Search This Blog

வெள்ளி, 20 மே, 2011

இந்த ஆட்சியில் தமிழக முதல்வருக்கு ஏழாம் நம்பர் ராசியாமே...

 மனித முயற்சிகளுக்கு முன்னால் நாளும் கோளும் என்ன செய்யும் அப்படின்னு உள்மனசு சொன்னாலும் எனக்கு ஏற்படும் தொடர்தோல்விகளின் போது இதைப் பற்றி மனசு நினைக்காமல் இருப்பதில்லை.

ஒரு நாளிதழில் வெளிவந்த முதல்வரின் தற்போதைய ஏழாம் எண் செண்டிமெண்ட் இங்கே.

தேசிய தமிழ் நாளிதழ் வரைக்கும் வேலைக்குப்போய் பார்த்துட்டு அங்க கிடைச்ச சம்பளம் என்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கு ஒத்து வராததால சொந்த தொழில்னு இறங்கிட்டேன்.

இதுல ஏழாம் எண் செண்டிமெண்ட் எங்க வருதுன்னுதானே கேட்குறீங்க. நான் பிறந்த தேதி ஏழு. என்னோட பேரும் இன்ஷியலோட ஏழாம் எண்ணுல அமைந்துட்டதால மற்றவங்க லிப்ட்-ல ஏறி பத்தாவது மாடியில அலட்டிக்காம போய் இறங்குவாங்க. ஆனா நீங்க சுவத்துல இருக்குற பைப்பை பிடிச்சு சிரமப்பட்டு மூஞ்சி கை கால் எல்லாம் காயமாகித்தான் அந்த மாடிக்கே போவீங்க. அப்படின்னு சொன்னார்.

இதை மேலோட்டமா பார்த்தா மூட நம்பிக்கையா தெரியும். ஆனா சிலர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு புலம்புற அளவுக்கு செய்யுற முயற்சிகள் எல்லாத்துலயும் சறுக்கி விழுந்துகிட்டே இருப்பாங்க.

ஒரு கலையரங்கத்துல ஆயிரம் நாற்காலி இருக்கும். அதுல தொள்ளாயிரத்து ஐம்பது காலியாவும் இருக்கும். ஆனா என்னை மாதிரி சறுக்கு மர ஆசாமி போய் உட்காருற நாற்காலி மட்டும் உடைஞ்சு இருக்கும்.

சிலர் போக வேண்டிய ஊருக்கு எதிர்திசையில போற பஸ் மட்டும் தொடர்ந்து ரெண்டு மணி நேரத்துக்கு வந்து எரிச்சலடையச்செய்யுற மாதிரி.

இந்த கருத்தை மையமா வெச்சு ஒரு ஆங்கிலப் படம் வந்துச்சாம். அதைப் பற்றிய விமர்சனம் கூட நெட்ல எதுலயோ படிச்ச நினைவு.

நீங்க பத்து முயற்சி செய்யுறதுல ஒன்பது தோல்வி அடையுதா. வேற வழியே இல்லை. பத்து வெற்றி கிடைக்கணும்னா நூறு முயற்சி செய்துதான் ஆகணும்-இதுவும் நான் ஒரு புத்தகத்துல படிச்சதுதான்.

கடந்த சில வருஷங்களா மின்வெட்டுக்கு நாம பழகிட்டோம். அதனால வி.ஐ.பி வருகை அன்னைக்கு, இன்னும் சில காரணங்களால என்னைக்காவது ஒருநாள் பவர் கட் ஆகலைன்னா, ஏன் இன்னும் கரண்ட் போகலைன்னு தவிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.

தினமும் சொன்ன நேரத்துக்கு கரண்ட் கட் ஆகிடுச்சுன்னா மற்ற நேரங்கள்ல மின்வெட்டு இருக்க வாய்ப்பு கொஞ்சம் குறைவு. ஆனா வழக்கமான நேரத்துல மட்டும் கரண்ட் கட் ஆகலை, அந்த நாள் பூரா அல்லது மறுநாள் இஷ்டத்துக்கு வெட்டு கொடுத்து நம்மளை கதற அடிச்சுடுறாங்க. அதனால இப்ப எல்லாம் வழக்கமான நேரத்துக்கு கரண்ட் கட் ஆகாம கொஞ்சம் தாமதமானா கூட எல்லார் மனசுலயும் தவிப்பு.

நானும் இதே மாதிரி, செய்யுற காரியங்கள்ல ஒண்ணு ரெண்டு சமயம் கொஞ்சம் சுலபமா முடிஞ்சுட்டா ஏன் இப்படின்னு ஒரே கவலையா ஆயிடுது.

"என்ன பாஸ் போன வாரம் அடிக்க வர்றேன்னு சொன்னீங்க...வரவே இல்லை..."-இந்த ரேஞ்சுக்கு எனக்கும் தோல்விகள் பழகிடுச்சு.(நான் சொல்றது என்னுடைய வாழ்க்கை முறைகள்ல செய்யுற முயற்சிகளின் தோல்வியைப் பத்தி...அது புரியாம, அரசியல் வியாதிகள்ல இருந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம மாநில அளவுல சூப்பர் மார்க் எடுத்தவங்கன்னு எல்லாரோட கஷ்டத்தோடயும் ஒப்பிட்டு இதுக்கெல்லாம் புலம்பலான்னு என்னைத் திட்டக் கூடாது.)

அவனவன் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளை அடிச்சுட்டு அதுல ஒரு சதவீத்தை எடுத்து பிரச்சனைகளை சமாளிக்கிறாங்க.

ஆனா மத்தவன் ஒரு வேலைக்கு ஆயிரம் ரூபாய் வாங்குற இடத்துல எனக்கு நானூறு ரூபாய் கிடைக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது. என்ன கொடுமை சார் இது.?

வழக்கமான டிசைன் வேலைகளோட, இப்பதான் நாளிதழ் விளம்பரங்கள் ஒண்ணு ரெண்டு செய்ய சின்னசின்னதா செய்ய ஆர்டர் வருது.

சரி...சரி...நியூமராலஜி பற்றிய புலம்பலை விட்டுட்டு போய் பிழைப்பைப் பாருன்னுதானே சொல்றீங்க...இதோ கிளம்பிட்டேங்க...


அரைப்பக்கத்துக்கும் சற்று அதிகமான உயரத்தில் தினகரன் 19.5.2011 திருவாரூர், நாகை பதிப்பில் வந்த விளம்பரம்.(பேப்பர் பிரிண்ட் ஆகுற கடைசி நேரத்துல அவசர அவசரமா பவர் கட் ஆன நேரத்துல செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சத்துல முடிச்சு அனுப்பிய விளம்பரம்.)

மதிய உச்சி வெயில்ல பவர் கட் ஆன நேரத்துல வியர்வை கீ-போர்டுல விழுந்துடுமோன்னு பயந்து கிட்டே தயார் செய்த விளம்பரம்.

 *****

முன் குறிப்பு:
பிளாக்கர்ஸ்ல பலர் தேர்தல் முடிவு அன்னைக்கு இஷ்டத்துக்கு நாட்டாமை பண்ண ஆரம்பிச்சுடுவாங்கன்னு சர்வீசை நிறுத்தி வெச்சது நல்லதுதான்னு நினைக்குறேன். நாம காசு குடுத்து வாங்குன டொமைன்னா இப்படி நிறுத்தி வெச்சுருப்பாங்களா...இப்பவாச்சும் இலவசத்தால என்னென்ன மாதிரி சங்கடங்கள்னு நல்லா புரிஞ்சா சரி.

3 கருத்துகள்:

  1. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



    Share

    பதிலளிநீக்கு
  2. சரி...சரி...நியூமராலஜி பற்றிய புலம்பலை விட்டுட்டு போய் பிழைப்பைப் பாருன்னுதானே சொல்றீங்க...இதோ கிளம்பிட்டேங்க...


    ...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்களே சொல்லிட்டீங்க....

    பதிலளிநீக்கு
  3. mm iniku kalaila kudukudupai karan veetuku vanthu sonanla ungaluku jun 5 eh nala nal arambichuduchunu........ apram ena enjoy

    பதிலளிநீக்கு