Search This Blog

வியாழன், 10 டிசம்பர், 2009

கடவுளே... எனக்கு காதல் வந்துடுச்சா?


"அங்க இலவச வேட்டி கொடுக்குறாங்களா?..."

"யோவ்...இருக்குற வேட்டிய உருவாம விட்டா போதாதா..."

முதல்வன் படத்தில் திருவாளர் பொதுஜனத்துக்கும் மணிவண்ணனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் மேலே இருக்கிறது.

பத்து ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு குனிந்த விவேக் மீண்டும் மீண்டும் 'அங்கே' காயமடைவார்.(படம் : பெண்ணின் மனதைத் தொட்டு)

ரயிலில் மயக்க பிஸ்கட், நிதி நிறுவனம்னு நம்ம ஆளுங்க ஏமாறுற இடத்தோட பட்டியல் ரொம்பவே நீளம். அதை விட்டுட்டு அப்படியே வந்தா ஒரு விஷயத்தை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கலாம்.

அன்றைய சூழ்நிலையை மறந்துட்டு வேற ஏதேதோ கற்பனையில மூழ்குறதுனாலதான் இது மாதிரி சிக்கல்கள் எல்லாமே வருது.

நம்ம அப்துல்கலாம் ஐயா கனவு காணுங்கன்னு சொன்னது இப்படி இல்லைங்க.

இப்படித்தான் ஒரு கல்லூரி மாணவன் கோயிலுக்குப் போய் "கடவுளே...எனக்கு சாப்பிடப்பிடிக்கலை...தூக்கம் வரலை...புத்தகத்தை எடுத்தா என்னென்னவோ யோசனை எல்லாம் தோணுது...எனக்கு காதல் வந்துடுச்சோ? " அப்படின்னு கேட்டான்.

உடனே கடவுள் இவனைப் பார்த்து முறைச்சாரு...

சில நொடிகள் கழித்து, "அட வெண்ணை...செமஸ்டர் வந்துடுச்சுடா... போ...போய் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு...இது வரைக்கும் எழுதுன ஒரு செமஸ்டர்ல கூட மார்க் வரலை...காதல் வருதாமோ?... பிச்சுபுடுவேன் பிச்சு...." அப்படின்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக