Search This Blog

புதன், 16 டிசம்பர், 2009

ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்வதா? (பிப்ரவரி 2007)


மிகவும் திறமை வாய்ந்த நமது நிதியமைச்சர், புதிது புதிதாக உட்கார்ந்து யோசித்து நடுத்தர, ஏழை மக்களிடம்  சாமர்த்தியமாக மறைமுக வரியாகவே பெருமளவு வசூலித்துவிடுகிறார். ஆனால் பணக்காரர்களிடம் இது செல்லுபடியாவதில்லை. உதாரணத்திற்கு, கடந்த 2003 - 2004 ம் ஆண்டுவரை 1.19 லட்சம் கோடி ரூபாய் வருமான வரி பாக்கி இருந்தது. இதில் வசூலானது போக, மீதி 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரித்துறையால் வசூலிக்க முடியாது என்று கருதப்படுவதால், தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அது போக, அடுத்தடுத்து வரும் மூன்றாண்டுகளுக்கும் இந்த நிலை தொடர்ந்தால் பலனடையப் போவது யார்?

ஏழை மக்களை வெயிலில் வாட்டி பணக்காரர்கள் மீது தூசு படியாமல் ஏசி அறையில் பாதுகாப்பது போன்ற இந்த நிலை, இந்தியாவின் பொருளாதாரத்தை ஆபத்துக்குதான்

அழைத்துச் செல்லும். ஒரு பக்கம் ஏகப்பட்ட வரிச் சலுகைகள், இன்னொரு பக்கம் தள்ளுபடி அறிவிப்புகள். நாம் எங்கே போகிறோம்?

என்னப்பா, மூணு வருஷத்துக்கு முன்னால யோசிச்சதை எல்லாம் இப்ப எழுதுறன்னு கேட்காதீங்க. இதெல்லாம் நிரந்தரமான படிவம். வருஷத்தையும் தொகையையும் மாற்றிட்டா இந்த வருஷ ஸ்டேட்மெண்ட் தயார்.

வங்கிகளில் வராக்கடன் பயங்கரங்கள் வேறொரு பதிவில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக