என்ன பார்க்குறீங்க? தமிழகம் அதிரும் நூறாவது நாள் அப்படின்னு சினிமாவுக்கு விழா எடுத்ததெல்லாம் பொற்காலம்னு சொல்லணும். அதெல்லாம் ஒரு கனாக்காலம்னு சொல்ற மாதிரி ஆயிடுச்சு. இப்ப எல்லாம் வெற்றிகரமான நான்காவது காட்சின்னு போஸ்டர் ஓட்டுறாங்க. பி.ஆர்.ஓ கிட்ட கேட்டா திருட்டு டி.வி.டி வந்து பத்து நாள் கழித்து படம் இன்னைக்கு தான் ரிலீஸ் ஆனது. படம் அவ்வளவுதான்னு நினைச்சா அது யாரையும் கேட்காம நாலு ஷோ ஓடிடுச்சு. விஷயம் தெரிஞ்ச தயாரிப்பாளர் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டுல கிடக்குறதா சொல்றார்.
இன்னைக்கு உலகம் இப்படி இருக்கும்போது 30.11.2009 போன திங்கள் கிழமைதான் இளையபாரத்தை மெருகேத்தி எவ்வளவு பேர் வர்றாங்கன்னு கணக்கெடுக்க ஆரம்பிச்சேன். இந்த பதிவை தட்டச்சுற நேரம் வரை 1240 பேர் வந்திருந்தாங்க. பட், என் நேர்மை உங்களுக்கெல்லாம் பிடிக்கணுமே. அதுக்காக 240 ஐ தள்ளிட்டு ஆயிரத்தை மட்டும் கணக்குல எடுத்துகிட்டேன். (ரொம்ப நல்லவன்டா நீ...அப்படின்னு சொல்றது யாருங்கோ?)
எனக்கு நானே விழா நடத்தி நிலவரத்தை சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்குங்க.
முதல் காரணம், ரெட்டை ஜடை வயசு படத்துல கவுண்டமணி, ஒருத்தர் தூங்கும் போது மாலை போட்டு காசை நெற்றியில ஓட்டிட்டு போவார். இந்த காலத்துல நாம அப்படி அசந்துட்டோம்னா வெறும் மாலை போட்டா கூட பரவாயில்லையே. பயபுள்ளைங்க அப்படியே கொண்டு போய் சுடுகாட்டுல வெச்சு கொளுத்திட்டுல மறு வேலை பாக்குறானுங்க. அதுக்காகவாவது உள்ளேன் அய்யா சொல்ல வேண்டியது கட்டாயமாகுது.
ரெண்டாவது காரணம்: எங்க ஏரியாவுல சிலர் சேர்ந்து கோவில் கட்டி இருக்காங்க. அவங்க தன்னடக்கம் காரணமா பேரை வெளிப்படுத்திக்கல. இப்ப என்ன ஆச்சு தெரியுமா? சில வில்லங்க பார்ட்டிங்க வந்து நான் கட்டுன கோவில்னு சொல்லி உரிமை கொண்டாடுதுங்க...
உனக்கு ஏன் அக்கறைன்னு நீங்க கேட்குறது புரியுது. அந்த கோவிலை ஏற்கனவே கட்டுன வருஷம் இந்த வில்லங்க ஆசாமிங்க பிறக்கவே இல்லைங்க...அப்புறம் கோபம் வராம என்ன செய்யும்?
என் படைப்புக்கு நான் உரிமை கொண்டாடலைன்னா நிறைய பேர் அது என்னுதுன்னு சொல்ல வரிசையில நிக்கிறானுங்க. இதுதாங்க ஆயிரம் பேர் வந்ததை உங்களுக்கு அறிவிக்க காரணம்.
எனக்கு நானே விழா நடத்தி நிலவரத்தை சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்குங்க.
முதல் காரணம், ரெட்டை ஜடை வயசு படத்துல கவுண்டமணி, ஒருத்தர் தூங்கும் போது மாலை போட்டு காசை நெற்றியில ஓட்டிட்டு போவார். இந்த காலத்துல நாம அப்படி அசந்துட்டோம்னா வெறும் மாலை போட்டா கூட பரவாயில்லையே. பயபுள்ளைங்க அப்படியே கொண்டு போய் சுடுகாட்டுல வெச்சு கொளுத்திட்டுல மறு வேலை பாக்குறானுங்க. அதுக்காகவாவது உள்ளேன் அய்யா சொல்ல வேண்டியது கட்டாயமாகுது.
ரெண்டாவது காரணம்: எங்க ஏரியாவுல சிலர் சேர்ந்து கோவில் கட்டி இருக்காங்க. அவங்க தன்னடக்கம் காரணமா பேரை வெளிப்படுத்திக்கல. இப்ப என்ன ஆச்சு தெரியுமா? சில வில்லங்க பார்ட்டிங்க வந்து நான் கட்டுன கோவில்னு சொல்லி உரிமை கொண்டாடுதுங்க...
உனக்கு ஏன் அக்கறைன்னு நீங்க கேட்குறது புரியுது. அந்த கோவிலை ஏற்கனவே கட்டுன வருஷம் இந்த வில்லங்க ஆசாமிங்க பிறக்கவே இல்லைங்க...அப்புறம் கோபம் வராம என்ன செய்யும்?
என் படைப்புக்கு நான் உரிமை கொண்டாடலைன்னா நிறைய பேர் அது என்னுதுன்னு சொல்ல வரிசையில நிக்கிறானுங்க. இதுதாங்க ஆயிரம் பேர் வந்ததை உங்களுக்கு அறிவிக்க காரணம்.
வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்க :)
பதிலளிநீக்குPlease let me know to get alert for your articles
பதிலளிநீக்குMy email id "sivasenthilvel@gmail.com"
Thanks and regards
S. Senthil Velu
வாழ்த்துக்கள்:)!
பதிலளிநீக்கு//சுடுதண்ணி கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்க :)//
ஓ.கே பாஸ். நீங்களும் தொடர்ந்து நம்ப ஊட்டுக்கு வந்துட்டு போங்க.
//Senthil கூறியது...
Please let me know to get alert for your articles
My email id "sivasenthilvel@gmail.com"
Thanks and regards
S. Senthil Velu//
தங்கள் சித்தம் என் பாக்கியம்
//ராமலக்ஷ்மி கூறியது...
வாழ்த்துக்கள்:)!//
ரொம்ப நன்றிக்கா.