Search This Blog

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றோம்...

இது வடிவேலுவின் காமெடி வசனம். கடந்த 17,18 (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்களும் வெளியூர் பயணம் சென்றிருந்தோம். சனிக்கிழமை காலையில் எட்டரை மணிக்கு மேலாகியும் மின்விநியோகம் இல்லை. வழக்கமாக காலை ஆறு மணிமுதல் எட்டரை மணி வரைதானே துண்டிப்பார்கள் என்று நண்பனிடம் விசாரித்தேன்.

அடடே...இப்பல்லாம் தினமும் மூணு மணி நேரம் பியூசை புடுங்கிடுறாங்களே...இது தெரியாம ஒரு எழுத்தாளர்(?) இருக்கலாமா அப்படின்னு ஐஸ் வெச்சுட்டு போயிட்டான். போறதுக்கு முன்னால "இன்னும் ஒரு மாசம் ஆன பிறகு தினமும் நாலு மணி நேரம், அப்புறம் தேர்தல் முடிஞ்சதும் தினமும் அஞ்சு மணி நேரம் ஆப்புதாண்டி..."ன்னு போனஸ் நியூஸ் வேற.

இதைக் கேட்டதும் அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.(கரண்ட்டே இல்ல...அப்புறம் எப்படி ஷாக் அடிக்கும்னு கேட்க கூடாது.)

2008ம் வருஷம் இப்படி தினமும் அஞ்சு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. காலையில ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரை மின் நிறுத்த சேவை தொடங்கும். பிறகு இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிவரை. அடுத்த ஆப்பு ரெண்டு மணி முதல் மூணு வரை. மார்கழி மாசத்துல கூட இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிருக்க மாட்டோம். பல பேருக்கு நள்ளிரவுன்னா இப்படி நரக இரவாகூட இருக்கும்னு புரிய வெச்சாங்க. சென்னையில இருந்தா தெரிஞ்சிருக்காது. குடிசை வீட்டுல வாடகைக்கு இருக்குறவன் கூட சென்னையில எதாவது மந்திரி வீட்டுக்கு பக்கத்துல குடி போனாத்தேவலை போலிருக்கேன்னு பொறாமை பட்ட நேரம் அது.

எங்க தெரு பிள்ளையார் கோவில்ல விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் இரவு தோரணம் கட்டுற வேலையில ஈடுபட்டிருந்தோம். பதினைந்து நிமிட நேரத்திற்கான வேலை மீதம் இருந்த நிலையில் இரவு ரெண்டு மணிக்கு பவர் கட். அமாவாசை முடிந்த மூன்றாவது நாள் என்பதால் எதிரில் இருந்தவங்க பல் கூட தெரியாத அளவுக்கு இருட்டு.(வாயை மூடிகிட்டு இருந்துருப்பாங்களோ)

நோக்கியா டார்ச் உபயத்தில் வேலையைத் தொடராமல் இரண்டு தெரு தள்ளி இருந்த மெயின் ரோட்டு டீக்கடைக்கு வந்தோம். 24மணி நேர சர்வீஸ் என்றாலும் ஸ்டவ் எரியும் வெளிச்சத்துடன் ஒரே ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. (இருட்டுக்கடை டீ). இந்த லொக்கேஷனுக்கு காரணம், காவல்துறை.

இன்று நண்பன் அதிவிரைவில் அஞ்சுமணி நேரம் கரண்ட் கட் என்றதும் இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்துவிட்டன.

தேர்தல் வர்றதுனால கரண்ட் கட் இருக்காதுன்னு ரொம்ப பேர் பேசிகிட்டு இருந்தாங்களே...அப்படின்னு என் சந்தேகத்தை ஒருத்தர்கிட்ட கேட்டேன். அப்படி ஒரு சூழ்நிலையை கொண்டு வரணும்னு அதிகாரத்துல இருக்குறவங்களுக்கும் ஆசையாத்தான் இருக்கும். ஆனா அவங்க வெச்சுகிட்டாய்யா வஞ்சகம் பண்றாங்க?. இப்படி ஒரு பதில் அவர்கிட்ட இருந்து வந்தது. இடுக்கண் வருங்கால் நகுக அப்படின்னு வள்ளுவர் சொன்னதை தமிழருங்க வேத வாக்காவே எடுத்துகிட்டாங்கன்னு எனக்கு தோணுச்சு.

ஒருத்தர் தன் பையனை போட்டு அடி பின்னிகிட்டு இருந்தார். "ஏன் சார்...பரிச்சையில பெயில் ஆயிட்டானா"ன்னு கேட்டேன்.

அட போங்க சார்...அப்படி பெயிலாயிட்டு வந்து பெயிலாயிட்டேனு சொல்லியிருந்தாதான்  சந்தோசப்பட்டிருப்பேனே. இவன் பள்ளிக்கூடத்துலயே சேரலை. ஆனா பெயிலாயிட்டேன்னு புலம்புறான். அப்படின்னு சொல்லிட்டு பையனை மறுபடி வெளுக்க ஆரம்பிச்சுட்டார். (இதைப் படிச்சுட்டு தமிழ் நாட்டுல மின்வெட்டே இருக்காதுன்னு சிலர் வாக்குறுதி கொடுக்குறதை நினைச்சு மனச குழப்பிக்க கூடாது. ஓ.கே)

1 கருத்து:

  1. (இதைப் படிச்சுட்டு தமிழ் நாட்டுல மின்வெட்டே இருக்காதுன்னு சிலர் வாக்குறுதி கொடுக்குறதை நினைச்சு மனச குழப்பிக்க கூடாது. ஓ.கே)


    ......நீங்க சொன்னா சரிதான்!!!! ஹா,ஹா,ஹா,ஹா....

    பதிலளிநீக்கு