Search This Blog

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சமையல் எரிவாயு என்ன விலை?

சமையல் எரிவாயுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலைக்கும் எப்போதுமே டேலி ஆகாது. எரிவாயு உருளைகளை டெலிவரி செய்பவர்கள் பத்து ரூபாயை சேர்த்துதான் வாங்குவார்கள். வீடு தேடி வந்து டெலிவரி செய்யும்போது ஓ.கே. ஒழுங்கான தேதியில் கொண்டுவந்து கொடுக்காமல் பல நாட்கள் சிலிண்டரை ரொட்டேஷன் விட்டு விடுகிறார்கள் என்று பலரும் இப்போதெல்லாம் நேரடியாக ஏஜன்சி கிடங்கிலேயே சென்று சிலிண்டரைப் பெற்று வருகிறார்கள். அப்போதும் அந்த பத்து ரூபாயை சேர்த்து வாங்குவது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

திருவாரூரில் இரண்டு ஏஜன்சிகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செம்மலர் கியாஸ் ஏஜன்சியில் அங்கேயே போய் நாம் சிலிண்டரை பெற்று வந்தால் பில் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் நீ.....ண்ட காலமாக இருக்கும் பிரியா கேஸ் ஏஜன்சியினர் மட்டும் வலுக்கட்டாயமாக கூடுதல் தொகையை பிடுங்கி விடுகிறார்கள்.

இப்போது இண்டேன் கியாஸ் ஏஜன்சியில் முன்பதிவிற்காக பத்து இலக்க எண் ஒன்றை 24மணி நேரமும் செயல்படும் வகையில் அறிவித்திருக்கிறார்களாம்.

இது நல்ல முறையில் செயல்பட்டால் தில்லுமுல்லு செய்யும் கியாஸ் ஏஜன்சிக்களுக்கு ஆப்புதான்.

தாமதத்திற்கு வினியோகஸ்தர்கள் சொல்லும் ஒரே காரணம், எண்ணை நிறுவனங்களில் இருந்து போதுமான அளவுக்கு சப்ளை இருப்பது இல்லை என்பதுதான்.

பல முறை சிலிண்டர்களை தங்கள் இஷ்டத்திற்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.

இதைத் தடுக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது. சிலிண்டருக்கான முன்பதிவு ஆன் லைன் முறையாக்கப்பட்டுவிட்டதால், தினமும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு எண்ணை நிறுவனத்தில் இருந்து வந்த சிலிண்டரையும், எந்த எண் வரை முன்பதிவு செய்தவருக்கு அன்று சிலிண்டர் வழங்கலாம் என்பதையும் இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பார்க்க வழி செய்யலாம். இதில் ரகசியம் காக்க தேவையில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?

2 கருத்துகள்:

  1. எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

    unmai

    இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?

    ithu atha vida unmai

    பதிலளிநீக்கு