Search This Blog

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ரூ.1000.00 பரிசு பெற்ற விமர்சனக்கடிதம் - நன்றி : புதிய தலைமுறை வார இதழ் (19.11.2009)



இந்தியாவில் சாதனைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இங்கே பரவியிருக்கும் ஊழல், ஒழுங்கீனம், அலட்சியம் உள்ளிட்ட சில காரணிகள் நமது சாதனைகளின் பலனை முழுமையாக அனைவரையும் அனுபவிக்க விடாமல் செய்துவிடுகின்றன.

முக்கியமாக, லஞ்சத்தை எதிர்பார்த்து மக்களுக்குத் தேவையான ஆவணங்கள், சேவைகள் ஆகியவற்றை கிடைக்க விடாமலோ, தாமதப்படுத்துவதையோ பல அலுவலர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் ஏற்படும் காலதாமதம், விரயங்களுக்கு அஞ்சியே பலரும் லஞ்சம் கொடுத்துவருவது ஊரறிந்த ரகசியம்.

லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று அவ்வப்போது பலரும் சொல்கிறார்கள். புதிய தலைமுறையும் இதே அறிவுரையைச் சொன்னது...ஆனால் சொன்னதே தெரியாமல் சொல்லியிருக்கிறது.

நேர்மையாகச் செயல்படும்போது வரும் தடைகளையும், இன்னல்களையும் தகர்க்கச் சிறந்த வழி, தங்கள் நிறுவனத்திலேயே திறமையான வழக்கறிஞர்களை கொண்டு சட்டப்பிரிவை ஏற்படுத்திக்கொள்வதுதான் என சி.கே. ரங்கநாதன் கூறியிருப்பது மிகவும் சிறப்பான யோசனை.

நேரடியாக அறிவுரையைக் கேட்பதை விட அறிவுரையைப் பின்பற்றி சாதித்தவர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது என்னைப் போன்ற இளைய தலைமுறையின் நம்பிக்கை பல மடங்கு அதிகமாகும்.

- இதுதான் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற விமர்சனக்கடிதம்.

நிறுவனம் வைத்திருப்பவர்கள் வழக்கறிஞர்களை  வைத்து சட்டப்பிரிவை ஏற்படுத்திக் கொள்ளலாம். தனி மனிதர்கள், சாதிசான்று, வருமானசான்று பெற முயற்சிக்கும் சாமானியர்கள் எல்லாம் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பலம் என்ன என்று தவறு செய்யும் அதிகாரிகளுக்கு காட்டி விட வேண்டியதுதான். இதைப் பயன்படுத்தும் போது

நாம் கவனமாக இல்லை என்றால் அவ்வளவுதான். இந்த தகவலை வழங்க இத்தனை லட்ச ரூபாய் செலவாகும் என்று நாம் தெறித்து ஓடும்படி செய்துவிடுவார்கள்.



அவர்கள் நம்மை மிரள வைக்காத வகையில் இந்த சட்டத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டால் பிரச்சனையில்லை. கடலில் சிறு மீனாக இருந்தால் பெரியமீன் களுக்கு இரையாக வேண்டியதுதான். அவற்றிடமிருந்து தப்பிக்க திமிங்கிலமாக மாறுவதே சிறந்த வழி.

2 கருத்துகள்: