Search This Blog

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அகதிகள் எப்படி இருப்பார்கள்?

அத்தியாயம் - 1

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சாம். அதுல எட்டாம் வகுப்பு படிக்கிற புள்ளை ஒண்ணு, வாத்தியாரைப் பார்த்து "ஐயா, இங்க பக்கத்து தேசத்துல அகதி அகதின்னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன? அவங்க எப்படி இருப்பாங்க! அவங்களை நாங்க பார்க்கணும்னா அந்த தேசத்துக்கு போகணுமா'' அப்படின்னு கேட்டுச்சாம்.

image credit Saattai Tamil movie அதுக்கு அந்த வாத்தியாரு, "அகதிங்களை பார்க்க ஏன் அந்த நாட்டுக்கு போகணும்? நீங்க கூட அகதிதான்.'' அப்படின்னு சொன்னதும் எல்லா புள்ளைங்களும் ஷாக் ஆகிட்டாங்களாம்.(கரண்டே இல்லை. அப்புறம் எப்படி ஷாக் ஆக முடியும்னு குதர்க்கமா கேட்கப்பிடாது.)

அப்போ அந்த வாத்தியாரு, "புரியலையா? நம்ம நாட்டுல எல்லா ஊருலயும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கரண்ட் கொடுக்காம பியூசை புடுங்கிட்டு வெண்ணை நகரத்துல மட்டும் வெளி நாட்டு கம்பெனியோட கக்கூசுக்கு கூட குளிர்சாதன வசதி செஞ்சு கொடுத்து அதுக்கு 24 மணி நேரமும் கரண்ட் கொடுக்குறாங்களே. இப்படித்தான் ஒரு நாட்டோட அகதிகளை நடத்துவாங்க.

அது மட்டுமில்லை. ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரத்தை தனியார்கிட்ட 20 ரூபாய்க்கு வாங்கி, அதை வெளிநாட்டு கம்பெனிக்கு 2 ரூபாய்க்கு வித்துட்டு, பொதுமக்களால தான் நஷ்டம்னு சொல்லுவாங்க. அப்படி ஓசி கரண்ட் வாங்கின கம்பெனி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுறேன்னு சொல்லி வரிச்சலுகையை எல்லாம் வாங்கிட்டு தயாரிக்கிற பொருளை நம்ம நாட்டுலேயே வித்துடும். அதுக்கு உதாரணம் போக்கியா கம்பெனி.

இன்னைக்கு இது போதும். கரண்ட் இல்லாத நேரத்துல நீங்க அதிகமாக ஷாக் ஆக வேணாம். மிச்சத்தை இன்னொரு நாள் ஆகிக்கலாம்!'' அப்படின்னு வாத்தியார் வகுப்பை முடிச்சுட்டாராம்.

-தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக