"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு அப்படி என்ன திடீரென்று பெண்கள் மீது கரிசனம் என்று தெரியவில்லையே என்பது என் மனதில் இருந்த சந்தேகம்.
தினமணி நாளிதழில் வெளிவந்த சில கட்டுரைகள் மூலமாக என் சந்தேகம் தீர்ந்து விட்டது.என்ன...நம் நாட்டு மக்களுக்கு சங்கு ஊதும் நாள் என்று என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.
அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.
எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.
ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1
அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.
எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.
ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1
அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது.
அதற்கு என்ன காரணமாம்?அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
***************
கட்டுரை 2
அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொள்ள, அனைத்துத் தரப்பு எதிர்ப்புகளையும் மீறி, பிடிவாதம் காட்டி அதைச் சாதித்துக் காட்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த உடன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவைகளை முற்றிலுமாக நிறைவேற்ற உதவும் அமுதசுரபி என்று இந்திய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இதன் இணைப்பாக சர்வதேச அணுசக்திக் குழுமத்துடன் ஓர் உடன்பாடு, அணுசக்தி வர்த்தக நாடுகள் குழுவுடன் மற்றோர் உடன்பாடு என்றும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுடனான அணுசக்தித் துறை ஒத்துழைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் "ஹைட் சட்டம்' என்ற ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. இப்போது அணுசக்தி தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு, அதையும் மன்மோகன் சிங் அரசு சிரமேற்கொண்டு செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இ தன் பின்னணிதான் என்ன? அணுமின் உற்பத்திக் கூடங்களை நிறுவி, மின்சார உற்பத்தியில் ஈடுபடுகையில், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது இயல்பே. அனல்-புனல் மின் நிலையங்களில்கூட விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு என்றாலும், அணுமின் நிலைய விபத்து மிகுதியான அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் "மூன்று மைல் தீவு' அணுமின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்ததும், ரஷியாவின் "செர்னோபில்' அணுமின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்டதும், இத்தகைய விபத்துகளின் அபாய விளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதற்கான அனுபவப் பாடங்களாகும்.
இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அணுமின் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்; அது சாத்தியமானதும்கூட. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதும் தவிர்க்க முடியாத கடமைகள்.
÷எதிர்பாராத அபாயங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடாக வந்தவைதான் காப்பீட்டுத் திட்டங்கள். இதற்காக சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன; உலக நாடுகள் பலவற்றில் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முயற்சியின் விளைவாக 1963-ல் அணுசக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு அது 1997 முதல் அமலாக்கத்துக்கு வந்தது.
÷வ ளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் முயற்சியில் அணுமின் சக்தித் துறையில் மூன்றாவது நபர் கடப்பாடுக்கான பாரிஸ் கோட்பாடு 1960-ல் உருவாக்கப்பட்டு, 1963-ல் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செழுமைப்படுத்தப்பட்டு, 1968 முதல் அமலுக்கு வந்தது. இந்த வியன்னா மற்றும் பாரிஸ் கோட்பாடுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வரையறையை ஏற்படுத்த 1988-ல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1997-ல், சர்வதேச அணுசக்திக் கழக உறுப்பு நாடுகள் அணுசக்தி பாதிப்புக்கான கூடுதல் இழப்பீட்டுக்கான கோட்பாடு ஒன்றையும் நிறைவேற்றியுள்ளன. இது இன்னமும் அமலாக்கத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
***************
கட்டுரை 2
அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை அமெரிக்காவுடன் செய்துகொள்ள, அனைத்துத் தரப்பு எதிர்ப்புகளையும் மீறி, பிடிவாதம் காட்டி அதைச் சாதித்துக் காட்டியவர் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்த உடன்பாடு இந்தியாவின் மின்சாரத் தேவைகளை முற்றிலுமாக நிறைவேற்ற உதவும் அமுதசுரபி என்று இந்திய ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இதன் இணைப்பாக சர்வதேச அணுசக்திக் குழுமத்துடன் ஓர் உடன்பாடு, அணுசக்தி வர்த்தக நாடுகள் குழுவுடன் மற்றோர் உடன்பாடு என்றும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த அணுசக்தி விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவாகப் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவுடனான அணுசக்தித் துறை ஒத்துழைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் "ஹைட் சட்டம்' என்ற ஒன்றை ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. இப்போது அணுசக்தி தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டு, அதையும் மன்மோகன் சிங் அரசு சிரமேற்கொண்டு செயல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இ தன் பின்னணிதான் என்ன? அணுமின் உற்பத்திக் கூடங்களை நிறுவி, மின்சார உற்பத்தியில் ஈடுபடுகையில், விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பது இயல்பே. அனல்-புனல் மின் நிலையங்களில்கூட விபத்துகள் நிகழ வாய்ப்பு உண்டு என்றாலும், அணுமின் நிலைய விபத்து மிகுதியான அபாயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அமெரிக்காவின் "மூன்று மைல் தீவு' அணுமின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்ததும், ரஷியாவின் "செர்னோபில்' அணுமின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்டதும், இத்தகைய விபத்துகளின் அபாய விளைவுகள் எந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதற்கான அனுபவப் பாடங்களாகும்.
இந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் எச்சரிக்கையோடும், பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் அணுமின் உற்பத்தியில் ஈடுபட வேண்டியது அவசியம்; அது சாத்தியமானதும்கூட. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதும் தவிர்க்க முடியாத கடமைகள்.
÷எதிர்பாராத அபாயங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடாக வந்தவைதான் காப்பீட்டுத் திட்டங்கள். இதற்காக சர்வதேச அளவில் சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன; உலக நாடுகள் பலவற்றில் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகத்தின் முயற்சியின் விளைவாக 1963-ல் அணுசக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்பாடு ஒன்று உருவாக்கப்பட்டு அது 1997 முதல் அமலாக்கத்துக்கு வந்தது.
÷வ ளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்பான, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனத்தின் முயற்சியில் அணுமின் சக்தித் துறையில் மூன்றாவது நபர் கடப்பாடுக்கான பாரிஸ் கோட்பாடு 1960-ல் உருவாக்கப்பட்டு, 1963-ல் புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செழுமைப்படுத்தப்பட்டு, 1968 முதல் அமலுக்கு வந்தது. இந்த வியன்னா மற்றும் பாரிஸ் கோட்பாடுகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு முழுமையான வரையறையை ஏற்படுத்த 1988-ல் செர்னோபில் விபத்துக்குப் பிறகு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1997-ல், சர்வதேச அணுசக்திக் கழக உறுப்பு நாடுகள் அணுசக்தி பாதிப்புக்கான கூடுதல் இழப்பீட்டுக்கான கோட்பாடு ஒன்றையும் நிறைவேற்றியுள்ளன. இது இன்னமும் அமலாக்கத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
÷இந்த சர்வதேசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட நாடுகள் சில, தத்தம் நாட்டுக்குப் பொருத்தமான சட்டங்களை இது தொடர்பாக நிறைவேற்றியுள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா போன்றவை பாரிஸ் அல்லது வியன்னா கோட்பாடுகளை ஏற்றுச் சட்டமியற்றிய நாடுகளில் சில. சர்வதேசக் கோட்பாடு எதனையும் அங்கீகரிக்காமலும், சொந்த நாட்டில் சட்டமியற்றாமலும் அணுசக்தித் துறையில் ஈடுபட்டு வரும் நாடாக சீனா உள்ளது.
÷ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணுமின் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அரசுத் துறையில் மட்டுமே மேற்கொள்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் பிரதானமாக அணுமின்துறை உற்பத்தி - வர்த்தகத்தில் தனியார் துறையே ஈடுபட்டு வருகிறது. அணுமின் விபத்து காரணமான பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்பது பொதுவான ஒன்று. எனினும், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், இந்த அணுமின் பாதிப்பு தொடர்பான கடப்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இது குறித்துச் சட்டமியற்றிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது.
÷அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்கள் இருவகைப்படும். அணு உலைகள், இதர சாதனங்கள், எரிபொருள், எரிபொருள் பயன்பாடு தொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒருவகை; இவற்றைப் பயன்படுத்தி அணுமின் நிலையத்தை நிறுவி இயக்குகிற, அதைப் பராமரிக்கிற, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்று விநியோகிக்கிற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாவது வகை. அணுமின் விபத்து பாதிப்பு குறித்த குடிமைக் கடப்பாடுகள் முதல் வகை நிறுவனங்கள் மீது சுமத்தப்படக்கூடாது என்பதுதான், இதுதொடர்பாக 1957-ம் ஆண்டிலேயே சட்டமியற்றிய அமெரிக்க நாடு எடுத்த முடிவு. அணுமின் உலை மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தாலும், அதன் பாதிப்புக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை ஆகாது என்று அவற்றுக்கு முழு விலக்கு அளித்துவிட்டது அமெரிக்க அரசாங்கம். மாறாக, விபத்து காரணமான பாதிப்புகளுக்கு, அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துகிற நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்காக அந்த நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது.
÷அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் கீழான காப்பீட்டை அமெரிக்க அணுமின் கூடங்கள் பெற்றுள்ளனவா என்று கண்காணிக்கிறது. இந்த அணுமின் கூடங்கள் தொடர்பான காப்பீட்டு உத்தரவாதத்தை "அமெரிக்க அணுசக்திக் காப்பீட்டாளர்கள்' என்ற ஒரு கூட்டமைப்பு நல்கி வருகிறது. இந்தக் காப்பீட்டைப் பெறச் செலுத்த வேண்டிய வருடாந்திர "பிரீமியம்' தொகை, ஒரே ஓர் அணுஉலையைக் கொண்ட மின்கூடத்துக்கு 4 லட்சம் டாலர் என்று சராசரியாக நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவில் அணுசக்தி சாதன உற்பத்தி - வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, விபத்து நிவாரண இழப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்கும் விதமாகவே அந்நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது.
÷இப்போது அமெரிக்காவில் தனியார் துறை அணுமின் உற்பத்தி நிறுவனங்களாக உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், அரேவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசாடோம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புதிய அணுமின் கூடங்களுக்கான அணு உலைகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்ய மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் உள்ளதுபோலத் தங்களுக்குப் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகள் இந்தியாவிலும் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றன. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும் வலியுறுத்துகிறது. அண்மையில் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமாவே இதற்கான சட்டத்தை விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நெருக்குதல் கொடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.
÷இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு அணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணுஉலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.
÷அது மட்டுமல்ல, அணுமின் விபத்து நேரிட்டால், அந்த விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு 45 கோடி டாலர் (ரூ. 2,300 கோடி) உச்சவரம்பாக விதிக்கப்படும் என்று இந்த மசோதாவைப் பற்றிய விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அணுமின் கூட விபத்து, லட்சக்கணக்கான மக்களைக்கூட பாதிப்புக்கு இலக்காக்கும் பரிமாணம் கொண்டதாக அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 45 கோடி டாலர் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நின்றுவிடும் ஆபத்து எழும். இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு உள்ளிட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும் என்பது இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்டுகளாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற இயலாது அல்லாடுகிற நேர்வை நினைவில் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் புதிய சட்டம் எவ்வளவு பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊகிப்பது கடினம் அல்லவே!
÷"லாபங்கள் அனைத்தும் தனியாருக்கு; பாதிப்புகளும், இழப்பும் அரசாங்கத்துக்கு' என்பதுதானே நவீன தாராளமயத்தின் தாரக மந்திரம். அதன்படி அமெரிக்க நாட்டின் அணுமின் உற்பத்தி - வர்த்தகத் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 60,000 கோடி வரை விற்று, லாபம் ஈட்டுவதற்கு வழிதிறந்துவிட முற்படுகிற, இந்திய ஆட்சியாளர்கள், அவற்றின் மீது எந்தக் கட்டத்திலும் மயிலிறகு அளவுகூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்டம் போட்டுப் பாதுகாப்பு நல்க முற்படுகின்றனர்.
÷"என்ன விலை அமெரிக்க அணு உலையே? எம் மக்களின் உயிரைக் கூடத் தருவேன்' என்று இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கே எதிரான சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்ற அனுமதிக்கப் போகிறதா நம் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றம்?
÷ரஷியா, சீனா போன்ற நாடுகள் அணுமின் துறையில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அரசுத் துறையில் மட்டுமே மேற்கொள்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளில் பிரதானமாக அணுமின்துறை உற்பத்தி - வர்த்தகத்தில் தனியார் துறையே ஈடுபட்டு வருகிறது. அணுமின் விபத்து காரணமான பாதிப்புகளுக்கும் முழுமையான நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்பது பொதுவான ஒன்று. எனினும், காப்பீட்டுத் திட்டங்களின் கீழ், இந்த அணுமின் பாதிப்பு தொடர்பான கடப்பாடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே, இது குறித்துச் சட்டமியற்றிய நாடுகளின் நோக்கமாக அமைந்தது.
÷அணுமின் உற்பத்தித் துறையில் ஈடுபடுகிற நிறுவனங்கள் இருவகைப்படும். அணு உலைகள், இதர சாதனங்கள், எரிபொருள், எரிபொருள் பயன்பாடு தொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒருவகை; இவற்றைப் பயன்படுத்தி அணுமின் நிலையத்தை நிறுவி இயக்குகிற, அதைப் பராமரிக்கிற, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்று விநியோகிக்கிற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டாவது வகை. அணுமின் விபத்து பாதிப்பு குறித்த குடிமைக் கடப்பாடுகள் முதல் வகை நிறுவனங்கள் மீது சுமத்தப்படக்கூடாது என்பதுதான், இதுதொடர்பாக 1957-ம் ஆண்டிலேயே சட்டமியற்றிய அமெரிக்க நாடு எடுத்த முடிவு. அணுமின் உலை மற்றும் இதர சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தாலும், அதன் பாதிப்புக்கு எந்த வகையிலும் கடன்பட்டவை ஆகாது என்று அவற்றுக்கு முழு விலக்கு அளித்துவிட்டது அமெரிக்க அரசாங்கம். மாறாக, விபத்து காரணமான பாதிப்புகளுக்கு, அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துகிற நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்காக அந்த நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது.
÷அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் கீழான காப்பீட்டை அமெரிக்க அணுமின் கூடங்கள் பெற்றுள்ளனவா என்று கண்காணிக்கிறது. இந்த அணுமின் கூடங்கள் தொடர்பான காப்பீட்டு உத்தரவாதத்தை "அமெரிக்க அணுசக்திக் காப்பீட்டாளர்கள்' என்ற ஒரு கூட்டமைப்பு நல்கி வருகிறது. இந்தக் காப்பீட்டைப் பெறச் செலுத்த வேண்டிய வருடாந்திர "பிரீமியம்' தொகை, ஒரே ஓர் அணுஉலையைக் கொண்ட மின்கூடத்துக்கு 4 லட்சம் டாலர் என்று சராசரியாக நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் அமெரிக்காவில் அணுசக்தி சாதன உற்பத்தி - வர்த்தகத்தில் ஈடுபடும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, விபத்து நிவாரண இழப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்கும் விதமாகவே அந்நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது.
÷இப்போது அமெரிக்காவில் தனியார் துறை அணுமின் உற்பத்தி நிறுவனங்களாக உள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், அரேவா, வெஸ்டிங் ஹவுஸ், ரோசாடோம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புதிய அணுமின் கூடங்களுக்கான அணு உலைகள் உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்ய மும்முரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இவை அமெரிக்காவில் உள்ளதுபோலத் தங்களுக்குப் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகள் இந்தியாவிலும் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றன. இந்தக் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும் வலியுறுத்துகிறது. அண்மையில் அமெரிக்க நாட்டுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமாவே இதற்கான சட்டத்தை விரைவில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நெருக்குதல் கொடுத்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிய வந்தது.
÷இந்தப் பின்னணியில் தான் மத்திய அரசு அணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணுஉலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.
÷அது மட்டுமல்ல, அணுமின் விபத்து நேரிட்டால், அந்த விபத்து தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு 45 கோடி டாலர் (ரூ. 2,300 கோடி) உச்சவரம்பாக விதிக்கப்படும் என்று இந்த மசோதாவைப் பற்றிய விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அணுமின் கூட விபத்து, லட்சக்கணக்கான மக்களைக்கூட பாதிப்புக்கு இலக்காக்கும் பரிமாணம் கொண்டதாக அமையக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இந்த 45 கோடி டாலர் என்பது வெறும் கண்துடைப்பாக மட்டுமே நின்றுவிடும் ஆபத்து எழும். இந்த உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு உள்ளிட்டுக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும் என்பது இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. போபால் விஷவாயுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்டுகளாகியும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நிவாரணம் பெற இயலாது அல்லாடுகிற நேர்வை நினைவில் வைத்துப் பார்த்தால், மத்திய அரசின் புதிய சட்டம் எவ்வளவு பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதை ஊகிப்பது கடினம் அல்லவே!
÷"லாபங்கள் அனைத்தும் தனியாருக்கு; பாதிப்புகளும், இழப்பும் அரசாங்கத்துக்கு' என்பதுதானே நவீன தாராளமயத்தின் தாரக மந்திரம். அதன்படி அமெரிக்க நாட்டின் அணுமின் உற்பத்தி - வர்த்தகத் தனியார் நிறுவனங்களுக்கு ரூ. 60,000 கோடி வரை விற்று, லாபம் ஈட்டுவதற்கு வழிதிறந்துவிட முற்படுகிற, இந்திய ஆட்சியாளர்கள், அவற்றின் மீது எந்தக் கட்டத்திலும் மயிலிறகு அளவுகூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்டம் போட்டுப் பாதுகாப்பு நல்க முற்படுகின்றனர்.
÷"என்ன விலை அமெரிக்க அணு உலையே? எம் மக்களின் உயிரைக் கூடத் தருவேன்' என்று இந்திய மக்களின் வாழ்வுரிமைக்கே எதிரான சட்டத்தை மன்மோகன் சிங் அரசு நிறைவேற்ற அனுமதிக்கப் போகிறதா நம் ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றம்?
**************
கட்டுரை 3
அது மன்னராட்சி ஆனாலும், மக்களாட்சி ஆனாலும், ஏன் சர்வாதிகார ஆட்சியே ஆனாலும் அந்த நாட்டையும், மக்களையும், அவர்களது நலனையும் பாதுகாப்பதுதான் அடிப்படைக் கடமை. நல்ல பல திட்டங்களின் மூலம் மக்களது நல்வாழ்வுக்கு ஓர் அரசு உத்தரவு தருகிறதோ இல்லையோ, அன்னியர்கள் தேசத்தை ஆக்கிரமிக்காமல் பாதுகாப்பதும், சுரண்டாமல் பார்த்துக் கொள்வதும் எந்த ஓர் அரசுக்கும் அடிப்படைக் கடமை. இந்த அடிப்படைக் கடமையைக்கூட மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்யத் தவறுகிறதோ என்கிற ஐயப்பாடு சமீபகாலமாகத் தோன்றியிருக்கிறது.
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா மிகப்பெரிய மின் பற்றாக்குறையைச் சந்திக்க இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. இந்தியாவின் எரிசக்தித் தேவையை எப்படி எதிர்கொள்வது என்பதில் அனைவரும் கைகோர்த்து, நாளைய தலைமுறையினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. இந்தப் பிரச்னையில் மக்கள் கருத்தை முறையாகக் கணிக்காமலும், பொதுவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமலும் அமெரிக்காவுடன் பல்வேறு சமரசங்களைச் செய்துகொண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது இந்திய அரசு.
அதுவும் போதாதென்று, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும், நாளைய தலைமுறையினரின் நியாயமான பாதுகாப்பை நிர்மூலமாக்கும் ஒரு நடவடிக்கையிலும் இப்போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இறங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அது இந்திய நிறுவனமோ, பன்னாட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும், தாங்கள் தொழில் செய்து லாபம் சம்பாதிப்பதற்காகச் சுற்றுச்சூழலைப் பாதிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் அந்தத் தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் 21-வது பிரிவின்படி வாழ்வுரிமை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
******
நமது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையில் மேலும் ஒருபடி சென்று, வாழும் உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவைகளுடன் வாழ்வது என்பதும்தான் என்று பல தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருக்கிறது. அதை மேலும் விரிவுபடுத்தி, மனித உரிமையுடனும், கௌரவத்துடனும் வாழ்வது என்பது, பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழலுடனும், நச்சுக் கலப்பில்லாத காற்று மற்றும் தண்ணீருடனும் வாழ்வது என்றுகூடத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உலகிலுள்ள ஏனைய அரசியலமைப்புச் சட்டங்களை எல்லாம்விட, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சுற்றுச்சூழலுக்கு மிக அதிகமான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்திருக்கிறது. இயற்கைச் சூழலைப் பேணுவது மற்றும் அதிகரிப்பது என்பதை அரசியல் சட்டப்பிரிவு 51-அ, அடிப்படை உரிமையாகவே நமக்கு அளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற பல்வேறு தீர்ப்புகள் வலியுறுத்தும் கருத்து, எந்த ஒரு தொழில் நிறுவனமும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு முழுப் பொறுப்பும் ஏற்றாக வேண்டும் என்பதைத்தான். தங்களது ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் கழிவுகள், வாயுக் கசிவுகள் மற்றும் நச்சுத்தன்மை போன்றவற்றால் சுற்றிலும் வாழும் பொதுமக்களுக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அனைத்துக்கும்கூட நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும்.
சட்டமும் அரசியல் சட்டமும் ஒருபுறம் இருக்கட்டும். தார்மிக ரீதியாகப் பார்த்தாலும், தாங்கள் லாபம் கருதிச் செய்யும் தொழில் அடுத்தவரைப் பாதிக்கக்கூடாது என்பதும் அப்படிப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்ட ஈடும் பரிகாரமும் செய்ய வேண்டும் என்பதும் சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனித நாகரிகம் ஏற்றுக்கொள்ளும் கடமையும்கூட. நிலைமை இப்படி இருக்கும்போது, நமது மத்திய அரசு விசித்திரமான ஒரு சட்டத்தின் மூலம், அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களின் நஷ்ட ஈட்டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தயாராகி இருப்பதுதான் வெட்கக் கேடாக இருக்கிறது.
அமெரிக்காவில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட அணு எரிசக்தி ஒப்பந்தங்களுக்குப் பிறகும் அந்த நாட்டு நிறுவனங்கள் இன்னும் அணு மின் நிலையங்களைத் தொடங்க ஆர்வத்துடன் முன்வராதது ஏனாம் தெரியுமா? அந்த அணு மின் நிலையங்களில் ஒருவேளை கசிவு ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டுமே என்பதால் அவர்கள் தயங்குகிறார்களாம். எப்படி இருக்கிறது கதை. அணு மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்து லாபம் அடைய மட்டும்தான் தயாராம்!
நமது இந்திய அரசு உடனே என்ன செய்ய இருக்கிறது தெரியுமா? அணுமின் எரிசக்தி பாதிப்புச் சட்டம் (சிவில் நியூக்ளியர் லயபிலிட்டி பில்) என்றொரு சட்டம் இயற்றி, இந்த அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏற்பட்டால் அந்த நிறுவனங்களின் அதிகபட்ச நஷ்ட ஈட்டுத் தொகை 450 மில்லியன் டாலர் என்று பாதுகாப்புத் தர முன்வந்திருக்கிறது. அதற்கு மேலான பாதிப்புகளுக்கு இந்திய அரசே பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமாம்.
என்ன அயோக்கியத்தனம் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. தேசப்பற்றுமிக்க ஓர் அரசு, இந்தியாவை ஓர் அமெரிக்காவாக மாற்றவும், பன்னாட்டு முதலீடுகளைப் பெறுவதற்காகவும் இப்படி ஒரு "சலுகை' அளிக்க இருக்கிறது. நாளைய தலைமுறையின் நல்வாழ்வு முக்கியமா, இந்திய மக்களின் பாதுகாப்பு முக்கியமா இல்லை பன்னாட்டு முதலீடும், ஆபத்தான அணு மின்சக்தியும் முக்கியமா?
தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
******
பகிர்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குஅனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய விடயங்கள்
நல்ல பதிவு
என்ன சரவணன்? பெரிய பெரிய குண்டுகளாக அல்லவா தூக்கிப் போட்டிருக்கிறீர்கள்:(???
பதிலளிநீக்குஎல்லாருக்கும் விஷயம் தெரியணும்னுதான் இந்த பதிவை போட்டேன். மூணு கட்டுரையுமே தினமணியில வந்ததுதான்.முதல் கட்டுரை இன்றைய தலையங்கம்.
பதிலளிநீக்குநன்றி @ ராமலக்ஷ்மி
நன்றி @ உலவு.காம்
நல்ல பதிவு
பதிலளிநீக்குNo Bombing!
பதிலளிநீக்குNo Parking!
..."எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.
.........தேசநலன் விலைபோகிறது - வியாபாரிகளால் அல்ல, ஆட்சியாளர்களால்! வந்தே மாதரம்!
........வந்தே மாதரம்!