Search This Blog

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஒருநாள் போலீஸ் - தேர்தல் அனுபவ ரீமேக்

மினி குவார்ட்டருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?

வாழ்க்கைக்கும் வீடியோ பிளேயர் மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? - இப்படி ஒரு வசனம் முதல்வன் படத்துல வரும். வாழ்க்கையில இல்லன்னா என்னங்க...நம்ம மனசுக்கு ரீவைண்ட், ஃபார்வேர்ட் மட்டுமில்லாம எவ்வளவோ இருக்கு. நாமதான் பயன்படுத்துறது இல்லை.

விடுங்க கழுதைய...(உன்னைய யாருய்யா இப்ப புடிச்சுகிட்டு நிக்கிறதுன்னு ஒரு குரல் வருதே...யாருப்பா இப்படி மானத்தை வாங்குறது.) நாம இப்ப அப்படியே ஒரு யு டர்ன் அடிச்சு நூறு மாசத்துக்கு மேல பின்னால போவோம்.

வெட்டுனா...ச்சீ...கட் பண்ணினா உள்ளாட்சி தேர்தல் நடக்குற சமயம். கல்லூரிகளில் இருக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களை பாதுகாப்பு (?!) பணியில ஈடுபடுத்துறதா சொன்னதும் நானும் போய் வரிசையில நின்னுட்டேன்.

ராணுவத்துக்கு கூட ஆள் எடுக்கும்போது இவ்வளவு நேரம் செலவழிச்சிருப்பாங்களான்னு தெரியல. முக்கா நாள் (காலை, மதியம் ரெண்டு வேளை சாப்பாடு கிடைக்கலைன்னா முக்கா நாள் பட்டினின்னுதானே அர்த்தம்.?) வயிறு காஞ்சு, சில போலீசாரோட ஒரு லாரியில ஏறிப் போனோம்.( கவனிக்க: நாங்களாதான் "ஏறிப்" போனோம். ஒரு 'ற்' நடுவுல சேர்ந்தா வேற அர்த்தம்.)

முப்பது கிலோ மீட்டர் தூரத்துல உள்ள ஒரு தாலுக்கா தலை நகரத்துல ராத்திரி பதினோரு மணிக்குப் போய் இறங்குனா, கடைத்தெருவுல எந்தக் கடையிலயும் லைட் எரியலை. அட, பவர் கட் எல்லாம் இல்லைங்க. முப்பத்து ஆறு மணி நேரத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போறதால சீக்கிரமே கடையை சாத்த சொல்லிட்டாங்களாம்.

இப்பவே...இல்ல...இல்ல...ரொம்ப நேரமாவே பசி கண்ணைக் கட்டுதேன்னு நிக்கிறோம். அப்ப என் நம்ம தோஸ்த் ஒருத்தன், கடைக்காரரிடம்"இங்க பாருப்பா...நாங்களும் தேர்தல் பாதுகாப்பு பணிக்குதான் வந்திருக்கோம். ஸ்பெஷல் அப்பாயின்மெண்ட்.

லோக்கல் ஸ்டேஷன்லேர்ந்து வந்தா நாங்க பேசிக்குறோம். இப்ப பசிக்கு எதாவது இருக்குறத தயார் பண்ணிக் கொடு." அப்படின்னு கம்பீரமா பேசிட்டான். வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க.

அவன் பிழைச்சதோட எங்க அம்பது பேருக்குல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சான். ஆனா கடைக்காரரும் பாவங்க. இத்தனை பேருக்கு தோசை இட்லின்னு ஊத்திக் கொடுக்க மாவு இருந்தாலும் சைடு டிஷ் (சட்னி சாம்பாருதான்) ரெடி பண்ண அவருகிட்ட போதுமான பொருள் இல்ல... பாதிப்பேர் வெறும் டிபனைத் தின்னும்போது தொண்டையை அடைச்சு தண்ணீர் குடிச்ச வேகத்தைப் பார்த்து கடைக்காரர், "சார்...நீங்க இட்லி, தோசைக்கு குடுக்குறத விட நாலுமடங்கு தண்ணீருக்காக தர்ற மாதிரி இருக்கும்"னு சொன்னார்.

இதை எல்லாம் காதுல வாங்குற கண்டிஷன்ல நாங்க இல்ல...பசிக்கொடுமைதாங்க...நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. இதுல களேபரத்துலயும் எங்க சகா ஒருத்தனைப் பார்த்து "காவிரியில ஏன் தண்ணி விட மாட்டெங்குறாங்கன்னு இப்பதான் புரியுது. எவ்வளவு திறந்து விட்டாலும் இவன் ஒருத்தனுக்கே போதாது...அதனால நாம போதும்னு சொல்லவே மாட்டோம். - இப்படியெல்லாம் ஜாலி கமெண்ட்.

அரை வயிறுதான் நிறைஞ்சுது. ஆனாலும் ரொம்பச் சரியா காசு கொடுத்துட்டுதாங்க கிளம்புனோம். (அப்ப கடைசி வரைக்கும் பதவி உயர்வே கிடையாதுன்னு சவுண்டு விடுறது  யாருப்பா)

எங்களுக்குத் தலைமையா இருந்த சில போலீசார் எங்கேயோ போய் திருப்தியா சாப்பிட்டுட்டு முகாம் அலுவலகத்துல உட்கார்ந்திருந்தாங்க. கொசுக்கடியில அவதிப்பட்டு பொழுதை ஓட்டிட்டு மறுநாள் எல்லாரும் ஆத்துல போய் குளிச்சோம்.(உண்மையாதாங்க...)

அன்னைக்கு சாயந்திரம் எல்லாரையும் வாக்குச்சாவடிக்கு அனுப்பி வெச்சாங்க. ஒரு ஏட்டு கூட எனக்கு பணியிடம் ஒதுக்கியிருந்தாங்க. மத்த பசங்க எல்லாம் லாரியில போய் இறங்க, நானும் அந்த ஏட்டும் வாக்குச்சாவடி அலுவலர்களோட ஜீப்புல போனோம். ஆமாங்க...லாரி போக முடியாத அளவுக்கு குறுகிய பாலம் நடுவுல இருந்து என் கவுரவத்தைக் காப்பாத்துனுச்சு.

காசிக்குப் போனாலும் சிலருக்கு கர்மா விடாதுன்னு சொல்லுவாங்க. நாங்க அந்த கிராமத்துக்குப் போனாலும் கொசு எங்களைத் தூங்க விடலைங்க. தொடர்ந்து ரெண்டாவது நாளா சிவராத்திரி (உங்களுக்குப் பிடிக்கலைன்னா ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டுன்னு எப்படி வேணுன்னாலும் முடிவு பண்ணிக்குங்க.)

மறுநாள் காலைக்கடமை எல்லாம் திறந்தவெளி புல்வெளிக் கழகம்தான்.

காலை ஏழு மணியிலேர்ந்து நல்ல கூட்டம். வரிசையை ஒழுங்குபடுத்தி உள்ள அனுப்பிகிட்டு இருந்தேன். வாக்குச் சாவடி அலுவலர்கள் கூட்டத்துக்கு நடுவுல சிக்கி அவதிப்படுற தொல்லை இல்லாம வேலையைக் கவனிச்சாங்க. 'ஸ்பெஷல் போலீஸ் ஆபிசர்' அப்படின்னு ஒரு ஒரு பேட்ஜ் குத்தியிருந்ததால வாக்காளர்கள் எல்லாம் மரியாதையோடதான் பார்த்தாங்க.

என்னுடன் இருந்த ஏட்டு,"தம்பி...இப்ப நீங்களும் ஒரு போலீஸ்தான். அந்த கம்பீரத்தோட நடந்துக்குங்க...பார்வையில ஒரு அலட்சியம் இருக்கணும். இல்லன்னா நம்மளை அலட்சியமா நினைச்சுடுவாங்க"ன்னு சொன்னார்.

அந்த வாக்குச் சாவடியை ஆண்கள், பெண்கள்னு பிரிக்கலை. பொதுச்சாவடியா இருந்ததால பந்தா பந்தான்னு சொல்லுவாங்களே... அப்படிதான் இருந்தேன். இப்பதான் டிரெய்னிங் முடிச்சுட்டு வந்திருப்பாங்க போலிருக்கு...ஆரம்பத்துல இல்லாத தொப்பை சில வருஷங்கள்ல எங்கேருந்துதான் வருதோன்னு பெண்கள் பேசிகிட்டு இருந்தாங்க.

இதுல என்ன கொடுமைன்னா அப்படி பேசின பெண்கள் யாருக்கும் சிம்ரன் இடுப்பு மாதிரி ஒண்ணும் இல்லை. (அந்த வருஷங்கள்ல சிம்ரன் ஜூரம்தான்) அவங்களே அவ்வளவு பெரிய தொப்பையை வெச்சுகிட்டு பேசினா கோபம் வருமா வராதா? அந்தப் பக்கம் பார்த்து முறைச்சேன்.
சில நொடிகள்தான். அப்புறம்  கோபம் மலையிறங்கிடுச்சு. ஏன்னுதானே கேட்குறீங்க... ஸ்லிம்மா இருந்த சில இளசுங்க "அய்யய்யோ... சார்(?!) முறைக்கிறாங்க...கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்கிளா" அப்படின்னு பதறிடுச்சுங்க. அதுக்கப்புறமும் முறைக்குற அளவுக்கு நாம என்ன உண்மையான ......................காரங்களா?

தேர்தலின் போது ஒரு வாக்குச் சாவடியிலேயே முதல் நாளிலேயே தொடங்கி, வாக்குப்பதிவு செய்யப்பட்ட சீட்டுக்கள் அடங்கிய பெட்டியை உரிய இடத்தில் ஒப்படைப்பது வரை இவ்வளவு வேலைகள் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வளவு பணிச்சுமை இருக்கும் என்று நான் வியப்படைந்தது உண்மை. நான் கல்லூரியில் படிக்கவில்லை என்றால் இந்த அனுபவம் கிடைத்திருக்கப் போவதே இல்லை.

இப்போது கணிணித் துறை மாணவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் எனக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

அந்த ஊரில் அக்காவும், தங்கையும்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள். இருவரின் கணவர்களும் அப்போது பிரபலமாக இருந்த மினி குவார்ட்டர்களை பதினைந்துநாளைக்கு முன்பே வாங்கி ஸ்டாக் வைத்துவிட்டார்கள். அதற்கும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு நான் நீங்க சொன்னா நீங்க நம்பவாப் போறீங்க?

என்னுடன் இருந்த ஏட்டுகிட்ட "சார்...நீங்க நேர்மையானவரா...இல்ல..."அப்படின்னு கேள்வியை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

அவர் கோபப்படலை. " தம்பி...கூடுதல் தகுதி இருந்தும் இருபது வருஷமா ஏட்டாத்தான் இருக்கேன். நீயே முடிவு பண்ணிக்க."ன்னு சொன்னார்.

ஒரே ஒரு நாள் தேர்தல் பாதுகாப்பு பணியில (?!) ஈடுபட்டாலும், நல்ல மனுஷனோட இருந்தேன்னு ஒரு திருப்தி இருக்குங்க.



































பல வருஷத்துக்கு முன்னால நடந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கட்டுரைக்கு 2009ல நடந்த வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான போட்டோக்களை ஏன் பதிவு பண்ணியிருக்கன்னுதானே கேட்குறீங்க?

வாடிப்பட்டியில நடக்குற கதையிலயே பாட்டுக்காக வாஷிங்டன் போய் பாடலுக்கு நடனமாடுவோம். இதுதான் தமிழ்நாட்டோட கலாச்சாரம். இப்ப சொல்லுங்க. நான் இந்தப் படங்களை வெச்சது தப்பா?

மச்சான் நீ சொல்லேன்...ண்ணா நீங்க சொல்லுங்களேன்...ம்மா...நீங்க சொல்லுங்களேன்.

நன்றி: ஓளிப்படங்கள் - தினமலர்

15 கருத்துகள்:

  1. என்னுடன் இருந்த ஏட்டுகிட்ட "சார்...நீங்க நேர்மையானவரா...இல்ல..."அப்படின்னு கேள்வியை பாதியிலேயே நிறுத்திட்டேன்.

    அவர் கோபப்படலை. " தம்பி...கூடுதல் தகுதி இருந்தும் இருபது வருஷமா ஏட்டாத்தான் இருக்கேன். நீயே முடிவு பண்ணிக்க."ன்னு சொன்னார். ..........பதிவு நல்லா இருக்குங்க. நகைச்சுவையுடன் நாட்டு நடப்பை சொல்லிக்கிட்டு வரும் போது, இதையும் சொல்லி நெகிழ வச்சிட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  2. கல்லூரிகளில் இருக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களை

    neenga college student nu nambrom athukunu ipdiya?

    பதிலளிநீக்கு
  3. விடுங்க கழுதைய...(உன்னைய யாருய்யா இப்ப புடிச்சுகிட்டு நிக்கிறதுன்னு ஒரு குரல் வருதே...யாருப்பா இப்படி மானத்தை வாங்குறது

    athu nan than sir

    பதிலளிநீக்கு
  4. அப்ப என் நம்ம தோஸ்த் ஒருத்தன்,

    ithula en or nama ethavathu onah edunga

    itha publish panavenam

    பதிலளிநீக்கு
  5. முப்பது கிலோ மீட்டர்

    30 kal

    correctah?

    பதிலளிநீக்கு
  6. முப்பது கிலோ மீட்டர்

    30 kal

    correctah?

    பதிலளிநீக்கு
  7. ஆத்துல போய் குளிச்சோம்.

    வருஷத்துக்கு ஒருவாட்டி தானே?

    பதிலளிநீக்கு
  8. அப்ப கடைசி வரைக்கும் பதவி உயர்வே கிடையாதுன்னு சவுண்டு விடுறது யாருப்பா)

    nan illango

    பதிலளிநீக்கு
  9. @ Chitra
    பதிவு உங்களை நெகிழ வைத்ததற்கு நான் எங்கள் கல்லூரிக்கு நன்றி சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. @ angel

    //விடுங்க கழுதைய...(உன்னைய யாருய்யா இப்ப புடிச்சுகிட்டு நிக்கிறதுன்னு ஒரு குரல் வருதே...யாருப்பா இப்படி மானத்தை வாங்குறது

    athu nan than sir//

    வாங்கியாச்சா. ரைட். விடு...

    //கல்லூரிகளில் இருக்கும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களை

    neenga college student nu nambrom athukunu ipdiya?//

    எல்லாம் ஒரு விளம்பரந்தான்...

    //முப்பது கிலோ மீட்டர்

    30 kal

    correctah?//

    அந்தக் கதையை தூய தமிழ்ல எழுத சொல்லியிருந்தாங்க. அதனால முடிஞ்ச அளவு தமிழ்த்தாயைக் கஷ்டப்படுத்திட்டேன்.

    //அப்ப என் நம்ம தோஸ்த் ஒருத்தன்,

    ithula en or nama ethavathu onah edunga

    itha publish panavenam//

    நீங்க தமிழ் டைப் பண்ணலியே தவிர நல்லா படிப்பீங்க போலிருக்கே. திருவிளையாடல் தருமி அளவுக்குதான் எனக்கு தமிழ் தெரியும்.

    ஆனாலும் தப்பைத் திருத்திக்கிறேன்.


    //அப்ப கடைசி வரைக்கும் பதவி உயர்வே கிடையாதுன்னு சவுண்டு விடுறது யாருப்பா)

    nan illango//

    அப்ப மனசாட்சி சொல்லியிருக்கும்.

    //ஆத்துல போய் குளிச்சோம்.

    வருஷத்துக்கு ஒருவாட்டி தானே?//

    அத நினைச்சு சந்தோஷப்படுறத விட்டுட்டு...

    பதிலளிநீக்கு
  11. ஒரு நாள் தேர்தல் பாதுகாப்பு பணியில (?!) ஈடுபட்டாலும், நல்ல மனுஷனோட இருந்தேன்னு ஒரு திருப்தி இருக்குங்க
    //
    அதாங்க வேணும். நல்ல மனுசங்க கூடவே இருக்கிறது நல்லது தானே.

    பதிலளிநீக்கு
  12. @ கடையம் ஆனந்த்

    ஒரு நாள் தேர்தல் பாதுகாப்பு பணியில (?!) ஈடுபட்டாலும், நல்ல மனுஷனோட இருந்தேன்னு ஒரு திருப்தி இருக்குங்க
    //
    அதாங்க வேணும். நல்ல மனுசங்க கூடவே இருக்கிறது நல்லது தானே.

    நம்பிக்கை இழக்குற பல நேரங்கள்ல இந்த மாதிரி நல்ல மனுஷங்களா நினைச்சுக்கிட்டுதாங்க ஆறுதல் அடையணும்.

    பதிலளிநீக்கு
  13. /தம்பி...கூடுதல் தகுதி இருந்தும் இருபது வருஷமா ஏட்டாத்தான் இருக்கேன். நீயே முடிவு பண்ணிக்க."/
    இதுதான் இன்றைய நிலை!

    பதிலளிநீக்கு
  14. கடினமாக உழைத்தாலும் நம்மை இருட்டடிப்பு செய்ய பலரும் உழைப்பார்கள். என்று பேராண்மை படத்துல ஜெயம் ரவி சாதனை செய்தும் அவருடைய மேல் அதிகாரிக்கு விருது வழங்குவதாக காட்சி அமைத்தது பற்றி சமீபத்தில் இயக்குனர் ஜனநாதன் விளக்கம் சொல்லி இருந்தார். இந்த விவரம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் புரிவதற்கு இத்தனை ஆண்டுகள்.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஹஹஹ. டோட்டல் டேமேஜா... இனிமே உஷாரா இருங்க... கமண்ட் மாடரெஷன் போடுங்க... என்னா அடிடிடி..:-)

    பதிலளிநீக்கு