Search This Blog

சனி, 12 மார்ச், 2011

தடுமாறுகிறதா இளையபாரதம்?

அப்துல்கலாம் ஐயா இளைஞர்களை நல்ல விதமா பெரிய லட்சியத்தை அடையணும்னு கனவு கண்டு அதற்கான முயற்சிகள்ல இறங்க சொன்னாங்க. சொல்லிகிட்டும் இருக்காங்க.

ஆனா இளைய தலைமுறையில பொறுப்பில்லாம நடந்துக்குறவங்களோட சதவீதம் அதிகமாகிட்டே வருதோன்னு சந்தேகமா இருக்கு.

ஓரிரு நாட்களுக்கும் முன்பு திருச்சி பகுதியில லஞ்சம் வாங்கி பிடிபட்ட தனி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய ரெண்டு பேரோட போட்டோவும் சில பத்திரிகைகளில் வந்திருந்தது.

அந்த தனி தாசில்தாருக்கு அம்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.(பல பேரோட உடம்பு இதெல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு அலர்ஜியானாத்தான் டை அடிக்கிறதையே நிறுத்துறாங்க. அதனால வயசை சட்டுன்னு சொல்ல முடியலை.) அந்த ஆள் ஜாலியா ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறது மாதிரிதான் வர்றாரு. இவய்ங்க என்னத்த, தண்டனை, வாங்கி அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிருக்கலாம்.

ஆனா கூட பிடிபட்ட வி.ஏ.ஓ பொண்ணுக்கு இருபத்து நாலு வயசுதான் ஆகுதாம். லஞ்ச வழக்குல பிடிபட்ட குறைஞ்ச வயசு ஆள் இந்த விஜயலெட்சுமியாத்தான் இருக்கும்னு சொல்றாங்க. (சத்தமா சொல்லாதீங்கப்பா...ஒருத்தர் அதை பாராட்டி அறிக்கை விட்டுட்டு உடனே அதுக்காக தனக்கு பாராட்டு விழா நடத்தணும்னு அடம் பிடிப்பாரு.)

இந்த பொண்ணு பணியில சேர்ந்து ஆறு மாசம்தான் ஆகுதாம். அரசுத்துறையில இருக்குற பல கேடு கெட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குறதை நியாயப்படுத்தி சொல்ற ஒரே காரணம் என்ன தெரியுமா?

"வேலை வாங்க அல்லது பிரமோஷன் வாங்க லஞ்சம் கொடுத்தேன்."

இந்த பொண்ணு இப்போ தேர்வு எழுதி அதுல வேலை வாங்கினதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். அப்புறம் ஏன் இந்த பேராசை?

ஆனா இந்தப் பொண்ணு லஞ்சம் வாங்க மாட்டேன்னு சொன்னா, இவ எங்க நம்மை எல்லாம் மாட்டி விட்டுடுவாளோ...அதனால இவளை எந்த வம்புலயாவது கோர்த்து விட்டுடணும்னு ஒரு கூட்டம் தயாராயிருக்கும். இதுக்கு பயந்துதான் பலரும் வாங்க ஆரம்பிப்பாங்க. அப்புறம் என்ன புலிவால் புடிச்ச கதைதான்.

பிறகு, அந்த வழக்கம், ஆசையாகி பேராசையாக ரொம்ப காலம் ஆகாது.

என்னைப் பொறுத்தவரை அரசியல்வியாதிகள் கட்சி நடத்தவும் தேர்தலுக்கு செலவழிக்கவும் பெரிய பெரிய பேங்க்கை கொள்ளை அடிச்சாதான் முடியும். அது நடைமுறையில அவ்வளவா சாத்தியமில்லை. அதுதான் மக்கள் சுரண்டப்படுற எல்லா விஷயங்களிலும் இவங்க மையப்புள்ளியா இருக்காங்க.

இப்போ நாகப்பட்டினத்துல ஒரு பெண், கண்டக்டரை தாக்கியதால ரெண்டு மணி நேரம் பேருந்தை இயக்காம வேலை நிறுத்தம் பண்ணியிருக்காங்க.

அந்தப் பெண், எட்டு ரூபாய் டிக்கட்டுக்கு ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டியிருக்கு. அதுல ஆரம்பிச்சிருக்கும் வில்லங்கம்.

நாகப்பட்டணத்துல இறங்கியதும் மாத்திக்குடுங்கன்னு நடத்துனர் சொல்லியிருக்காரு.

அந்த அம்மாவும் எங்கயோ சில்லறை மாத்தி ஐம்பது ரூபாயை குடுத்துருக்கு. நாற்பது ரூபாயை மட்டும் கொடுத்துட்டு ரெண்டு ரூபாயை தராம போயிருக்காரு. அதை அந்த அம்மா கேட்டதும் தகராறு ஆயிருக்கு.

ரெண்டு ரூபாயை அந்த அம்மா மூஞ்சியில தூக்கி வீசிட்டு அசிங்கமா பேசுனதாலதான் செருப்பால அடிச்சேன்னு அவங்க சொல்றாங்க. கண்டக்டர் வேற எதோ காரணம் சொல்றாரு.

டூட்டியில இருக்குறப்ப அவங்க என்ன செஞ்சாலும் பயணி மேலதான் குற்றம் சுமத்தப்படும்னு ஒரு காரணத்தை வெச்சுகிட்டு இவங்க ஆட்டம் தாங்கலை.

பஸ்சுல இருக்குற ஐம்பது பேருக்கும் 1ரூபா, ரெண்டு ரூபா சில்லரை குடுக்குற சூழ்நிலையில பணம் இல்லைன்னா கஷ்டம்தான். அதை நாகரிகமான வார்த்தையில அழுத்தமா மறுக்க நிறைய கண்டக்டருங்களுக்கு தெரியுறதே இல்லை.

பயணி கிட்ட இருந்து தப்பான வார்த்தை வர்றதுக்கு முன்னாலயே கேவலமான பேச்சு பேசுறதையே நிறைய கண்டக்டர்கள் பிழைப்பா வெச்சுருக்காங்க.

நான் பார்த்த வரை, பயணிகள் கிட்ட நல்லா பேசுற கண்டக்டருங்க கொஞ்சம் கம்மிதான். எரிஞ்சும் விழாம குழையவும் இல்லாம நடந்துக்குறவங்கதான் அதிகம்.

ஆனா இப்போ செருப்படி வாங்குன மாதிரியான கண்டக்டருங்க ரொம்ப பேர் அரசு பஸ் தனக்கே சொந்தம்னுங்குற மாதிரி நடந்துக்குறாங்க. அராஜக அரசியல்வாதிகளோட பிம்பம்தான் இவங்களும்.

பஸ்சுல போகும் சூழ்நிலை வர்றப்ப அப்பாவியான ஆட்கள் பலரும் ஓரளவு சில்லரையோடதான் போறாங்க.

அப்படி இல்லாம வீம்புக்காகவும், குடிச்சுட்டும் பிரச்சனை பண்ற சிலரை கண்டக்டர்கள் கண்டுக்குறதே இல்லை. அவங்க வீரமெல்லாம் அப்பாவிகள் மேலதான்.

என்னத்த சொல்றது?

1 கருத்து:

  1. வணக்கம் சகோதரம், இரண்டு ஊர்களில் இடம் பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளை அலச்யிருக்கிறீர்கள். இலஞ்சம்-திருத்தவே முடியாத மனிதர்கள்
    பெண்- வீரச் செயல் என்பதை விட அவள் பொறுமையாக மீதிப் பணத்திற்கு அலைந்து தாக்கியிருக்கிறாள் எனும் விடயத்தினடிப்படையில் அவளின் வீரம் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு