Search This Blog

சனி, 5 டிசம்பர், 2009

முகங்கள் - எழுதத் தொடங்கிய காலத்தில் பரிசு பெற்றுத் தந்த சிறுகதை.



முதன் முதலாக எனக்கு பரிசு பெற்றுத்தந்த சிறுகதை 'முகங்கள்'.தினமலர் வாரமலர்  நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. ஆண்டு 2003. 


 வரதட்சணை காரணமாக மருமகள்கள் பற்றவைக்கும் ஸ்டவ் மட்டும் வெடிக்கும் அவலம் இன்னும் நம் நாட்டில் உண்டு. பல ஏழைப்பெண்கள் முதிர்கன்னிகளாகவே இருக்கும் அவலத்துக்கும் வரதட்சணை முக்கிய காரணம்.
 
ஆனால் வரதட்சணை வேண்டாம் என்று ஒரு ஆண் முன்வந்தால் அவனை சந்தேகத்துடன்தான் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்களே இப்படிப்பட்ட ஆண்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.


அவர்கள் அச்சத்துக்கும் காரணம் இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளும் நபர்கள் கூட வரதட்சணை வேண்டாம் என்று வலை வீசித்தான் மொத்தமாக சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள்.

சாலை விபத்து அதிகம் என்பதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா? நல்ல குணத்துடன் ஒருவர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய வரும்போது சரியான முறையில் அவர் பின்னணியை தெளிவாக விசாரித்து திருமணத்துக்கு சம்மதிக்க பெண்கள் முன் வரவேண்டும்.

அவர்கள் மீது சந்தேகம் இருக்கும்வரை வரதட்சணை பெருக்கத்துக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்வது தவறு என்பதுதான் என் கருத்து.

வரதட்சணை வேண்டாம் என்று இருக்கும் ஒருவன் சந்திக்கும் பிரச்சனை, அவனுக்கு சாதாரணமாக வரும் நோய் ஒன்று எப்படி திருமணத்தையே நிறுத்துகிறது, பெண்களை மட்டும் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்காமல் அவர்களில் சிலரும் நமக்கு வியப்பூட்டும்படி  இருப்பதும் உண்டு - இந்த விஷயங்கள் அனைத்தையும் சேர்த்து எழுதிய சிறுகதை - 'முகங்கள்'

1 கருத்து:

  1. அண்பு நண்பரே -

    உங்கள் படைப்பு அருமை!

    நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
    அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

    என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com/

    பதிலளிநீக்கு