Search This Blog

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ரூ.2500.00 பெற்ற சிறுகதை - நாளைய விழுதுகள்.


குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு பெற்றோர்தான் முதல் காரணம் என்று சொல்பவர்களில் நானும் ஒருவன். இல்லை...சமூகம்தான் காரணம் என்று மாறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருக்கலாம். அடுத்த முறை இதை நீங்கள் சொல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

'உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி இருக்கும்?'
- இது ஒரு புகழ் பெற்ற பொன்மொழி.

நானும் அதையேதான் கேட்கிறேன்...பெற்றோர்களுக்கே பிள்ளைகள் மீது அக்கறை இல்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன வந்தது?...பெரியவர்களின் பொறுப்பில்லாத்தனமே குழந்தைத் தொழிலாளர் உருவாக காரணம்.

வருமானம் குறைவு என்றாலும் மது, புகை உள்ளிட்ட சில தீய பழக்கங்களால்தான் பலரும் தங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர் உருவாவதற்கு முதல் விதை இந்த சூழ்நிலையில்தான் விழுகிறது.

இந்த தீய பழக்கங்கள் சில வியாதிகளுடன், வறுமை - சோம்பேறித்தனம் ஆகியவற்றையும் இலவச இணைப்பாகத் தந்துவிடுகிறது.

மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் 2006 ம் ஆண்டு மே மாதம் "குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் பெற்றோரின் பங்கு" என்ற தலைப்பு கொடுத்திருந்தார்கள்.

அதில் நான் எழுதி முதல் பரிசு ரூ.2500.00 பெற்ற சிறுகதைதான் நாளைய விழுதுகள்.

கதையை முழுவதுமாக படிக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக