Search This Blog

வெள்ளி, 11 டிசம்பர், 2009

பரிசு



தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளரின் திருமணம் அந்த மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மாப்பிள்ளையின் சக ஊழியர்கள் எல்லாம் அக்கவுண்டண்ட் வினோத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"வினோத் சார் என்ன கிப்ட் வாங்கிட்டு வரப்போறேன்னு இதுவரை சொல்லவே மாட்டேன்னுட்டாரே... இப்பவும் மனுஷன் கையை வீசிட்டு வந்திருக்குறதைப் பார்த்தா மோதிரம்தான் எடுத்துட்டு வந்திருப்பார் போலத் தெரியுது." என்று ராஜாராமன் சக ஊழியர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"அவரோட கல்யாணத்துக்கு நாம எல்லாருமே தனித்தனியா நைட்லாம்ப் வாங்கிட்டுப் போனதும் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் வெளியிலேயே வரலைன்னு நினைக்குறேன்." என்று மற்றொருவர் சொன்னார்.

திருமணம் முடிந்து மற்ற சில சடங்குகள் முடியும் வரை வினோத், மணமக்களுக்கு எதையுமே பரிசளிக்கவில்லை.

"மதிய சாப்பாட்டுக்கு நேரமாச்சு...எந்த ஏற்பாடும் செய்யாம மண்டபத்தை காலி செய்யப்போறாங்களே.இவ்வளவு சிக்கனமா? " என்று சிலர் முகம் சுளித்தார்கள்.

அனைவரையும் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த பேருந்து போய் நின்ற இடம், ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம். அந்தக் குழந்தைகளுடன் மணமக்கள் உட்பட அனைவரும் உணவருந்தியபோது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் என்பதை உணர்ந்தார்கள்.

இந்த ஏற்பாடுகளைச் செய்தது வினோத் என்பது தெரியவும், இதுவும் ஒரு மதிப்பு மிக்க பரிசுதான் என்பது அனைவருக்கும் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக