Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

அய்யா...எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாவணும்...


ரசிகர்களின்  மீது அக்கறை (?!) கொண்ட இயக்குநர்கள் சிலர் பெண்ணின் உன்னதமான பகுதியில் பம்பரம் விட்டு, ஆம்லெட் போட்டதோடு மட்டுமில்லாமல் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.

ஆனால் இந்தப் பெண் அந்த அளவுக்கெல்லாம் இறங்கிவிடவில்லை. அதனால அவங்க நேர்மை புடிச்சிருக்கு. தலையில வெச்சிருக்குற கேக்குல ஒருவேளை முட்டை (சைவமா அசைவமா?) கலந்துருக்கலாம். ஆனா இந்த ஒளிப்படத்தை தினமலர் இணைய தளத்துல பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் எல்லாம் சுத்தமான சைவம்தாங்க.

இந்த கேக் செங்குத்தா நிக்கிதே...உண்மையிலேயே கேக்குதானா?

நிஜமான கேக்கா இருந்தா கிளிப் போட்டு மாட்டியிருப்பாங்களா...இல்ல...ஃபெவிகால் போட்டு ஒட்டியிருப்பாங்களா?
அந்த கேக்கை சாப்பிடும்போது ஷாம்பூ வாசனை வருமா...இல்ல, ஒரு மாசமா தலையில அழுக்கு சேர்ந்துருந்தா அந்த நாற்றம் வருமா?

அமெரிக்க உளவுத்துறைக்கு தெரியாம நாம அணுகுண்டு வெடிச்சிருக்கலாம். ஆனா எறும்புக்குத் தெரியாம இனிப்பை வைக்க முடியாது.

இப்ப ஏன் இந்த கேள்வின்னுதானே யோசிக்கிறீங்க? காலையில இருந்து சீரியசாவே எழுதிகிட்டு இருக்கோமே...அப்புறம் நம்மளை எங்க ஏரியா, உள்ள வராதன்னு சொல்லிட்டீங்கன்னா?

அதனாலதான், நானும் காமெடியன்தான்..நம்புங்கப்பா...என்ற முயற்சிதான் இது.

நன்றி: தினமலர்

1 கருத்து: