Search This Blog

வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழ்ப்புத்தாண்டு - சில தகவல்கள்...


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். நான் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டேன். கண்மூடித்தனமா ஒரு விஷயத்தை ஆதரிக்கிற வழக்கமோ எதிர்க்குற உணர்வோ எனக்கு கிடையாது.

மனிதனுடைய உடம்புல தேவையில்லாத உறுப்புன்னு எது? ஒவ்வொன்றுமே எதாவது ஒரு காரணத்துக்காகதான் உருவாகியிருக்கணும். சில பயன்கள் நமக்குப் புரியிறது இல்லை. அவ்வளவுதான் விஷயமே.

அமாவாசை, பவுர்ணமி கிரகணங்கள் உட்பட சில விஷயங்களை பஞ்சாங்கத்தில் இருப்பதை இவை, வானசாஸ்திரம். அவ்வளவுதான் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். சிலர் இதை மறுத்துப்பேச காரணமாக சொல்வது, பஞ்சாங்க கணக்கீடு பூமியை மையமாக கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் சூரியனைத்தான் பூமி உட்பட பல கிரகங்கள் சுற்றி வ்ருகின்றன.என்பதைத்தான்.

அறிவியல் அளவுக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க முடியாததற்கு காரணம் இந்த சாஸ்திரத்தில் குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

12 ராசிகள், 12 கட்டங்கள் 9 கிரகங்கள் என்று வைத்துப் பார்க்கும்போது அந்நியன் படத்தில் வரும் கணக்கைப் போல் 12 X 12 X  9 X 8 X 7 X 6 X 5 X 4 X 3 X 2 X 1 என்று பெருக்கிக்கொண்டே சென்றால் எத்தனை வருகிறதோ அதைத்தாண்டிய எண்ணிக்கையில் ஒருவருடைய ஜாதகத்தை வைத்துப் பலன் சொல்லலாம்.

இதை கணித்து முடிப்பதற்குள் பலரது ஆயுள் காலமே முடிந்துவிடுமே.

எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து ஒருவரது பிறந்த நட்சத்திரத்துக்கும் அவரது குணாதிசயத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்போது ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரே மாதிரியான குணத்துடன்தானே இருக்கவேண்டும் என்று கேட்கலாம். இரட்டைப்பிள்ளைகளிடம் கூட தாயாரால் நூறு வித்தியாசம் சொல்ல முடியும். ஒருத்தர் போல ஒருத்தர் இருக்க முடியாது. எல்லாம் ஒரு கணக்குதான். ஒரு புதிருக்கு விடை என்பது 6 என்று வைத்துக் கொள்வோம். அது 4+2 ஆ அல்லது 1+5 ஆ அல்லது வேறு எண்களின் சேர்க்கையா என்பதை தீர்மானிக்கும் காரணிகள் வேறுபடலாம். ஆனால் விடை 6 என்பதில் மாற்றம் இல்லை. இதுதான் ஜோதிடம்.

காரணியான எண்கள் மாறுவதால் எவ்வளவோ வித்தியாசங்கள் ஏற்படலாம்.ஒரு நூலிழை அளவு பாதையை விட்டு விலகும் வாகனம் விபத்துக்குள்ளாவதைப் போல்தான் இதுவும்.

இன்னொரு விஷயம், நாடி ஜோதிடம் பற்றி.

உலகத்தில் தினம் தினம் பிறக்கும் எத்தனையோ பேருக்கு அத்தனை கோடி ஓலைகளா இருக்கின்றன என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.

இதில் யோசிக்க எதுவும் இல்லை. இதுவும் ஒரு சிம்பிள் கணக்குதான். ஜோதிடக்கலை வரையறுத்துள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாகங்கள் வீதம் மொத்தம் 108. நிச்சயமாக எல்லா மனிதனின் கைரேகையும் இந்த 108 வகைகளில் ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் ஒரே மாதிரியாக இருக்காது. அதாவது பூஜ்யத்துடன் ஒன்றிலிருந்து ஒன்பது எண்கள் வரை மொத்தம் பத்து எண்கள்தான். ஆனால் எத்தனை மதிப்புகளில் எழுதுகிறோம். 1ம் 11ம் ஒன்றா? இல்லையே.

கம்ப்யூட்டர் புரோகிராம்களும் 0,1 இந்த இரண்டு எண்களை வைத்து மட்டுமேதான் எழுதப்படுகின்றன. இப்படித்தான் இதுவும்.

ஜோதிடக்கலை பற்றி போகிறபோக்கில் எனக்குத்தெரிந்த சில தகவல்களே என்னை மலைப்படையச்செய்து விட்டன. பீச் ரோட்டில் காத்து வாங்கப் போனதற்கே இவ்வளவு பிரமிப்பு. கடலில் இறங்கினால் அவ்வளவுதான் என்ற எண்ணத்தில் இதைப் பற்றி அதிகமாக அறிய முயற்சிக்கவில்லை.

அதனால போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.

******

வெற்றிகரமான மூன்றாவது வாரம்

அது என்னமோங்க, கொஞ்ச நாள்தான் நான் திரையரங்கத்துல வேலை பார்த்தேன். நடுவுல அந்த எண்ணமே இல்லாம இருந்தாலும் இப்போ பிளாக்ல எழுத ஆரம்பிச்ச உடனே பழைய காதலியோட நினைவு மாதிரி, புரொஜக்டர், போஸ்டர்தான் அதிகமா நினைவுக்கு வருது.

படம் வெளிவந்து எட்டாவது நாளே வெற்றிகரமான ரெண்டாவது வாரம்னு போஸ்டர் ஒட்டுற பழக்கம் யார் ஆரம்பிச்சதுன்னு தெரியலை.

நாங்களும் டிசைன் பண்ணுவோம்ல...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக