Search This Blog

புதன், 13 ஏப்ரல், 2011

அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...


பகுத்தறிவைப்பற்றி பேசினாலும் திருவாரூர் வாழ் மக்களின் மன உணர்வுக்கு மதிப்பளித்து பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை சீரமைத்து வலம் வரச் செய்தார் என்று அவரைப்பற்றி பெருமை பேசினார்கள். இருக்கட்டும்.

இப்போது என்னுடைய குழப்பமெல்லாம் என்னவென்றால் முதல்வருக்கும் அவரது குடும்பத்துக்கும் கடவுள் நம்பிக்கை உண்டா, இல்லையா. இந்த உண்மையை தெளிய வைத்தால் நல்லது.



கடவுள் பக்தியைப் பற்றி ஒரு பக்கத்துக்கு தங்கள் சவுகர்யத்துக்கு பேசிவிட்டு பின்னர் பிசிறில்லாமல் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இன்று 13.4.2011 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை எமகண்டம். அதனால் காலை 7.15 மணி சுமாருக்கு முதல்வருக்காக திருவாரூர் தொகுதி முழுவதும் வாக்கு கேட்ட அவரது புதல்வி திருவாரூர் பெரிய கோவிலில் வந்து அர்ச்சனை செய்தார்.

அவங்க உலகத்தில் இருக்கும் எல்லா கோவில்களிலும் பிரார்த்தனை செய்யட்டும். அது அவர்களது உரிமை. அதை பகிரங்கமாக செய்யட்டுமே. தலைவரிடம் கேட்டால் அது என் பெண்ணின் விருப்பம். அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. என்று சொல்வார். அதையேத்தான் கேட்கிறோம், வழிபாடு என்பது ஒவ்வொரு மனிதனின் மன உணர்வுடன் சம்மந்தப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை. தன்னம்பிக்கை போதுமே என்று சொல்பவர்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால் தன்னுடைய மன தைரியத்துக்காக மனிதர்களில் பலர் இறைவனிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். இதை ஏன் ஏளனம் செய்ய வேண்டும்.

பல ஊர்களின் சிறப்பு மிக்க ஆலயங்களில் பக்தர்கள் சுரண்டப்படுவதற்கு முக்கிய காரணமே அரசியல் வியாதிகள்தான். எதாவது ஒரு கோயிலில் கூட்டம் கூடுவது தெரிந்தால் அந்த கோவில் வாசலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வாடகை வசூல் செய்யும் வகையில் ஒப்பந்தம் போட்டு மக்களை மொட்டை அடிப்பதில் முன்னணி வகிப்பது அரசியல் குண்டர்கள்தான்.

அரிசி 1ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் சில கட்டண கழிப்பிடங்களில் சிறு நீர் கழிக்க கூட 2 ரூபாய். கண்டதையும் இலவசமாக கொடுப்பவர்கள், மிக அதிக எண்ணிக்கையிலான கழிப்பிடங்களை அமைத்து மக்களின் பயன் பாட்டுக்கு இலவசமாக திறந்து விட்டால், வியாதிகள் வந்த பிறகு மக்களுக்காக அரசு செய்யும் செலவில் பாதி கூட ஏற்படாது.

இப்போது யோசித்துப்பார்க்கும்போது பல விஷயத்தில் சீர்திருத்தம் தேவை என்று தோன்றுகிறது. ஆனால் என் பார்வையில் முதலிடம் பெறும் தேவை: பசித்திருப்பவனுக்கு ஒரு வேளை உணவை பிச்சையாக போடுவதை விட அந்த உணவை அவனுடைய உழைப்பில் பெற வழி செய்ய வேண்டும் என்ற கருத்துடன் முன்பு ஒரு முறை நான் எழுதிய கதை.
 
நெய்விளக்குத்தோப்பு

திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே அந்தப் பெயரைக் கேட்டாலோ உச்சரித்தாலோ அவர்கள் மனதில் அச்சம் அல்லது வெறுப்பு கண்டிப்பாகத் தோன்றும்.

ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள அந்த சுடுகாட்டுப் பகுதியில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. பேய், ஆவி போன்றவற்றின் மீது மக்கள் கொண்டிருந்த பயம், மூடநம்பிக்கை ஆகியவை மிகவும் குறைந்துவிட்டதற்கான குறியீடுதான் இது.

பேய்கள் பற்றிய வதந்திகளுக்குப் பயப்படாத அந்தப் பகுதி மக்கள் தற்போது நாய்களுக்கு அஞ்சி நடுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

விஜயபுரம் பகுதியிலிருக்கும் பழைய ஆற்றுப்பாலத்தைக் கடந்தால் நகரின் மையப்பகுதியை இணைக்கும் முக்கிய சாலையான நேதாஜி ரோடு. பாலத்தைக் கடந்ததும் நேதாஜி சாலையிலிருந்து ஆற்றோரமாக ஒரு குறுகிய சாலை பிரியும்.

அந்தப் பகுதியைத்தான் நெய்விளக்குத் தோப்பு என்று சொல்வார்கள்.அங்கிருந்து சுமார் ஒருகிலோமீட்டர் தொலைவில்தான் சுடுகாடு என்றாலும், பயம் காரணமாக இப்போதும் மனையின் மதிப்பு மற்ற பகுதிகளைவிட குறைவாகத்தான் இருந்தது.

சுடுகாட்டைக் கடந்து சற்று தொலைவில் இருந்த காலி இடங்களில்தான் நகராட்சி நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு.(வேறு என்ன...குப்பைகள் கொட்டப்படும் கிடங்குதான் அது.)

இது ஒன்று போதாதா...வெறிநாய்கள் அந்த இடத்தில் கூடிக் கூத்தடிக்க?

காரில் செல்பவர்கள் எல்லாம் நம்மை ஒன்றும் செய்யக்கூடாது என்று நீதிமன்றப் படியேறி ஆதரவு கொடுத்த வி­யத்தை அவைகள் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டதாக எண்ணும் அளவுக்கு அவை திட்டம் போட்டு  நடந்து செல்பவர்கள், சைக்கிளில் பயணிப்பவர்கள், முக்கியமாக திண்பண்டங்களை வைத்திருக்கும் குழந்தைகள் என்று இனம் கண்டு துரத்தி துரத்திக் கடித்தன.

அப்படித்தான் ஒருநாள் நான்காம் வகுப்பு படிக்கும் தேவயானியை (காதல்கோட்டை படம் வந்தபோது காமாட்சி வயிற்றில் கருவானவள்) நான்கைந்து நாய்கள் கடித்துக் குதறிவிட்டன.

அவளைக் காப்பாற்றச் சென்ற ஆண்களில் சிலரும் நாய்களிடம் சிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இது வழக்கமான நிகழ்வு என்பதால் யாரும் காமாட்சியிடம் கோபப் படிவில்லை.

இவளின் கெட்டநேரம்...அரசு மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்குரிய தடுப்பூசி இருப்பு இல்லை.

""நாங்க என்னம்மா பண்றது...திருவாரூர் மட்டுமில்லாம சுற்றிலும் இருக்குற நூற்றுக்கணக்கான கிராமங்கள்ல இருந்து தினமும் இப்படி பல கேஸ் வருது.அதிகமா மருந்து அனுப்பச் சொல்லி மேலிடத்துக்கு எழுதி அனுப்பியிருக்கோம்.நீ உன் குழந்தையைக் காப்பாத்தணும்னா வெளியில காசு குடுத்துதான் ஊசி மருந்தை வாங்கிட்டு வரணும்.''என்று மிகச் சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

உடனடியாக அவள் சென்று தஞ்சமடைந்தது ஆதிகேசவன் என்ற கந்துவட்டிக்காரனிடம்.
ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு காமாட்சியின் கணவன் சிக்குன்குனியா காய்ச்சலால் மிகவும் அவதிப்பட்டான். அதற்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் வேறு பல காரணங்களால் வாங்கிய கடனுக்கு தவணை தவறிக் கொண்டிருந்தது. காரணம், இப்போது வரை தெனாலி அந்தக் காய்ச்சலின் பாதிப்பால் வேலைக்குச் செல்ல இயலவில்லை.

நிலைமை இப்படி இருந்தாலும் தேவயானிக்கு உயிரைக் காக்கும் ஊசி வாங்கவேண்டும் என்று கூறிய உடனே பணம் கொடுத்த ஆதிகேசவனை தெய்வத்துக்குச் சமமாக நினைத்துப் புகழ்ந்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

ஓரிரு மாதங்களில் அவன் வைக்கப்போகும் வெடி என்ன என்று ஆதிகேசவனைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.ஊசிமருந்து மூலம் தேவயானி உயிர்பிழைத்துவிட்டாலும் நாய்கள் கடித்துக் குதறிய காயம் ஆற இரண்டு மாதங்களாகிவிட்டன.பிறகுதான் பயம் குறைந்து படிப்படியாக பள்ளிக்குச் சென்று வந்தாள்.

தெனாலிக்கு சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து வேலைக்கு திரும்பிச் சென்றபோது அந்த முதலாளி,""இது ஒண்ணும் அரசு அலுவலகம் இல்லை...வேற ஆளை சேர்த்தாச்சு...”என்று விரட்டிவிட்டார்.

இப்போது அவன் வேறொரு கடையில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு சம்மதித்து வேலை செய்கிறான்.

""உன் பேச்சைக் கேட்டு நாலு பொண்ணு பெத்தேன் பாரு...இப்ப இதுவும் வேணும்...இன்னமும் வேணும். ஒண்ணோட நிறுத்தி இருந்தா அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி இருக்கலாம்.

வைத்திய செலவுக்கு வாங்குன கடனை எந்தக் காலம் கட்டி முடிக்கப்போறோம்னு தெரியலை.நம்ம விதி எந்த நேரத்துல ஆதி ரூபத்துல வந்து ஆட்டம் போடப்போகுதோ தெரியலை.'' என்று காமாட்சி கூறி முடிப்பதற்குள் வீட்டுவாசலில் மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

இவர்கள் பயந்தது போல் ஆதிகேசவன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியயல்லாம் மிரட்டவில்லை.

"இதப்பாரும்மா...உசுரு சம்மந்தப்பட்ட வி­யம்னுதான் வேற எந்தக் கேள்வியும் கேட்காம ரூபாயை எடுத்து நீட்டுனேன்.கொஞ்சம் அசந்தா உங்களை மாதிரி என்னையும் யார்கிட்டயாவது வட்டிக்குப் பணம் கேட்க வெச்சிடுவீங்க.

தென்றல்நகர்ல தெரிஞ்சவங்க, புரு­ன் பொண்டாட்டின்னு ரெண்டுபேருமே வேலைக்குப் போறாங்க. வீட்டுல மூணுவயசுக் குழந்தை இருக்கு.சமையல் கூட அந்தம்மாவே பண்ணிடும். புள்ளையைப் பார்த்துக்க,மற்ற வேலைகளைச் செய்ய ஆள் வேணும்.வீட்டோட இருக்கணும்னு கேட்குறாங்க. உன் பொண்ணை அனுப்பிவை... முதல்லயே ரொக்கமா ஒரு தொகை தருவாங்க...எனக்கு தர வேண்டிய கடனுக்கு சரியாப்போகும்.

மாசா மாசம் அவுங்க தர்ற பணம் உங்களுக்கு உதவியா இருக்கும். இந்தப்புள்ளைக்கு துணிமணியும் சாப்பாடும் அவங்க வீட்டுலேயே. வயசுக்கு வந்ததுக்கு அப்புறம் ரெண்டு மூணு வரு­ம் கழிச்சு அவங்களே ஒரு நல்ல இடத்துல கல்யாணம் கட்டிக் கொடுக்க உதவி செய்வாங்க. வேற என்ன வேணும்? ... ரெண்டு நாள் யோசிச்சு முடிவு சொல்லுங்க. எந்த முடிவா இருந்தாலும் என்கிட்ட வாங்குன கடனைத் தீர்க்குற முடிவா இருக்கணும்மா...''என்ற ஆதிகேசவன் இவளை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் கிளம்பிச் சென்றான்.

நாய்க்கடியால் ஊசலாடிய உயிரைக் காப்பாற்றிவிட்டு அந்தக் குழந்தையின் எதிர்காலத்தையே தன் வருமானமாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் ஆதிகேசவன் பேசியதைக் கேட்ட காமாட்சியும் தெனாலியும் திகைத்துப்போய்விட்டார்கள்.

மாற்றுவழி எதுவும் உடனடியாகப் புலப்படவில்லை.

"அப்பவே செத்துருந்தா அந்த நேரத்து அவஸ்தையோட முடிஞ்சிருக்கும்.அப்போ கஷ்டப்பட்டு காப்பாத்தி யார் வீட்டுலேயோ அடிமையா வளரணுமா நம்ம பொண்ணு...''என்று தெனாலி புலம்பினான்.

"அடச்சீ...சும்மாரு...நம்ம சந்தோ­த்துக்காக பெத்த புள்ளைங்களை செத்துருந்தா பரவாயில்லைன்னு சொல்றியே...உனக்கு வெட்கமா இல்லை...ஒழுங்கா அதிக சம்பளத்துல வேற வேலை கிடைக்குதான்னு பாரு...நான் வீட்டு வேலை செய்யுற டீச்சரம்மாகிட்ட ஏதாவது கேட்குறேன்...''என்று காமாட்சி கணவனைத் திட்டிவிட்டுக் கிளம்பினாள்.

"ஏய்... காமாட்சி... இவ்வளவு நடந்துருக்கு...என்கிட்ட ஏதாவது உதவி கேட்டா என்ன?...அட்லீஸ்ட் உன் பொண்ணை நாய் கடிச்ச வி­யத்தையாவது சொல்லியிருந்தா மருந்து செலவுக்காவது ஏற்பாடு பண்ணியிருப்பேனே...''வசுந்தரா டீச்சர் அக்கறையுடன் கேட்டாள்.

"இவ்வளவு பாசமா கேட்டீங்கிளே...அது ஒண்ணு போதும் டீச்சர்...எனக்கும் என் வூட்டுக்காரருக்கும் கைகால் எல்லாம் நல்லாத்தான இருக்குது...அப்புறம் ஏன் அடுத்தவங்ககிட்ட உதவி?...அது ஒரு மாசம் ஜூரத்துல படுத்துட்டதால கொஞ்சம் கஷ்டமாப்போச்சு.
அதோட என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்கு ஏத்த கூலி கிடைக்குறமாதிரி இருந்தா நாங்க யார்கிட்டயும் கடன் கூட வாங்கத் தேவையில்லை.
டீச்சர்...உங்க பள்ளிக்கூடத்துலதான் கேண்டீன் இருக்கே...அதுல எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுங்களேன்.எந்த வேலையா இருந்தாலும் செய்யுறேன்...எக்காரணம் கொண்டும் நாலு பொண்ணுங்களும் படிக்காம இருக்கக் கூடாது.அதுக்காகத்தான் கேட்குறேன் டீச்சர்...''என்ற காமாட்சியின் குரலில் தெரிந்த உறுதி கண்டு திகைத்துப்போன வசுந்தரா,மனதுக்குள்ளே மகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மேலும் சீண்டிப் பார்க்க முடிவு செய்தாள்.

"காமாட்சி...நீ காலையிலேயும் சாயந்திரமும் ரெண்டு வீடுகள்ல வேலை செய்யுறதே கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருக்க...இன்னும் ஏன் சிரமம்...ஆதிகேசவன் சொன்ன மாதிரியே தேவயானியை வேலைக்கு அனுப்பிட்டா அவளுக்காவது நல்ல உணவு துணிகள் கிடைக்கும். உங்களுக்கும் இப்ப கஷ்டம் தீரும்... எல்லாத்தையும் விட அவளோட கல்யாணத்தைக் கூட அவங்க செலவுல செய்யுறதுக்கு தயாரா இருக்குறது சாதாரண வி­ஷயமா?... நீ கஷ்டப்பட்டு உன் பொண்ணைப் படிக்க வெச்சாலும் பின்னால சம்பாதிச்சு உனக்கா தரப் போறா?... எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை யோசி...''என்ற வசுந்தரா,காமாட்சியின் பதிலுக்கு ஆர்வமானாள்.

"இவ்வளவு படிச்ச நீங்களே இப்படி பேசலாமா டீச்சர்? ஆதிகேசவன் சொன்னபடி செஞ்சு என் பொண்ணும் நாளைக்கு என்னைப் போலவே நாலு பெத்து கஷ்டப்படணுமா?

நானும் என் புரு­னும் ஒழுங்கா பள்ளிக்கூட படிப்பையே முடிக்கலை.அவரு கடைகடையா தாவிகிட்டு சரியான சம்பளம் வாங்க முடியாம அல்லாட, நான் வீடு வீடா பாத்திரம் தேய்ச்சு பிழைப்பை நடத்தலாமான்னு பார்க்குறேன்.

பத்தாவது வரை படிக்க வெச்சாலும் மளிகைக் கடையிலோ எஸ்.டி.டி பூத்துலேயோ அவனுங்க குடுக்குற எழுநூறு எட்டுநூறுக்கு உயிரைக் குடுத்து வேலை செய்யணும்.அதோட ஒரு சில பொறுக்கி முதலாளிங்க தர்ற வேற விதமான தொந்தரவையும் தாங்கணும். இது எல்லாம் தேவையா... கல்லூரி வரை படிக்க வெச்சு, கம்ப்யூட்டர் கிளாசுக்கு அனுப்பிட்டா அப்புறம் அவ சாமர்த்தியம்.

நான் என்னைப் பெத்ததுங்களை திட்டுற மாதிரி என் பொண்ணுங்க என்னைய எதுவும் சொல்லக்கூடாது.அதுக்காக என்னால முடிஞ்ச அளவு என்ன...அதுக்கும் மேலேயே உழைக்கத் தயாராயிட்டேன்.”

"காமாட்சியிடமிருந்த தெளிவான குறிக்கோள் நன்கு படித்து பட்டம் பெற்ற பெண்களிடம் கூட இருப்பது சந்தேகம்தான்...'என்று வியந்த வசுந்தரா,

"இவ்வளவு கஷ்டத்துலேயும் என்கிட்ட பண உதவியை எதிர்பார்க்காம, உன்னைய நம்புன பாரு...அதுக்காக உனக்கு என்ன வேணுன்னாலும் செய்யலாம்.எனக்கு ரொம்ப சந்தோ­மா இருக்கு''என்றாள்.

"பெரிசா எதுவும் வேண்டாம்மா...எனக்கு கேண்டீன்ல வேலை...என் வூட்டுக்காரருக்கு உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைக்குற மாதிரி வேலை...அது போதும்.''என்று சிரிக்க வசுந்தராவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக