Search This Blog

புதன், 7 நவம்பர், 2012

பீட்சா - ரசிகர்களுக்கு ஏன் பிடிச்சது?

எல்லாரும் விமர்சனம்னுங்குற பேர்ல படத்தை தியேட்டர்ல போய் பார்த்துக்குங்க... ஒரு வசனம், ஒரு சீனைப் பத்தி கூட பேசமாட்டோம்னு எழுதிகிட்டு இருக்காங்க. நானும் விதிவிலக்கா என்ன?

நான்பேச நினைப்பதெல்லாம்னு ஒரு புத்தகம். இயக்குனர் விக்ரமன் எழுதினதுன்னு நியாபகம். அதுல "ஒரு படத்தை பார்த்த ரசிகர் தியேட்டரை விட்டு வெளியில வந்ததுக்கு அப்புறம் ஒரு லட்சம் தப்பைக்கூட கண்டுபிடிச்சு விமர்சனம் செய்யலாம். ஏன்னா விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எல்லா வித மனிதர்களையும் திருப்திப்படுத்துற மாதிரி யாராலயும் படமே எடுக்க முடியாது. கதையமைப்புல என்ன காட்சி வருதோ அதுக்கு தகுந்த ரியாக்சன் மட்டும்தான் ரசிகர் முகத்துல இருக்கணும். ஆனா படத்துல ஒரு சீன் முடிஞ்சு அடுத்த சீன் ஓடிகிட்டு இருக்குறப்ப அதுக்கு முன்னால வந்த சீனைப் பத்தி தப்பு கண்டுபிடிச்சு கமெண்ட் அடிச்சா படம் படுத்துடுச்சுன்னு அர்த்தம்.' அப்படின்னு எழுதியிருந்தாருன்னு நினைக்குறேன்.

பீட்சா விசயத்துல என்னைப் பொறுத்தவரை அது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த படத்தோட வெற்றிக்கு காரணமே, படத்தைப் பற்றி ஒண்ணு ரெண்டு விசயத்தை நெகட்டிவா சொல்றதை படம் பார்த்து முடிச்சுட்டு தியேட்டரை விட்டு வெளியில வந்த பிறகுதான் பேசுறாங்கன்னு நினைக்குறேன். இந்த படத்துல வர்ற காட்சியமைப்பு வேற எந்த பிறமொழிப்படத்துலயும் வரவே இல்லைன்னு சத்தியம் செஞ்சு சொல்ல முடியாது. அதே மாதிரி கிளைமேக்ஸ் காட்சியும் ஒரு சில ஆங்கிலப்படங்கள்ல வந்ததுதான். சொல்லப்போனா நான் 1996-98 காலகட்டத்துல ஆங்கில திரைப்படங்கள் ஓடுற தியேட்டர்ல ஆப்ரேட்டர் அசிஸ்டெண்ட்டா இருந்தப்ப ஓடி ஓடி அறுந்து போன ரீலுக்கு சொந்தமான பல படங்களை நினைவூட்டிய கிளைமேக்ஸ்தான். (பாலியஸ்டர் பிரிண்ட்ல ரெக்கார்டிங் துல்லியம் குறைவுன்னு, சாதா பிரிண்ட் பிலிம்லதான் நல்ல நல்ல ஆங்கிலப்படங்கள் வரும். அந்த ரீல் ஓடும்போதே அறுந்து போறதும் உண்டு.)

திருவள்ளுவரே வந்து அர்த்தம் சொன்னாதான் அந்த திருக்குறளை இந்த அர்த்தத்துலதான் எழுதியிருப்பார்னு நம்புவேன்னு சொன்ன ஒரு காலேஜ் புரொபசரை நான் பார்த்திருக்கேன். அதனால சிலரோட பார்வையில எல்லா படங்கள்லயும் ஏதாவது மைனஸ் கண்டிப்பா இருக்கும். ஆனா அந்த மைனஸ் படம் உறுத்திகிட்டே இருந்து படம் ஓடும்போதே தியேட்டர்ல ரசிகர்களை நெளிய வைத்தால் படம் காலி. வெளியில வந்து பேசினா, கொஞ்ச நேரம் நம்ம கண்ணையே மறைச்சு படம் காட்டிட்டாங்களே அப்படின்னு பாராட்டத்தான் தோணுது.

என்னுடைய 10 வயசுல இருந்து 18 வயசு வரை திரையரங்களுக்கு வரும் 90 சதவீத படங்களை பார்த்துடுவேன். அதன் பிறகு கல்லூரி படிப்பு முடியும் வரை பார்க்கும் படங்களின் எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சுடுச்சு. அதனால நான் பெரும்பாலும் விமர்சனம் எழுதுறது இல்லை. அது தவிர கேபிள்ல ஒரு படம் போடும்போது திடீர்னு வர்ற விளம்பரங்கள் குறைந்தது அரைமணி நேரத்துக்கு நீளும். நடுவுல வேற சேனல் மாறினா எந்த சேனல்ல அந்த படம் ஓடுனுச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது. இந்த லட்சணத்துல எப்படி படம்பார்த்து கதை சொல்றது சாரி...விமர்சனம் பண்றது.

அதான் ரொம்ப நாள் கழிச்சு ஊரோட ஒத்து ஊத  சாரி ... விமர்சனம் பண்ண முயற்சி பண்ணியிருக்கேன். அதுக்காக படத்தைப் பத்தி என்ன எழுதியிருக்கன்னு கேட்காதீங்க. படத்தின் இயக்குனர் சில பதிவர்கள் கிட்ட படத்தோட கதையை தயவு செய்து  எழுதிடாதீங்கன்னு சொன்னாராம். நம்மகிட்ட நேரடியா சொன்னா என்ன, சக பதிவர்கள்கிட்ட சொன்னா என்ன. இயக்குனரோட வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கணும்ல. (நீயெல்லாம் பதிவரான்னு யாரு சார் பல்லைக் கடிக்கிறது?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக