Search This Blog

வியாழன், 14 ஏப்ரல், 2011

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 ஐநூறு தமிழ் அறிஞர்கள் கூடி ஆய்வு (?!) செய்து தை 1 அன்று தமிழ் புத்தாண்டு என்று சொன்ன பிறகும் நீ எப்படி சித்திரை முதல் தேதியை தமிழ் புத்தாண்டு என்று கூறலாம் அப்படின்னு ஆட்டோவெல்லாம் அனுப்பிடாதீங்க.

தமிழ் பஞ்சாங்க முறையில் வெறும் மூடநம்பிக்கையாக பார்க்காமல் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் வான சாஸ்திர அறிவியல் முறையாக நினைத்துப்பாருங்கள். பிரமிப்பு வரும்.

மனிதன் என்றால் கண்கள், கால்கள், காதுகள், கைகள் போன்றவை இரண்டு என்ற எண்ணிக்கையிலும், இன்னும் பல விஷயகள் சுருதி பிசகாமலும் தான் பிறந்து வருகிறான். அதே போல் அவனுடைய மனமும், அவன் ஈடுபடும் காரியங்களும் அவற்றின் வெற்றிகளும் எதோ ஒரு வரையரைக்குட்பட்டுதான் நடக்கின்றன.

 இதை மிகச் சரியாக ஜோதிடக் கலை மூலமாக கணிக்க முடியும். இதை பலருக்கும் சரியாக செய்ய முடியவில்லை. அதாவது கணக்கு பண்ண முடியவில்லை.

இதனால் ஜோதிடமே தவறு என்ற வாதம் தப்பு. இதை வழிகாட்டிப் பலகையாகத்தான் பயன் படுத்த வேண்டும். வாகனமாக்க நினைத்தவர்கள் அது முடியாமல் போகவும்தான் ஜோதிடமே தவறு என்று சொல்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருக்கும் பலரும் புது வீட்டுக்கு கிரஹப்பிரவேச நாளில் ஹோமம் செய்யாமல் இருப்பதில்லை.

இதுதான் உலகம். அதாவது ஊருக்கு உபதேசம்

3 கருத்துகள்: