Search This Blog

வியாழன், 26 ஏப்ரல், 2012

ஊரில் பலர் அறியாத ரகசியம்

ஊரறிந்த ரகசியம் தெரியும். அது என்ன ஊர் அறியாத ரகசியம்?....இது கூட தெரியாதா?. நம்ம அரசியல் வியாதிகள் செய்யுறதுல 99 சதவீதம் இப்படிப்பட்ட வேலைகள்தான். அவங்க பேரைச் சொல்லி அதிகாரிங்க அடிக்கிற கொள்ளையும் இதுலதான் சேரும்.


ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண்ணி திருவிழாவுக்காக கிட்டத்தட்ட 15 நாட்கள் நிறைய ஊர்கள்லேர்ந்து சிறப்பு பேருந்துகள் திருவாரூர் வழியா போறதைப் பார்த்திருக்கேன். அது அவசியமும் கூட. அதைத் தவிர்த்துப்பார்த்தா திருவாரூர் தேர்திருவிழா அன்று ஒரு நாள் மட்டும் சில சிறப்புப்பேருந்துகள் வரும். ஆனா சமீப காலமா அப்பப்ப திருவாரூர்ல சிறப்புப்பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கரோட பாடாவதி பேருந்து நிற்கும். அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை.

சாதா பேருந்துக்கும் சிறப்புப்பேருந்துக்கும் என்ன வித்தியாசம்னுதானே கேட்டீங்க? சாதா பேருந்துக்கும் எக்ஸ்பிரஸ்னு ஸ்டிக்கர் ஒட்டின பேருந்துக்கும் உள்ள வித்தியாசம்தான். சரி...இப்படி சிறப்பு பேருந்து இயக்கும்போது சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கட் விக்கிற மாதிரி இருபது, முப்பதுன்னு பிளாட் ரேட்டா டிக்கட் போட்டு வசூலிக்கிறாங்களே. நஷ்டத்துல ஓடுற பஸ்சுக்கு முட்டு குடுக்குறாய்ங்கன்னு பார்த்தா, போக்குவரத்துக்கழக கிளைமேலாளரும், கோட்ட மேலாளரும் சிறப்பு பேருந்து பேரைச் சொல்லி எப்படி கொள்ளை அடிக்கிறாங்கன்னு ஒரு தகவல் கசியுது.

ரெகுலர் டிரிப்பை கேன்சல் செஞ்சுட்டு திடீர்னு ஒரு சிறப்பு டிரிப் அடிச்சா சுமாரா 600 ரூபா டீசலுக்கு எக்ஸ்ட்ரா செலவாகுறதோட, டிரைவர், கண்டக்டர் படிக்காசு தலா 40 ரூபாயாம். இது போகட்டும். அந்த சிறப்பு பேருந்தையும் பகல்ல அவ்வளவா இயக்க மாட்டாங்க. அப்ப எப்போ?  நடுராத்திரி 12 மணியிலேர்ந்து 3 மணி வரைக்கும் அடிச்சா, இந்த சிறப்பு பேருந்து இயக்குறது அந்த வழிகள்ல இருக்குற ஊருக்கு போறவனுக்கே தெரியாதாம். ஆளில்லா கடையில நல்லாவே டீ ஆத்துறாங்கப்பா. உண்மையிலேயே 4 பஸ் வழியுற அளவுக்கு கூட்டம் நிற்கும்போது அந்த வழியில ரெகுலரா போற பஸ்சைக்கூட நிறுத்துற கேவலம் நடக்கும்.

ஊருக்குள்ள எவனுக்கும் தெரியாம சிறப்புப்பேருந்து இயக்குறதுக்கு கோட்ட மேலாளருக்கும், கிளை மேலாளருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாம். ஆனா இந்த மாதிரி டிரிப்புகளில் 200 ரூபா அல்லது 300 ரூபாய்தான் வசூல் ஆகுமாம். அட துரோகிகளா? இப்படி நீங்க கொள்ளை அடிச்சீங்கன்னா பஸ் ரோட்டுல எப்படிடா ஓடும். நஷ்டத்துல ஓடி ஆத்துல...சாரி... அதுல வெறும் பள்ளம் மட்டும்தான் இருக்கு. கடல்ல தான் முழ்கும். இதை எல்லாம் சரி செய்ய முடியாம பஸ் டிக்கட்டை மனசுல 500 கிலோ வெயிட்டோட வேதனையோடதான் ஏத்திருக்கேன்னு அறிக்கை வேற.

ஒரு படத்துல விவேக் பேசும் வசனம். ''ஏண்டா...நீங்க பிச்சைக்காரியை கூட விட்டு வெக்கலியான்னு''. அப்படித்தான் இந்த அரசியல் வியாதிங்க இப்படி போக்குவரத்துக்கழக கிளை மேலாளர், கோட்ட மேலாளர் போஸ்டிங் போடுறதுக்கு எத்தனை லட்சம், எத்தனை கோடி லஞ்சம் வாங்குனானுங்களா? அதை உங்க மூளையை பயன்படுத்தி ஜனங்க .......................குள்ள கையை விட்டு குடைஞ்சு எடுத்து சாப்பிடுங்க அப்படின்னு தண்ணி தெளிச்சு விட்டுருப்பாங்க.

அது சரி...அரசியல் வியாதிங்க சாப்பிடுற டிபனுக்கு பொதுஜனம்தான் பில் மட்டும் இல்லை...டிப்ஸ் கூட கொடுக்கணும்னு தலையெழுத்து.

சிறுதுளி பெருவெள்ளம்னுங்குற கான்செப்டை யார் புரிஞ்சு வெச்சிருக்காங்களா இல்லையோ...இந்த அரசியல் வியாதிங்க நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காங்கப்பா. இந்தியாவுல இருக்குற 120 கோடி மக்கள் கிட்ட இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒத்தை ரூபாய உருவுனா கூட 120 கோடியாச்சுன்னு ப்ளான் பண்ணி நம்ம தோலை உரிச்சு தின்னுகிட்டு இருக்காங்க.

இன்னும்தான் இந்த அரசியல் வியாதிங்களை நாமும் நம்பிகிட்டுதானே இருக்கோம்.

1 கருத்து:

  1. உண்மையாவே பலர் அறியாத ரகசியம் தாங்க ஆனா என்ன பண்ண முடியும் பயணம் தொடர்ந்து கொண்டே தான இருக்கு நீங்க சொல்ற மாறி// ஒத்தை ரூபாய உருவுனா கூட 120 கோடியாச்சுன்னு ப்ளான் பண்ணி நம்ம தோலை உரிச்சு தின்னுகிட்டு இருக்காங்க.
    சிந்திக்க வைக்கும் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .

    பதிலளிநீக்கு