Search This Blog

புதன், 16 டிசம்பர், 2009

ராஜீவ் கொலை தொடர்பான குற்றவாளிகளில் இருவர் தப்பித்த கதை ...(நானும் ரவுடிதான் -வடிவேலு பாணியில் பேசி எஸ்கேப் ஆனவர்கள்)

நன்றி:சூரிய கதிர் டிசம்பர் 16-31, 2009

ஒரு சினிமா படத்தில் காமெடி நடிகர் வடிவேலு, 'நானும் ரவுடிதான். என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க'ன்னு வலுக்கட்டாயமாக போலீஸ் ஜீப்ல ஏறப்போக, போலீஸ்காரர் வடிவேலுவை வெளியே பிடித்துத் தள்ளும் காட்சியைப் பார்க்கும்போது எனக்கு சிவராசன் நினைவுதான் வரும்.

சிவராசன், சுபா படங்களை நோட்டீஸ் அடித்தும், பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் தேடிக்கொண்டிருந்த நேரம் அது. பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகேயே சிவராசனும், சின்ன சாந்தனும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு போலீஸ்காரர் கையில் பத்திரிகை ஒன்றை வைத்து சிவராசன், சுபா படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, சிவராசன் சின்னசாந்தனிடம் 'இப்ப நான் இந்த போலீஸ்கிட்ட போய் காமெடி பண்றேன் பாரு'ன்னு சொல்ல சின்னசாந்தன் எதுக்கு வம்பு என சிவராசனை தடுத்தும் கேட்காமல், போலீசிடம் போய் பேப்பரில் வந்த தன் படத்தைக் காட்டி 'இந்த ஆளை பிடிச்சு கொடுத்தா ஏழு லட்சம் பரிசுன்னு போட்டிருக்குல்ல. நான்தான் அது. என்னை பிடிச்சுக் கொண்டு போய் அந்த பரிசுப் பணத்தை வாங்கிக்குங்க'ன்னு சிவராசன் சொல்ல, 'யோவ்...போய்யா, என்ன கிண்டல் பண்றியா?' என போலீஸ்காரர் திட்டி அனுப்பியிருக்கிறார். அந்த அளவிற்கு பேச்சு,முக பாவனைகள், உடல் அசைவுகளை அவ்வப்போது மாற்றிக்கொள்வானாம் சிவராசன். எங்களிடம் விசாரணையில் இருந்த சின்னசாந்தன் இந்த சம்பவத்தைச் சொன்னதும் அப்படியே திகைத்துப் போய் விட்டோம்" என்கிறார் ரகோத்தமன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு பற்றி முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் புத்தகம் வெளியிட்டது தெரிந்ததுதான். தற்போது அந்த வழக்கு பற்றி விசாரணை அதிகாரியாக இருந்த சி.பி.ஐ சூப்பரின்டென்டெண்ட் கே. ரகோத்தமன் தன் பங்கிற்கு தானும் ஒரு புத்தகம் எழுதி இன்னும் ஒரு மாதத்தில் வெளியிட இருக்கிறார்.

இது பற்றி இரண்டு பக்க கட்டுரை சூரிய கதிர் டிசம்பர் 16-31, 2009 இதழில் வெளிவந்துள்ளது.

2 கருத்துகள்:

  1. சுவாரஸியமான விஷயம்.
    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. @ ஷங்கி

    //சுவாரஸியமான விஷயம்.
    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்!//

    அட...அம்பது பதிவு நான்தான் போட்டேனா? உண்மையிலேயே கவனிக்கலங்க. நீங்க பார்த்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி. அப்பப்ப நம்ம பூவை வந்து பார்த்துட்டு போங்க.

    பதிலளிநீக்கு