச அந்த ஆசாமி மின்சார மெயின்சுவிட்ச், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை பெயர்த்து உடைத்து ஒன்றுக்கும் உதவாமல் செய்துவிட்டார். அது ஒரு பிள்ளையார் கோவில். அந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. சாயங்கால பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு தான் வந்து திறக்குறோம். சாமிகும்பிட வந்தவங்க, கோவில்ல விசேசம் நடக்குற நாள்ல போய் இப்படி செஞ்சுட்டு போயிருக்காரேன்னு புலம்புனாங்க. அவங்களுக்கு அது அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா ஆக்கிரமிப்பு செஞ்ச பார்ட்டி இப்படி எதையாவது உடைக்காம போயிருந்தாதான் நான் ஷாக் ஆகியிருப்பேன். அவரோட நடவடிக்கைகளை பார்த்து கோயிலுக்குள்ளாற இருக்குற சுவிட்ச் போர்டுல ரொம்ப எளிமையா கனெக்சன் கொடுக்குற மாதிரிதான் தயார் செய்து வெச்சிருந்தேன். அதனால மத்தவங்க மாதிரி புலம்பாம தயாரா நான் உள்ளே வெச்சிருந்த ரெண்டு வயரை பக்கத்துவீட்டுல கொடுத்து 5 நிமிசத்துல மின்விளக்கை எரிய வெச்சுட்டேன். அப்புறம் அன்னைக்கு ராத்திரி 9 மணி வரை, ஆக்கிரமிப்பு பார்ட்டி மட்டுமின்றி அவரது குடும்பமே லைட் எரிஞ்சதைப் பார்த்து வயிறு எரிய இங்கும் அங்கும் அலைஞ்சது தனிக்கதை.

அந்த கோவில் ஆக்கிரமிப்பு பற்றி ஒரு கட்டுரையை நான் கல்கி வார இதழின் போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அது பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எனக்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. அந்த கட்டுரை அச்சான கல்கி இதழ் தேதி 22.01.2012. அந்த இதழ் கடைகளில் விற்பனைக்கு வந்த தேதி 14.01.2012. ஆனால் ஆக்கிரமிப்பு 12.01.2012 அன்றே அகற்றிக்கொள்ளப்பட்டது.

என்னவோ சொல்லப்போற மாதிரி ஆரம்பிச்சு இப்படியா மொக்க பதிவு போடுறதுன்னு கோபப்படாதீங்க. இந்த 12ஆம் தேதி வந்ததும் இப்படி ஒருசில சம்பவங்கள் நினைவுக்கு வந்துடுச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக