Search This Blog

வெள்ளி, 1 ஜனவரி, 2010

புதிய தலைமுறை 07.01.2010 தேதியிட்டு இன்று 01.01.2010 வெளிவந்த இதழில் என்னுடைய வாசகர் கடிதம்.

வெறும் உணர்ச்சிவசப்பட்ட வாதமாக, நடைமுறைச் சிக்கல்களை மூடிமறைக்கும்விதமாக இல்லாமல், உண்மை பேசியது ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் விவாதம். விதிகள் நிர்ணயித்த அளவில் மட்டுமே பிள்ளைகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்றால் ஒரு குழந்தைக்கு குறைந்தபட்சமே எழுநூற்று ஐம்பது ரூபாய் ஆகும் என்ற நிஜம் வெற்று வாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாகத்தான் இருக்கும்.


இந்தக் கருத்து இருதரப்பு வாதங்களிலும் இடம்பெற்றதை வைத்தே பிரச்சினையின் ஆணிவேரை நேருக்கு நேர் சந்திக்க அனைவரும் அஞ்சுவதை உணரமுடிகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, நகரங்களில் பத்து நிமிடங்களுக்குள் நடந்து செல்லும் தொலைவிலும், கிராமங்களில் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர்  தொலைவிலும் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு பயண நேரம் மீதமானால் அவர்கள் திறன் கூடுதலாகும்.விளையாட நேரம் கிடைத்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

******

மேலே உள்ள கடிதம்தான் பிரசுரமானது. பதிவில் இடம்பெற்றுள்ள இதழிலும் நான் எழுதிய விமர்சனக்கடிதம் பிரசுரமானது. ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றுத்தந்தது.

4 கருத்துகள்: