Search This Blog

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

யாரைத்தான் நம்புவதோ...

எதோ ஒரு பத்திரிகையில் தேமுதிக-கம்யூனிஸ்ட் நீங்கலாக மற்ற அனைவரும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவது குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்கள்.

சிங்கம்னா சிங்கிளாத்தான் வரும் என்ற ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் வசனத்தை வைத்து தமிழக கட்சிகள் எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அந்த கார்ட்டூன் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

எம்.எல்.ஏ , எம்.பி தேர்தல் எல்லாம் எப்படியோ...இந்த உள்ளாட்சி தேர்தலில் மட்டும் சாமானிய மக்கள் நெருங்க முடியாத தொலைவில் இருப்பவர்கள் வெற்றி பெறுவது ரொம்பவும் கஷ்டம்.

பொதுப்பிரச்சனைகளைத் தீர்க்க தொடர்ந்து ஏதாவது செய்துகொண்டிருப்பவர்களைத் தவிர மற்றவர்களை மக்கள் சுலபமாக ஒதுக்கிவிடுவார்கள்.

நாங்கள் குடியிருக்கும் வார்டில் முக்கியமாக 4 கட்சியினர் போட்டியிடுகிறார்கள். அதில் இரண்டு பேர் இளைஞர்கள். ஒருவர் என் பள்ளித்தோழன், மற்றொருவர் அருகில் குடியிருப்பவர். ஒவ்வொருவருமே என்னை பிரச்சாரத்துக்கு அழைத்தார்கள்.

நான் என்னுடைய வேலைப்பளுவை காரணம் காட்டி மறுத்துவிட்டேன். நான் வாக்களிக்கப்போவது யாருக்கு என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நான் யாருடனாவது பிரச்சாரத்துக்கு சென்றால் நான் அவருக்குத்தான் வாக்களித்தேன் என்று (அவருக்கு வோட்டு போடவில்லை என்றாலும் ) மற்றவர்கள் நம்பி விடுவார்கள்.

ஏன் இந்தவம்பு?

புதிய உறுப்பினர்கள் பதவியேற்றவுடன் மூன்று ஆண்டுகளாக பாதாள சாக்கடைக்காக எங்கள் தெருவில் மட்டும் தோண்டிக்கொண்டே இருக்கும் வேலையை அடுத்த 5 வருஷத்துக்குள்ளாவது முடியுங்கள் என்று மனு கொடுப்பேன். வேற என்ன செய்யுறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக