Search This Blog

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பையா ... அடப்போங்கய்யா...(இது விமர்சனமல்ல.)

"நான் கதாசிரியர்..."

"வந்த படத்துக்கா, வராத படத்துக்கா..."-இந்த வசனம் பூவே உனக்காக படத்தில் 'மதன்பாப்'பிடம் சார்லி பேசுவது.

அந்தப்படத்தில் கதாசிரியர் என்பவர் காமெடியனாக சித்தரிக்கப்பட்டிருப்பார். பெரும்பாலும் திரையுலக ஜாம்பவான்களும் கதாசிரியரை ஒரு பொருட்டாகவே மதிப்பதே இல்லை. பாடல், சில காட்சி அமைப்புகள் என்று பையா நல்ல பெயர் வாங்கினாலும் கதை என்ற விஷயத்தை வழக்கம்போல் மறந்ததால் சந்தேகத்திற்கு இடமில்லாத வெற்றி என்று சொல்ல முடியவில்லை.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வசந்தபாலன்,"தொழில்நுட்பத்தைக்கொண்டு மிரட்ட தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள்.கதை சொல்லத்தான் ஆள் பற்றாக்குறை."என்று சொன்னார்.இது உண்மைதான். நானும் இப்படி அனுபவப்பட்டிருக்கிறேன்.

 நான் எழுதிய சில கதைகள் பத்திரிகைகளில் பிரசுரமான நேரம். அந்த ஆர்வத்தில் கதை சொல்கிறேன் என்றதும்,விவேக்குடன் நகைச்சுவைக்காட்சிகளில் தோன்றும் நந்தகுமார் என்ற நடிகரிடம் நண்பன் ஒருவன் அழைத்துச் சென்றான்.(ஒரு படத்தில் மிஸ்டர் சோத்தப்பன்...என்று விவேக் சொன்னதும், சாத்தப்பன் என்று சொல்வாரே...அவர்தான்.ரன் படத்தில் விவேக்கின் தந்தையாக வருவதும் இவர்தான்.)

எப்படி சொல்றான்னு பார்த்துட்டு யாராவது ஒரு இயக்குனரிடம் உதவியாளரா சேர்த்துவிடுறேன்.என்று என் நண்பனிடம் சொல்லியிருக்கிறார்.இத்தகைய நல்ல வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.ஆர்வக்கோளாறில் ஒரு பஸ், குற்றாலத்தில் இருந்து சென்னைக்கு பயணம் என்று உளறினேன்.

நான் கதை (!?) சொல்லி முடிச்சதும், "இந்த மாதிரி கதை சொல்ல ஆரம்பிச்ச உடனே எழுந்திரிச்சு வெளியே போன்னு சொல்லிடுவாங்க. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு."அப்படின்னு நிறைய புத்தி சொல்லி, மறுபடி உருப்படியான கதையோட வான்னு சொன்னார். ஒரு பிரபல இயக்குனரிடம் உதவியாளரா சேர்றது எவ்வளவு கஷ்டம்னு எல்லாருக்குமே தெரியும்.என் சோம்பேறித்தனத்தால அவர்கிட்ட ஆறு வருஷமா கதை சொல்லப்போகணும்னு நினைச்சுகிட்டே இருக்கேன்.

அதை விடுங்க. வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குனரான லிங்குசாமி ஒரே மாதிரி படங்களா கொடுத்துகிட்டு இருக்குறது ஏன்னு புரியலை. கதைன்னா படம் பார்க்குறவங்களோட மனசை கலங்க வைக்கிறதுன்னு இல்லை. சாதாரண நாலு வரிக்கதையை சுவாரஸ்யத்தோட சொன்னாலே போதும்.

பாடத்துல மக்கா இருந்து வீட்டுல திட்டுவாங்குற காமெடி பீசா இருக்குற ஒருத்தன் ஒரு பொண்ணை அவ மாமன்கிட்ட இருந்து காப்பாத்துறான்.-இதுதான் கில்லி படத்தோட கதை. சொல்லும்போது ரொம்ப சாதாரணமா இருக்குல்ல. ஆனா இது கூட சூப்பர் கதையானதற்கு காரணம் ரொம்பவும் சிம்பிள். விஜய், பிரகாஷ்ராஜ் ரெண்டு பேருக்கும் அந்த கேரக்டர் பொருத்தமா இருந்துச்சு. பாட்டு ஹிட். படம் அதிரடி வெற்றி.

வழவழான்னு கதையை சொல்லிகிட்டு இருந்தா புரொடியூசருங்க நம்மளை வெளில போக சொல்லிடணும். இல்லன்னா, ஜனங்க யாரும் வரலைன்னு தியேட்டரை விட்டு முதலாளிங்க படத்தை துரத்திடுவாங்க.

நல்ல கதைன்னு ஒண்ணும் இல்லை. தெளிவான கதையோட வந்த பல படங்கள் தோல்வி அடைஞ்சிருக்கலாம். ஆனா தெளிவில்லாத கதையோட வந்த ஒரு படம் கூட வெற்றி அடைஞ்சிருக்காது. இதை மனசுல வெச்சுகிட்டு படம் பண்ணினாங்கண்ணா தேவலை.
எந்த கதையை வேணுன்னாலும் படமா எடுங்க. அந்தக் கதை என்ன கேட்குதோ அதைதான் திரைக்கதையில செய்யணும். ஹீரோவுக்காக செய்தா வெற்றியோட சதவீதம் மிக மிக மிக.........குறைவு.

சுருக்கமா சொன்னா, ஹிட்டு இல்ல...ஹிட்டு மாதிரி.

3 கருத்துகள்: