Search This Blog

புதன், 23 டிசம்பர், 2009

ச்சே...இப்படித்தானா போய் அசிங்கப்படுறது?...(எல்லாம் வேட்டைக்காரன் மேட்டருதான்...)


விஜய்க்கு முதன்முதலா மெகா ஹிட் படம்னா அது பூவே உனக்காகதான். ஆனா நான் அதுக்கு முன்னாலயே அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கேன். செந்தூரபாண்டி படத்தை கேபிள் டி.வி யில பார்த்ததுக்கு அப்புறமும் தியேட்டர்ல போய் ரசிச்சுருக்கேன்.(?!)

அப்புறம் ரசிகன்,தேவா - இந்தப் படங்களை எல்லாம் முதல் நாளே போய் பார்க்குறதுல ஒரு ஆர்வம். தியேட்டர் உரிமையாளர் குடும்பத்துடனே நட்பு என்பதால் அப்போதெல்லாம் சில சமயம் பணம் கொடுப்பேன். பல நேரங்களில் பெயரளவு கணக்குதான்.(காந்தி கணக்குன்னு சொல்லி அவரை அவமரியாதை செய்ய எனக்கு விருப்பம் இல்லை.)



ஆனா வரிசையில நின்னு அனுமதிச்சீட்டு வாங்கி, கவுண்டர் வழியா போனதே இல்லை. திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் போற வழிதான். சின்ன வயசுல இதனால ஒரு சந்தோஷம் இருந்துச்சுங்க.


ஆனா கடந்த பத்து ஆண்டுகள்ல திரையரங்கத்துல போய் படம் பார்த்தது ரொம்பவே குறைவு. தியேட்டர்காரங்க படத்தை திரையிட பெரிய தொகை கொடுக்குறதால இலவசமா நம்மளை உள்ளே விட்டா கட்டுபடியாகாது. அவங்களை தர்மசங்கட நிலையில நிறுத்திடக்கூடாது.

சின்ன ஊர்லேயே சாதாரண நாட்கள்ல டிக்கட் ஐம்பது ரூபாய்னு சொல்லுவாங்க. இப்பவும் என்னால ஒரு நாளைக்கே ஐம்பது ரூபாய் சம்பாதிக்க முடியலை.அவ்வளவு பணம் கொடுத்து பார்க்குற அளவுக்கு படங்களும் வர்றது இல்லை. அப்புறம் ஏன் கடன் வாங்கி தலைவலியை பர்சேஸ் பண்ணணும்ன்னு என் மனசாட்சி ஒரு கேள்வி கேட்டுச்சு. அதனால அதிகமாவே அவாய்ட் பண்ணிட்டேன்.



இப்ப வேட்டைக்காரன் விஷயத்துக்கு வர்றேன். எங்க ஊர்ல உள்ள பத்திரிகை செய்தியாளர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள்தான். அதுல ஒருத்தர்கிட்ட இன்னைக்கு காலையில பேசிகிட்டு இருந்தேன்.

அவருதான் தமிழகத்தின் வட மாவட்டத்துல வேட்டைக்காரன் பார்க்கப் போன ஒரு ஆள் அசிங்கப்பட்டு காமெடி பீசானது பத்தி சொன்னார்.

அவரு எதோ ஒரு தொண்டு நிறுவன பொறுப்பாளரா இருக்காராம். அந்த பழக்கத்துல ஒரு தியேட்டர்ல இலவச அனுமதியிலதான் எப்பவுமே படம் பார்ப்பாராம். வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன அன்னைக்கும் அப்படியே போயிருக்காரு. போட்ட பதினஞ்சு லட்சம் பாயாசமாயிடுமோன்னு கவலையில இருந்த உரிமையாளர், இலவசமா உள்ளே நுழைய முயன்ற ஆள்கிட்ட,"யோவ்...நூறு ரூபா காசைக் கொடுத்துட்டு உள்ள போய்யா."ன்னுருக்கார். இப்படி சிக்கிடும்போது அவரைச் சுத்தி நின்னவங்க என்ன நினைச்சுருப்பாங்கன்னு யோசிச்சேன். நீங்க சொல்லுங்க...காமெடி பீசுன்னுதானே சொல்லுவாங்க?

ஒருத்தர் என்ன மனநிலையில இருப்பாங்கன்னு ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சுடலாங்க. நீங்க செய்யப்போற காரியத்தை அவரு செய்தா நாம என்ன மனநிலையில இருப்போம்னு யோசிச்சா போதும். அந்த காரியத்தை செய்யலாமா வேணாமான்னு நம்ம மனசாட்சி சொல்லிடும்.

அது பேச்சைக் கேட்டு நடந்தா நேரங்காலம் தெரியாம யார்கிட்டயாவது சிக்கி மொக்கையாகுறதுலேர்ந்து தப்பிச்சுடலாம். ஒரு திரையரங்கத்துல எனக்கு இலவச பாஸ் எழுதியே கொடுத்திருந்தாங்க. அதை வெச்சு 1999ம் ஆண்டு ஐந்து அல்லது ஆறு படங்கள் பார்த்திருப்பேன். பிறகு அதை நான் பயன்படுத்தியதே இல்லை. இது வேண்டாமேன்னு மனசுதான் சொல்லுச்சு. அதனால அடுத்தவங்க சொல்லி மொக்கையாக்க வேலையில்லை.

மற்றவங்க அனுபவத்துல இருந்தும் பாடம் கத்துகிட்டா ரொம்ப நல்லது. ஏன்னா, நம்ம அனுபவத்துல இருந்து பாடம் கத்துக்கணும்னா எத்தனை பிறவி எடுத்தாலும் வாய்ப்பே இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. நான் அதன்படி நடக்குற ஆள்.

அப்ப நீ எதுலயுமே சிக்கலையான்னுதானே கேட்குறீங்க...இதைவிட பெரிய மொக்கையாகியிருக்கேங்க. அந்த அனுபவத்தை அடுத்த வருஷம் எழுதுறேன்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு சின்ன உதாரணம். கல்லூரியில படிக்கும்போது (ஆஹா...ஆரம்பிச்சுட்டான்யா...ஆரம்பிச்சுட்டான்யா...) ஐந்தாவது செமஸ்டர்ல ஒரு குறிப்பிட்ட அக்கவுண்ட் பேப்பர்ல ஒரு சில மாணவிகள் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தாங்க. நிறைய பேர் எண்பது, தொண்ணூறுன்னு எல்லாம் எடுத்திருந்தாங்க. ஆனா நான்

ஐம்பத்தொன்னுதான் எடுத்தேன். (கல்யாண மண்டபத்துல மொய் எழுதுன பேனாவால பரிட்சை எழுதுனியா)

ஆனா ஷேர் மார்க்கெட் தொடர்பான பாடத்துல எல்லாரும் ரொம்பவே திணறுனாங்க.

நான், எண்பத்தி ரெண்டு மார்க் எடுத்தேன். (என் வழி தனி வழி...குறைவான மார்க் எடுத்தாலும்  தனியா...அதிகமா மார்க் எடுத்து பேராசிரியர்கள் கிட்ட பாராட்டும், சக மாணவர்கள், மாணவிகள்கிட்ட வயிற்றெரிச்சல் வாங்கினாலும் தனியாதான்.)

அதெல்லாம் சரி...வேட்டைக்காரன் பார்த்தியா இல்லையான்னுதானே கேட்டீங்க...நான் சிக்க மாட்டேனே...

3 கருத்துகள்:

  1. மனசாட்சி ஒரு கேள்வி கேட்டுச்சு.

    ungaluku manasatchila iruko

    பதிலளிநீக்கு
  2. . கல்லூரியில படிக்கும்போது (ஆஹா...ஆரம்பிச்சுட்டான்யா. ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்ய)
    nan sola vendiyathu neengale solitinga

    பதிலளிநீக்கு
  3. நான் சிக்க மாட்டேனே..

    intha dialogue ku kaga nan unga veetuku auto anupuven

    பதிலளிநீக்கு