Search This Blog

செவ்வாய், 9 மார்ச், 2010

மகளிர் மசோதாவும் நாட்டின் அழிவும்...

"எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.இவ்வளவு நாட்களாக மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யாமலேயே தள்ளிப்போட்டார்கள். இந்த ஆண்டு அப்படி என்ன திடீரென்று பெண்கள் மீது கரிசனம் என்று தெரியவில்லையே என்பது என் மனதில் இருந்த சந்தேகம்.
தினமணி நாளிதழில் வெளிவந்த சில கட்டுரைகள்  மூலமாக என் சந்தேகம் தீர்ந்து விட்டது.என்ன...நம் நாட்டு மக்களுக்கு சங்கு ஊதும் நாள் என்று என்பதுதான் சரியாகத் தெரியவில்லை.

அதோ பூனை போகுது பார் அப்படின்னு சொல்லி யானையைக் கடத்துறவங்களாச்சே நம்ம அரசியல் வியாதிகள். மகளிர் மசோதாவை நிறைவேற்ற முனைந்ததுக்குப் பின்னாலயும் மக்களுக்கு எதிரான சதி இருக்கு. ஆனா நம்மளை இதுல இருந்து யார் காப்பாத்துவாங்கன்னுதான் தெரியலை.

எதனால செத்தோம், ஏன் இந்த வியாதி வந்துச்சுன்னு தெரியாம அவஸ்தைப்படுறதோ, போய்ச்சேர்றதோ ரொம்ப கொடுமை.அணு சக்தி ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு எப்படி ஆப்பு வெக்கிதுன்னு தெரிஞ்சுக்க இந்த பதிவை முழுசா படிங்க.

ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.இந்தியா விரைவில் ஜப்பான் மாதிரி ஆகப்போகுது. உடனே 'ஆ'ன்னு சந்தோஷமா வாயைப்பிளக்காதீங்க. நான் சொன்னது, ஹிரோஷிமா, நாகசாகி மாதிரி அழியப்போகுது. ஆனா ஒரே நாள்ல ஆகாது.கொஞ்சம் கொஞ்சமா உங்களை மயங்க வெச்சு மொத்தமா ஒழிக்கப்போறாங்க.
***************
கட்டுரை 1

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. 
 அதற்கு என்ன காரணமாம்?அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை  கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்? நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு  உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?
***************
கட்டுரை 2

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​
÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​  அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?

 **************
கட்டுரை 3
அது மன்​ன​ராட்சி ஆனா​லும்,​​ மக்​க​ளாட்சி ஆனா​லும்,​​ ஏன் சர்​வா​தி​கார ஆட்​சியே ஆனா​லும் அந்த நாட்​டை​யும்,​​ மக்​க​ளை​யும்,​​ அவர்​க​ளது நல​னை​யும் பாது​காப்​ப​து​தான் அடிப்​ப​டைக் கடமை.​ நல்ல பல திட்​டங்​க​ளின் மூலம் மக்​க​ளது நல்​வாழ்​வுக்கு ஓர் அரசு உத்​த​ரவு தரு​கி​றதோ இல்​லையோ,​​ அன்​னி​யர்​கள் தேசத்தை ஆக்​கி​ர​மிக்​கா​மல் பாது​காப்​ப​தும்,​​ சுரண்​டா​மல் பார்த்​துக் கொள்​வ​தும் எந்த ஓர் அர​சுக்​கும் அடிப்​ப​டைக் கடமை.​ இந்த அடிப்​ப​டைக் கட​மை​யைக்​கூட மத்​திய ஆட்​சி​யில் இருக்​கும் ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி செய்​யத் தவ​று​கி​றதோ என்​கிற ஐயப்​பாடு சமீ​ப​கா​ல​மா​கத் தோன்​றி​யி​ருக்​கி​றது.​

இந்​தியா மிகப்​பெ​ரிய மின் பற்​றாக்​கு​றை​யைச் சந்​திக்க இருக்​கி​றது என்​பதை யாரும் மறுக்​க​வில்லை.​ இந்​தி​யா​வின் எரி​சக்​தித் தேவையை எப்​படி எதிர்​கொள்​வது என்​ப​தில் அனை​வ​ரும் கைகோர்த்து,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நல​னை​யும் கருத்​தில்​கொண்டு செயல்​பட வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்து இருக்க முடி​யாது.​ இந்​தப் பிரச்​னை​யில் மக்​கள் கருத்தை முறை​யா​கக் கணிக்​கா​ம​லும்,​​ பொது​வான அணு​கு​மு​றை​யைக் கடைப்​பி​டிக்​கா​ம​லும் அமெ​ரிக்​கா​வு​டன் பல்​வேறு சம​ர​சங்​க​ளைச் செய்​து​கொண்டு அணு​சக்தி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது இந்​திய அரசு.​

அது​வும் போதா​தென்று,​​ இந்​தி​யா​வின் உரி​மை​களை அடகு வைக்​கும்,​​ நாளைய தலை​மு​றை​யி​ன​ரின் நியா​ய​மான பாது​காப்பை நிர்​மூ​ல​மாக்​கும் ஒரு நட​வ​டிக்​கை​யி​லும் இப்​போது மன்​மோ​கன் சிங் தலை​மை​யி​லான அரசு இறங்கி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கி​றது.​
அது இந்​திய நிறு​வ​னமோ,​​ பன்​னாட்டு நிறு​வ​னமோ எது​வாக இருந்​தா​லும்,​​ தாங்​கள் தொழில் செய்து லாபம் சம்​பா​திப்​ப​தற்​கா​கச் சுற்​றுச்​சூ​ழ​லைப் பாதிப்​ப​தும்,​​ தொழி​லா​ளர்​கள் மற்​றும் அந்​தத் தொழிற்​சா​லை​யைச் சுற்றி வாழும் மக்​க​ளின் நல்​வாழ்​வுக்​கும்,​​ ஆரோக்​கி​யத்​துக்​கும் பாதிப்பு ஏற்​ப​டுத்​து​வ​தும் ஏற்​பு​டை​ய​தல்ல.​ நமது அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் 21-வது பிரி​வின்​படி வாழ்​வு​ரிமை என்​பது ஒவ்​வோர் இந்​தி​யக் குடி​ம​க​னுக்​கும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.​

நமது உச்ச நீதி​மன்​றம் இந்​தப் பிரச்​னை​யில் மேலும் ஒரு​படி சென்று,​​ வாழும் உரிமை என்​பது உயி​ரு​டன் வாழ்​வது என்​பது மட்​டு​மல்ல,​​ சுய​ம​ரி​யா​தை​யு​டன் வாழ்​வது என்​ப​தும் அடிப்​ப​டைத் தேவை​க​ளான உண்ண உணவு,​​ உடுக்க உடை,​​ இருக்க வீடு இவை​க​ளு​டன் வாழ்​வது என்​ப​தும்​தான் என்று பல தீர்ப்​பு​க​ளின் மூலம் உறுதி செய்​தி​ருக்​கி​றது.​ அதை மேலும் விரி​வு​ப​டுத்தி,​​ மனித உரி​மை​யு​ட​னும்,​​ கௌ​ர​வத்​து​ட​னும் வாழ்​வது என்​பது,​​ பாது​காக்​கப்​பட்ட சுற்​றுச்​சூ​ழ​லு​ட​னும்,​​ நச்​சுக் கலப்​பில்​லாத காற்று மற்​றும் தண்​ணீ​ரு​ட​னும் வாழ்​வது என்​று​கூ​டத் தீர்ப்பு வழங்கி இருக்​கி​றது.​

உல​கி​லுள்ள ஏனைய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டங்​களை எல்​லாம்​விட,​​ இந்​திய அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டம் சுற்​றுச்​சூ​ழ​லுக்கு மிக அதி​க​மான முன்​னு​ரி​மை​யும் முக்​கி​யத்​து​வ​மும் அளித்​தி​ருக்​கி​றது.​ இயற்​கைச் சூழ​லைப் பேணு​வது மற்​றும் அதி​க​ரிப்​பது என்​பதை அர​சி​யல் சட்​டப்​பி​ரிவு 51-அ,​​ அடிப்​படை உரி​மை​யா​கவே நமக்கு அளித்​தி​ருக்​கி​றது.​

உச்ச நீதி​மன்ற பல்​வேறு தீர்ப்​பு​கள் வலி​யு​றுத்​தும் கருத்து,​​ எந்த ஒரு தொழில் நிறு​வ​ன​மும் அத​னால் ஏற்​ப​டும் சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​பு​க​ளுக்கு முழுப் பொறுப்​பும் ஏற்​றாக வேண்​டும் என்​ப​தைத்​தான்.​ தங்​க​ளது ஊழி​யர்​க​ளுக்கு மட்​டு​மல்ல,​​ அந்த நிறு​வ​னத்​தின் கழி​வு​கள்,​​ வாயுக் கசி​வு​கள் மற்​றும் நச்​சுத்​தன்மை போன்​ற​வற்​றால் சுற்​றி​லும் வாழும் பொது​மக்​க​ளுக்​கும்,​​ உயி​ரி​னங்​க​ளுக்​கும் ஏற்​ப​டும் பாதிப்​பு​கள் அனைத்​துக்​கும்​கூட நிறு​வ​னம் பொறுப்​பேற்​றாக வேண்​டும்.​

சட்​ட​மும் அர​சி​யல் சட்​ட​மும் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ தார்​மிக ரீதி​யா​கப் பார்த்​தா​லும்,​​ தாங்​கள் லாபம் கரு​திச் செய்​யும் தொழில் அடுத்​த​வ​ரைப் பாதிக்​கக்​கூ​டாது என்​ப​தும் அப்​ப​டிப் பாதிப்பு ஏற்​பட்​டால் அதற்​கான நஷ்ட ஈடும் பரி​கா​ர​மும் செய்ய வேண்​டும் என்​ப​தும் சட்​டம் இருந்​தா​லும் இல்​லா​விட்​டா​லும் மனித நாக​ரி​கம் ஏற்​றுக்​கொள்​ளும் கட​மை​யும்​கூட.​ நிலைமை இப்​படி இருக்​கும்​போது,​​ நமது மத்​திய அரசு விசித்​தி​ர​மான ஒரு சட்​டத்​தின் மூலம்,​​ அன்​னி​யப் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் நஷ்ட ஈட்​டுத் தொகைக்கு ஓர் உயர் வரம்பு விதித்து அவர்​க​ளுக்​குப் பாது​காப்பு அளிக்​கத் தயா​ராகி இருப்​ப​து​தான் வெட்​கக் கேடாக இருக்​கி​றது.​

அமெ​ரிக்​கா​வில் தொடங்கி ஏனைய பல வளர்ச்சி அடைந்த நாடு​க​ளு​டன் இந்​தியா கையெ​ழுத்​திட்ட அணு எரி​சக்தி ஒப்​பந்​தங்​க​ளுக்​குப் பிற​கும் அந்த நாட்டு நிறு​வ​னங்​கள் இன்​னும் அணு மின் நிலை​யங்​க​ளைத் தொடங்க ஆர்​வத்​து​டன் முன்​வ​ரா​தது ஏனாம் தெரி​யுமா?​ அந்த அணு மின் நிலை​யங்​க​ளில் ஒரு​வேளை கசிவு ஏற்​பட்டு அத​னால் பாதிப்பு ஏற்​பட்​டால்,​​ அதற்கு அந்​தப் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் முழுப் பொறுப்பு ஏற்​றாக வேண்​டுமே என்​ப​தால் அவர்​கள் தயங்​கு​கி​றார்​க​ளாம்.​ எப்​படி இருக்​கி​றது கதை.​ அணு மின் நிலை​யங்​க​ளில் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து லாபம் அடைய மட்​டும்​தான் தயா​ராம்!​ ​

நமது இந்​திய அரசு உடனே என்ன செய்ய இருக்​கி​றது தெரி​யுமா?​ அணு​மின் எரி​சக்தி பாதிப்​புச் சட்​டம் ​(சிவில் நியூக்​ளி​யர் லயபி​லிட்டி பில்)​ என்​றொரு சட்​டம் இயற்றி,​​ இந்த அணு​மின் நிலை​யங்​க​ளால் பாதிப்பு ஏற்​பட்​டால் அந்த நிறு​வ​னங்​க​ளின் அதி​க​பட்ச நஷ்ட ஈட்​டுத் தொகை 450 மில்​லி​யன் டாலர் என்று பாது​காப்​புத் தர முன்​வந்​தி​ருக்​கி​றது.​ அதற்கு மேலான பாதிப்​பு​க​ளுக்கு இந்​திய அரசே பொறுப்பு ஏற்​றுக் கொள்​ளு​மாம்.​

என்ன அயோக்​கி​யத்​த​னம் என்று யாரும் கேட்​டு​வி​டக் கூடாது.​ தேசப்​பற்​று​மிக்க ஓர் அரசு,​​ இந்​தி​யாவை ஓர் அமெ​ரிக்​கா​வாக மாற்​ற​வும்,​​ பன்​னாட்டு முத​லீ​டு​க​ளைப் பெறு​வ​தற்​கா​க​வும் இப்​படி ஒரு "சலுகை' அளிக்க இருக்​கி​றது.​ நாளைய தலை​மு​றை​யின் நல்​வாழ்வு முக்​கி​யமா,​​ இந்​திய மக்​க​ளின் பாது​காப்பு முக்​கி​யமா இல்லை பன்​னாட்டு முத​லீ​டும்,​​ ஆபத்​தான அணு மின்​சக்​தி​யும் முக்​கி​யமா?​

தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!
******
தினமலர் இணைய தளத்தில் வெளிவந்த ஒளிப்படம்.

5 கருத்துகள்:

  1. பகிர்தமைக்கு நன்றி

    அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய விடயங்கள்

    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  2. என்ன சரவணன்? பெரிய பெரிய குண்டுகளாக அல்லவா தூக்கிப் போட்டிருக்கிறீர்கள்:(???

    பதிலளிநீக்கு
  3. எல்லாருக்கும் விஷயம் தெரியணும்னுதான் இந்த பதிவை போட்டேன். மூணு கட்டுரையுமே தினமணியில வந்ததுதான்.முதல் கட்டுரை இன்றைய தலையங்கம்.

    நன்றி @ ராமலக்ஷ்மி


    நன்றி @ உலவு.காம்

    பதிலளிநீக்கு
  4. No Bombing!
    No Parking!


    ..."எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன். அது இதுக்குதானா" என்று தமிழில் பழமொழி சொல்லுவார்கள்.

    .........தேச​ந​லன் விலை​போ​கி​றது -​ ​ வியா​பா​ரி​க​ளால் அல்ல,​​ ஆட்​சி​யா​ளர்​க​ளால்!​ வந்தே மாத​ரம்!



    ........வந்தே மாத​ரம்!

    பதிலளிநீக்கு