ஒரு சில வருடங்களுக்கு முன்னால கல்கி பத்திரிகை நகைச்சுவைத்துணுக்கு போட்டி நடத்துனாங்க. ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு. அப்பதான் நானும் தமாசு எழுத முயற்சி செஞ்சேன். நாலு வரியில சிரிக்க வைக்கணும்...இதெல்லாம் பெரிய விஷயமான்னு இறங்கிப் பார்த்தா அப்புறம்தான் வில்லங்கமே புரியுது...
நம்மளோட நடவடிக்கையைப் பார்த்துட்டு வேணுன்னா முதுகுக்குப் பின்னால சிரிப்பாங்களே தவிர ஜோக் சொன்னா ஏண்டா கழுத்தறுக்குறன்னுதான் கேட்பாங்கன்னு புரிய பல மாசங்கள் ஆயிடுச்சு.
அப்படியும் தட்டுத் தடுமாறி ஆறு துணுக்கு பிரசுரமாயிடுச்சு. அதோட இந்த முயற்சியை விட்டுட்டேன்.(தமாசு தேர்வு செய்யுறதுல ஏதோ உள்குத்து இருக்குங்க...நமக்கு எழுத தெரியலன்னு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவோமா என்ன?)
1.சென்னை மாநகரத்தையே சைக்கோ கொலைகாரன் அலற விட்ட சமயத்துல எழுதுனது. ஆனந்த விகடனோட ஆதரவு.
2.எங்க அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வர்றதே தொலைக்காட்சித் தொடர்களால்தான். அந்த ஆத்திரத்தை இப்படி ஜோக் எழுதி தீர்த்துகிட்டேன். வேற வழி?.இது குமுதத்துல பிரசுரமானுச்சு.
3.போன வருஷம் எங்க பார்த்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்துச்சே...அப்ப தோணின துணுக்குதான் இது. இதுக்கும் ஆபத்பாந்தவன் ஆனந்த விகடன்தான்.
4,5,6. இது மூணுமே தேவி வார இதழ்ல வெளிவந்ததுதான். எழுத்துல சன்மானமா முதன் முதல்ல தேவி பத்திரிகையில இருந்துதான் நூறு ரூபாய் வாங்கினேன். அந்த வகையில நான் மறக்க முடியாத பத்திரிகைங்க.
நம்மளோட நடவடிக்கையைப் பார்த்துட்டு வேணுன்னா முதுகுக்குப் பின்னால சிரிப்பாங்களே தவிர ஜோக் சொன்னா ஏண்டா கழுத்தறுக்குறன்னுதான் கேட்பாங்கன்னு புரிய பல மாசங்கள் ஆயிடுச்சு.
அப்படியும் தட்டுத் தடுமாறி ஆறு துணுக்கு பிரசுரமாயிடுச்சு. அதோட இந்த முயற்சியை விட்டுட்டேன்.(தமாசு தேர்வு செய்யுறதுல ஏதோ உள்குத்து இருக்குங்க...நமக்கு எழுத தெரியலன்னு அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்குவோமா என்ன?)
1.சென்னை மாநகரத்தையே சைக்கோ கொலைகாரன் அலற விட்ட சமயத்துல எழுதுனது. ஆனந்த விகடனோட ஆதரவு.
2.எங்க அம்மாவுக்கும் எனக்கும் சண்டை வர்றதே தொலைக்காட்சித் தொடர்களால்தான். அந்த ஆத்திரத்தை இப்படி ஜோக் எழுதி தீர்த்துகிட்டேன். வேற வழி?.இது குமுதத்துல பிரசுரமானுச்சு.
3.போன வருஷம் எங்க பார்த்தாலும் மழை வெள்ளம் சூழ்ந்துச்சே...அப்ப தோணின துணுக்குதான் இது. இதுக்கும் ஆபத்பாந்தவன் ஆனந்த விகடன்தான்.
4,5,6. இது மூணுமே தேவி வார இதழ்ல வெளிவந்ததுதான். எழுத்துல சன்மானமா முதன் முதல்ல தேவி பத்திரிகையில இருந்துதான் நூறு ரூபாய் வாங்கினேன். அந்த வகையில நான் மறக்க முடியாத பத்திரிகைங்க.
இதை எல்லாம் படிச்சுட்டு அதெல்லாம் சரி...ஜோக் இருக்குன்னு சொன்னியே...அது எங்கன்னு மட்டும் கேட்டு மானத்தை வாங்கிடாதீங்க. இதுல மூணு ஜோக் இருநூத்தம்பது ரூபா பரிசு வாங்கி குடுத்துருக்குங்க...அதுக்க்காகவாச்சும் கொஞ்சம் சிரிச்சுடுங்கப்பா.
அப்புறம் ஒரு விஷயம். எல்லாம் வழக்கம் போலதான். தமாசுகளைப் படிக்க மேல இருக்குற படத்தை க்ளிக்குங்க...
நானும் தமாசு எழுத முயற்சி செஞ்சேன்.
பதிலளிநீக்குthamasa iruku
athula 2nd joke ku nan onu solava (nan eluthula) engeyo vasithathu
பதிலளிநீக்குaduthatha tv serial pskravanga veetla thoti katlam nu iruken