Search This Blog

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சற்றும் மனம் தளராத ரசிகன் மீண்டும் எழுதும் கடிதம்

இயக்குனர் ஷங்கருடைய பிளாக்கிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.பாராட்டுக்களை அதிகமாகவே எழுதியிருந்தாலும் அவர் சறுக்கிய இடங்களையும் மிக மிக நாசூக்காக சுட்டிக்காட்டியபோதே என் மனது எந்த ரிசல்ட்டுக்கும் தயாராகவே இருந்தது.


எதிர்பார்த்தபடியே அந்தக் கடிதத்தை நிராகரித்துவிட்டார். தவறான வார்த்தைகளால் வசைபாடிய கடிதமாக இருந்து அதை வெளியிடாமல் இருந்தால் ஒரு நியாயம் உண்டு. அவருடைய திறமைகளைக் குறிப்பிட்ட அதே நேரம் பாய்ஸ்,சிவாஜி ஆகிய படங்களில் அவருடைய உண்மையான சூழ்நிலையை மிக கவனத்துடன்தான் விளக்கினேன்.

ஆனால் அதை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யாரும் இதை தயவுசெய்து தனி மனிதத்தாக்குதலாக கருதவேண்டாம்.ஒருவரது படைப்பு எப்போது மக்களின் பார்வைக்கு வருகிறதோ அப்போதே அந்த படைப்புகள் குறித்த விமர்சனங்கள் எழுவதை தவிர்க்க முடியாது. அவரது ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், ஜீன்ஸ், அந்நியன் படங்கள் மற்றும் அவரது தயாரிப்புகளான காதல், இம்சைஅரசன், ஈரம் பற்றி எல்லாம் பாராட்டிவிட்டு பாய்ஸ் படம் பற்றிய என் கருத்தை சொன்னது அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.

விமர்சனத்தை வெளியிடவில்லை என்றாலும் பரவாயில்லை.இந்த காரணத்தால் வெளியிடவில்லை என்று எனக்கு ஒரு அறிவிப்பு கூட செய்யவில்லை. அது ஏன் என்பதுதான் என் கேள்வி.

வெறும் புகழுரைகளை மட்டும் எதிர்ப்பார்க்கும் படைப்பாளிகள் வரிசையில் ஷங்கரும் இடம்பிடித்துவிட்டார் என்ற என் கருத்துக்கு எதாவது ஒரு எதிர்வினை யாரிடமிருந்தாவது வருகிறதா என்று பார்ப்போம்.

அவருக்கு நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள். விமர்சனத்தை டெலீட் செய்யும் போது ஒரு வரியில் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பமுடியவில்லை என்பதற்கு நேரம் மட்டுமே காரணமாக இருக்காது என்பது ஊரறிந்த ரகசியம். இல்லை என்றால் பின்னூட்டத்தில் வெறும் புகழுரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு எச்சரிக்கையை போட்டிருக்கலாம்.

வெளிப்படையாக பார்க்கும்போது புகழுரைகள் சுகமாக தெரிந்தாலும் ஒரு மனிதனை வீழ்த்துவதில் அதனுடன் போட்டி போட யாராலும் முடியாது. அதே நேரம் விமர்சனங்கள்தான் ஒரு மனிதனை முழுமையாக செதுக்கும் கருவி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இப்போ அவர் உன் விமர்சனத்தை வெளியிடாததால் என்ன குடிமுழுகிப்போய்விட்டது என்று கேட்பவர்களுக்காக ஒரு சில விஷயங்களைக் கூறுகிறேன்.

அவர் படங்களில் லஞ்சம் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி என்று சில நல்ல கருத்துக்களை சொல்லியிருந்தாலும் அந்த படங்களுக்கான  பத்து ரூபாய் அனுமதிச்சீட்டை ஐம்பது ரூபாய்க்கு(ஊரைப்பொறுத்து தொகை மாறுபடும்) விற்பது கண்கூடு.

திரைத்துறையில் இவர்கள் கருப்புபணத்தில் புரள காரணமான ரசிகர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். சுட்ட படமாக இருந்தாலும் உருப்படியான படமாகத்தான் கேட்கிறோம்.

பாய்ஸ் படத்தை ஏன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அனைவரும் அறிவோம்.

ஆனால் படம் எடுத்தவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? தமிழர்கள் இன்னும் முகமூடி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இன்னும் அவர்களின்  ரசனை மேம்படவில்லை என்று எதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.

இந்த கருத்து முழுவதும் சரி என்றும் சொல்ல முடியாது. தவறு என்றும் சொல்ல

முடியாது. ஏன் அந்தப் படத்தை ஒதுக்கினார்கள் என்ற காரணத்தை  இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் புத்தகத்தில் மேற்கோள் காட்டிய விஷயத்துடன் மிகவும் நாகரீகமான வார்த்தையில் நான் சொன்னதைக் கூட படைப்பாளிகளால் தாங்க முடியவில்லை என்பதால்தான் இந்தக் கடிதம்.

என்னுடைய விமர்சனம் அந்த தளத்தில் வெளியாகவில்லை என்றால் என்ன. என்னுடைய பிளாக்கில் எழுதிவிட்டுப் போகிறேன்.

நான் ஷங்கர் இணையதளத்திற்கு எழுதிய கடிதத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

2 கருத்துகள்:

  1. விடாதீங்க பாஸ்.. சரணா.. கொக்கா?? இன்னம் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு.. அடுத்த கடிதத்தை அனுப்பு பாஸ்!!

    பதிலளிநீக்கு
  2. @ கலையரசன்

    // விடாதீங்க பாஸ்.. சரணா.. கொக்கா?? இன்னம் நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டு.. அடுத்த கடிதத்தை அனுப்பு பாஸ்!!//

    இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனுசன ரணகளமாக்கிட மாட்டீங்கில்ல?

    பதிலளிநீக்கு