Search This Blog

சனி, 28 நவம்பர், 2009

அனுபவம்


"கயல்விழி...பல நேரங்கள்ல நீ செய்ய்யுறதெல்லாம் எதுக்குன்னே புரிய மாட்டெங்குது..."எனறார் பரசுராமன்.

"கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சு என்னங்க குழப்பம்?"

"நம்ம வீட்டுவேலை செய்யுற மாலினியோட பொண்ணு சாந்தினியோட படிப்புக்குரிய செலவை நீதான் பார்த்துக்குற... அதுக்காக ஞாயிற்றுக்கிழமை சாந்தினியும் அவ அம்மாவோட நம்ம வீட்டுக்கு வரணும்னு சொல்றதுதான் ஏன்னு எனக்குப் புரியலை.

அவ வீட்டுலேயே இருந்தா எதையாச்சும் படிப்பா...இல்லன்னா விளையாடுவா...அது ரெண்டையும் செய்ய விடாம இங்க வரவழைச்சுடுற,,,

அப்படி வர்றவ அவ அம்மாவுக்கு உதவியா இருந்தாலாவது ரெண்டு பேரும் சீக்கிரமா வீடு போய்ச் சேருவாங்க.

சாந்தினி எந்த வேலையும் செய்யாம அவ அம்மா நம்ம வீட்டு வேலை செய்யுறதை உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறதால யாருக்கு என்ன லாபம்? "என்றார்.

"குழந்தைத் தொழிலளிங்க நம்ம வீட்டால உருவாகாம தடுக்குறதுக்காகத்தான் சாந்தினியை எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொன்னேன். மாலினியோட புருஷன் குடிச்சுட்டு பொறுப்பில்லாம இருக்குறான். அதனால மாலினி எவ்வளவு கஷ்டப்படுறான்னு சாந்தினி உணரணும்.

அதுக்காகத்தான் ஞாயிற்றுக்கிழமையானா சாந்தினி அவ அம்மாவோட வரணும்னு சொன்னேன்." என்று கயல்விழி  கூறியதும்  அவளுடைய சமூக அக்கறையை நினைத்து பூரிப்படைந்தார் பரசுராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக