Search This Blog

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கேஸ் விநியோகம் முறைப்படுத்தப்படுமா?

கிராமப்புறங்களில் கேஸ் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கக்கூடிய திட்டம்தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏற்கனவே கேஸ் இணைப்புப் பெற்ற ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஒவ்வொரு முறையும் சிலிண்டர் பெறுவதற்குள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.


வசதி படைத்தவர்கள் அதிக பணம் செலவழித்து கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்களைப் பெற்று விடுகிறார்கள். வாகனங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கும் வீடுகளுக்குச் செல்ல வேண்டிய சிலிண்டர்கள்தான் அதிகமாக முறைகேடாக பயன்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.

ஒவ்வொரு கேஸ் ஏஜென்சிக்கும் தினசரி எவ்வளவு லோடு வருகிறது. அவை முன்பதிவு செய்யப்பட்ட வரிசைப்படிதான் வழங்கப்படுகிறதா என்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லாததுதான் இந்த மாதிரியான முறைகேடுகளுக்கு முக்கியக் காரணம்.

எவ்வளவோ விஷயங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு, இணையதளம் மூலம் எவ்வளவு சிலிண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வெளிப்படையாக்கும் வசதியை ஏற்படுத்தினால் இந்த முறைகேடுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

ஒவ்வொரு ஏஜென்சியிலும் அன்றைய ஒதுக்கீடு யார் யாருக்கு என்ற விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்கும்படி செய்தாலும் நல்ல பலன் தரும். இது மிகவும் எளிமையான, அதிகம் செலவு வைக்காத நடைமுறை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதைச் செய்வார்களா?

2 கருத்துகள்:

  1. எவ்வளவோ விஷயங்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு, இணையதளம் மூலம் எவ்வளவு சிலிண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வெளிப்படையாக்கும் வசதியை ஏற்படுத்தினால் இந்த முறைகேடுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். .......... Good suggestion. Govt. needs to take care of this issue.

    பதிலளிநீக்கு
  2. @ Chitra

    //Good suggestion. Govt. needs to take care of this issue.//

    நாம் யோசித்துப் பார்த்தால் சின்ன விஷயமாக இருக்கும். ஆனால் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவது எல்லாம் இதுபோன்ற அற்ப விஷயங்கள்தான்.

    தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு