Search This Blog

திங்கள், 24 செப்டம்பர், 2012

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

வெளி நாட்டுக்காரங்க இங்க சூப்பர் மார்க்கெட் திறந்தா என்ன விளைவு வரும்னு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்.

அவரு சொன்னாரு, "இன்னைக்கு ஒரு கிலோ 50 ரூபான்னு விக்கிற பொன்னி அரிசியை 1 கிலோ 25 ரூபான்னு தருவான். அதேசமயம், ஒரு மூட்டை நெல்லுக்கு அரசாங்கம் 300 ரூபா கொடுத்தா இவன் 700 ரூபா தர்றேன்னு சொல்லுவான். நாமளும் பல்லைக்காட்டிகிட்டு அவன் பின்னால போயிடுவோம்.

கொஞ்ச நாள்ல விவசாயிகிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வெளி நாட்டு கம்பெனி தவிர வேறு யாரும் இல்லைன்னு ஒரு நிலைமை வந்துடும். அப்போ, நீ ஒரு மூட்டை (100 கிலோ ) நெல்லை 10 ரூபாய்க்கு கொடு. இல்லைன்னா நிலத்தை என் கிட்ட கொடுத்துட்டு எங்கயாச்சும் போய் செத்துடு அப்படின்னு சொல்லுவான். அப்போ யார் என்ன செய்ய முடியும்?

அதே மாதிரி ஒரு சில மாதங்கள்லேயே நாம மளிகை பொருட்கள் வாங்க அண்ணாச்சி கடை மாதிரி எந்த கடையும் இல்லாம போயிடும். அப்போ ஒரு கிலோ சாதா அரிசி 500 ரூபா. காசு இருந்தா வா. இல்லைன்னா பட்டினி கிடந்து சாவு. அப்படின்னு சொல்லிடுவான்.

இதுதான் நடக்கும்"னு சொன்னாரு.

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

கொசுறு:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின் தடை - நாளிதழில் செய்தி.

என்னுடைய சந்தேகம்:

எங்க ஊர்ல டிரான்ஸ்பார்மர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்து மேல கரண்ட் இல்லையே?

2 கருத்துகள்: