Search This Blog

திங்கள், 21 டிசம்பர், 2009

மறுபடியும் முதல்லேருந்தா...இளைய பாரதம் URL முகவரி மாறுகிறது.


சில சமயம் நாம் செய்யக்கூடாதுன்னு நினைக்குற விஷயத்தைதான் கட்டாயமா செய்ய வேண்டியிருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அந்த அனுபவம் பலதடவை ஏற்பட்டிருக்கு. இப்பவும் அப்படித்தான்.

இதுவரை ஆங்கிலப் புத்தாண்டுக்கு பெரிசா அலட்டிக்காமதான் இருப்பேன். ஆனா 2010க்கு இளைய பாரதம் வலைப்பதிவுல மாற்றம் செய்ய வேண்டிய சூழ் நிலை வந்துடுச்சு.

என்னுடைய வலைப்பதிவில் பின்தொடருபவர்கள் கெஜட்டை சேர்க்குற ஆப்ஷன் வேலை செய்யலை. நானும் மனம் தளராம பின்னூட்டம் இட்ட நண்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். பூங்குன்றன், நாஞ்சில் பிரதாப், angel இவங்க எல்லாம் சரியான வழிதான் சொல்லியிருந்தாங்க. ஆனா எதுவும் ஒர்க் அவுட் ஆகலை.

டாஷ்போர்டை ஆங்கிலத்துல வெச்சு இந்த ஆப்ஷனை சேர்க்கலாம்னு angel , நாஞ்சில் எக்ஸ்பிரஸ் தளத்துல பின்னூட்டம் போட்டிருந்தாங்க. அந்த  முயற்சியை நான் தொடக்கத்துலேயே செய்து பார்த்துட்டேன்.

கடைசியா என்னுடைய மூளையை கசக்கிப் பிழிஞ்சு (துணியையே துவைக்கிறது இல்லை...இவருதான் மூளையை கசக்குறாராம்...அப்படின்னு ஒருத்தர் முனங்குறது காதுல விழுதுங்க.) உண்மையை கண்டுபிடிச்சுட்டேன்.

ஆங்கில ஃபார்மெட்டுலேயே புது தளத்தை உருவாக்குறதுதான் சரியான வழின்னு புரிஞ்சு போச்சு. writer-saran இந்த முகவரியை இழக்கணுமேன்னு வருத்தம்தான். அப்புறம்தான் இது என்ன படிச்சு வாங்குன பட்டமா...அது கிடக்குது...அப்படின்னு வேற முகவரிக்கு முயற்சி பண்ணினேன். http://ilaiyabharatham.blogspot.com கிடைச்சுடுச்சுங்க. இந்த தளத்துல எல்லா பதிவையும் சேர்த்துட்டேன்.

ஆனா, பழைய இம்சைஅரசன் 23ம் புலிகேசியில தங்கச்சுரங்கத்துல வடிவேலு மாட்டிக்கொள்வார். வடிவேலு இடத்தில் வேறு ஆள் மன்னராக இருப்பது பற்றி காவலர்கள் ஒவ்வொரு செய்தியைப் பேசும்போதும்  ஒரிஜினல் அரசனான அவர், அதிர்ச்சி அடைவார்.


அதே போல் நீங்களும் இளையபாரதத்தை தேடி அது இல்லாமல் அதிர்ச்சி அடையக்கூடாதுன்னு ஒரே காரணத்துக்காக 2009ம் ஆண்டு பதிவு எல்லாத்தையும் இதுலயே விட்டு வெச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.(ஆளில்லா கடையில டீ ஆத்திகிட்டு பேசுற பேச்சைப் கேளுன்னுதானே சொல்ல வர்றீங்க?)

2010 தொடக்கம் முதல் புதிய பதிவுகளை மட்டும் http://ilaiyabharatham.blogspot.com இதுல வெச்சுகிட்டு ரெண்டு வீட்டையும் ச்ச...ரெண்டு தளத்துலயும் பயணம் பண்ணலாம்னு ஒரு யோசனை.

இவன் பின்னால எல்லாம் போக வேண்டியிருக்கேன்னு அலுத்துக்காம புது தளத்துக்குப் போய் வரிசையில சேர்ந்துக்குங்க. அங்க போனதும் நானே முதல் ஆளா அங்க சேர்ந்து இருக்குறதைப் பார்த்து பயப்படக்கூடாது. என்னைய நானே மதிக்கலைன்னா வேற யார்கிட்ட இருந்து அந்த மரியாதையை எதிர்பார்க்க முடியும்?

பின்தொடருதல்  தொடர்பான ஆலோசனை வழங்கிய பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக