Search This Blog

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

என்ன கொடுமை சார் இது.


"பிட்' அடித்து பிடிபட்ட மாணவன் தற்கொலை

தூத்துக்குடி :கோவில்பட்டி தனியார் பள்ளியில், தேர்வில் 'பிட்' அடித்தபோது பிடிபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன், பெற்றோருக்கு பயந்து ரயிலில்விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி,ராஜிவ் நகர் ராமமூர்த்தி மகன் அருண்குமார்(13), அங்குள்ள தனியார்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளியில் அறிவியல் தேர்வுநடந்த போது, 'பிட்' அடித்தான். அப்போது, அருண்குமாரை பிடித்த ஆசிரியர்,தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தார்.அது தொடர்பாக அருண்குமாரை கண்டித்ததலைமையாசிரியர், பின் அறிவுரை கூறி அனுப்பினார். சம்பவம் குறித்துதெரிந்தால், பெற்றோர் திட்டுவரோ என பயந்த அருண்குமார், வீட்டிற்குப்போகாமல் பல இடங்களில் சுற்றினான். இரவில், தனியார் தியேட்டர் பின்புறமுள்ளதண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியாக வந்த ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான். தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
தினமலர் செய்தி.
உழைத்துப்பிழைக்க இந்த உலகத்துல ஓராயிரம் தொழில். ஆனால் இன்னும் தேர்வுல மார்க் எடுக்கலன்னா அவனுக்கு உலகமே இல்லன்னுன்குற மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி வெச்சிருக்குறதுதானே  இது மாதிரியான தற்கொலைக்கு காரணம்?

3 கருத்துகள்:

  1. கஷ்டப்பட்டு பிட் அடிக்கும் போது இருக்கும் தைரியம் மாட்டிக்கும் போது இல்லையே! என்ன கொடுமை சரவணா!

    anbudan
    ram

    www.hayyram.blogspot.com

    பதிலளிநீக்கு