Search This Blog

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பள்ளி மாணவர்களை பலி கொடுக்கத் துணியும் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள்



திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் அருகருகே உள்ளன. பள்ளி முடியும் நேரத்தில் அரசுப்பேருந்துகள் இங்கே நிறுத்தப்படுவது இல்லை.

மாலை நேரங்களில் பேருந்துகளைத் துரத்திச் சென்று மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதும் மாணவிகள் வெகுநேரம் காத்திருந்து நேரங்கழித்து வீடு போய்ச் சேரவேண்டியதும் தினசரி வாடிக்கையாகி விட்டது.

பேருந்து நிறுத்தம் எதிரில் சாலையை இரண்டாகப் பிரித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தற்காலிக இரும்பு வேலிகள் வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களை ஏற்றாமல் செல்வதற்காக, ஓட்டுநர்கள் பேருந்தை இடப்புறத்தை விட்டு வலப்புறமாக மிகவும் வேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். அப்போது பேருந்தில் ஏற முயலும் மாணவர்கள் தற்காலிக இரும்பு வேலிகளில் அடிபட்டுக் கீழே விழுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகிவிடும்.


அரசு இலவச பஸ் பாஸ் கொடுத்தது மாணவர்களை சவக்கிடங்கிற்கு அனுப்பிவிடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

இப்படித் தாறுமாறாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துக் கண்டித்தால்தான் இளைய சக்தியை அநியாயமாக பலி கொடுக்கும் அவலம் தடுக்கப்படும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

ஜனவரி 2006ல் இதை "இளைய சக்தியை இழக்கலாமா" என்ற தலைப்பில் எழுதினேன். இதனால் கிடைத்த ஒரே பலன், சாலைக்கு நடுவே இருந்த தற்காலிக இரும்பு வேலிகளை உடனடியாக அகற்றி விட்டார்கள்.

அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொள்ளும் லட்சணம்தான் எல்லாருக்குமே தெரியுமே. இன்று வரை எந்த ஊரிலும் பெரும்பாலான ஓட்டுநர்களின் அலட்சியப்போக்கு குறையவே இல்லை.

1 கருத்து:

  1. அரசுப்பேருந்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொள்ளும் லட்சணம்தான் எல்லாருக்குமே தெரியுமே. இன்று வரை எந்த ஊரிலும் பெரும்பாலான ஓட்டுநர்களின் அலட்சியப்போக்கு குறையவே இல்லை.

    m nama india la tamil nadula irukom

    பதிலளிநீக்கு